#பூந்தென்றலாய்_வந்தவளே எபி 2
“மாமா இல்லடி... அத்தான்னு சொல்லு... அவங்கப்பாவும் மாமா, அவனும் மாமாவா உனக்கு?”
“அத்தான்னு சொல்லுறதுலாம் டூ ஓல்ட் ஃபேஷன்... என்னைப் பாத்தா அந்தக் காலத்து சரோஜாதேவி சாவித்திரி மாதிரி தெரியுதாம்மா உனக்கு? அத்தான்னு கூப்புடணுமாம்ல... உவ்வேக்” என்றாள் ராதா.
அவளது ‘உவ்வேக்’கில் மாதவன் திரும்பிப் பார்க்கவும்
“அது உங்களுக்குச் சொன்ன உவ்வேக் இல்லை மாமா... அந்த அத்தான்ங்கிற வார்த்தைக்குச் சொன்னது... நீங்க வேலைய பாருங்க” என்றாள் அவள்.
அதற்குள் உள்ளே இருந்து “உன்னைய போய் சரோஜாதேவி சாவித்திரி கூட கம்பேர் பண்ணுவேனாடி? அவங்க மூக்கும் முழியுமா எவ்ளோ அழகா இருப்பாங்க... நான் பெத்தது பொண்ணா குரங்கானு இப்ப வரைக்கும் எனக்கே சந்தேகமா இருக்கு... வாலு ஒன்னு தான் இல்லை” என்று பதிலடி வந்தது கனகதாரணியிடமிருந்து.
ராதா “க்ரேட் இன்சல்ட்” என்று வாய்க்குள் முணுமுணுக்க மாதவனிடமிருந்து நமட்டுச்சிரிப்பு வெளிப்பட்டது.
உடனே அவனை முறைத்தாள் ராதா.
“இதுக்கு மட்டும் கத்துதா இந்தப் பல்லி?” என்று மைண்ட் வாய்சில் மட்டும் கேட்டுக்கொண்டாள், எல்லாம் அவனது முறைப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தான்.
இத்தனை களேபரங்களுக்கு இடையே ராதாவின் முதுகலைப்படிப்பிற்கான விண்ணப்பமும் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது.
“செலக்டான ஸ்டூடண்ட்ஸ் லிஸ்டை சைட்லயே பாத்துக்கலாம்... ஃபீசும் ஆன்லைன்லயே கட்டிட்டோம்னா காலேஜ் திறக்குறப்ப அங்க போனா போதும்”
அவளிடம் கூறிய மாதவன் சமையலறையை நோக்கி செல்ல அவனை ராதாவும் தொடர்ந்தாள்.
கனகதாரணி மகளுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று வினவினார் மாதவனிடம்.
“நல்ல மார்க் இருக்கு அத்தை... அதனால சீட் கிடைக்கிறதுல பிரச்சனை இருக்காது... நீங்க யோசிக்காம யூனிஃபார்முக்குத் துணி எடுத்து தைக்க குடுத்துடுங்க” என்றான் மாதவன்.
கனகதாரணி சந்தோசத்தில் தலையசைத்தபோது “என்னது யூனிஃபார்மா?” என ராதாவின் அதிர்ந்த குரல் கேட்டது.
“ஆமா... ஏன் அங்க யூனிஃபார்ம் போடணும்னு உனக்குத் தெரியாதா?”
சாதாரணமாக கேட்டுவிட்டு மெஸ்சுக்குக் கிளம்ப தயாரானான் மாதவன்.
சீருடை அணிந்து கல்லூரிக்குச் செல்வது தனக்கு இழைக்கப்படும் அநீதி எனும் அளவுக்கு ராதா கனகதாரணியிடம் வாதிட ஆரம்பிக்க அதை கேட்டு சிரித்தபடியே தனது அறைக்குள் சென்றான். https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பூந்தென்றல்-2.5668/ #நித்யாமாரியப்பன்
#அவள்ஒருராகமாலிகை epi 27
சந்திரிகாவின் தோற்றத்தில் திருப்தியுற்றவன் ரிசார்ட்டிலிருந்து காரைக் கிளப்பி ஜங்டுங்சாவை நோக்கி செலுத்தினான்.
செல்லும் வழியெங்கும் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
“இந்த வருசம் செர்ரி ப்ளாசம் கொஞ்சம் ஏர்லியரா ஆரம்பிச்சிடுச்சு”
“இதெல்லாம் நீங்க ரசிப்பிங்களா? ஆச்சரியமா இருக்கு”
“ஏன் நான் ரசிக்கக்கூடாதா?”
“இல்ல… செர்ரி ப்ளாசமை ஜப்பானியர்கள் தானே கொண்டாடுவாங்க… அதான் கேட்டேன்”
“கொரியா முழுக்க ஜப்பானோட காலனி ஆதிக்கத்துக்குக் கீழ வந்தப்ப அவங்க கொரிய பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா சிதைச்சு ஜப்பானோட கலாச்சாரத்தை புகுத்த ஆரம்பிச்சாங்க… அதோட ஆரம்பமா கொரியாவுல முக்கியமான அரண்மனைகள்ல செர்ரி மரங்களை வளர்த்தாங்க… ஆரம்பத்துல செர்ரி ப்ளாசமை கொரியர்கள் ‘பிட்டர் ஸ்வீட் மொமண்ட்’டா கடந்தாலும் காலப்போக்குல அதை தூய்மை அழகோட சின்னமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க… சௌத் கொரியால செர்ரி ப்ளாசம் ஃபெஸ்டிவலை அந்தந்த பிராந்தியங்கள்ல ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க… எனக்குச் செர்ரி ப்ளாசம் வந்தாலே என் அம்மாவோட ஞாபகம் வந்துடும்”
எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவன், அதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கறாராகப் பேசுபவன் அன்று மனம் விட்டுப் பேசுவதே சந்திரிகாவுக்கு ஆச்சரியம். அதிலும் அவனது அன்னையைப் பற்றி சொன்னதும் கொஞ்சம் மனம் இளகியது அவளுக்கு.
“உங்க அம்மா எங்க இருக்காங்க?” மெதுவாக வினவினாள்.
“வூசொங் யூனிவர்சிட்டில கொரியன் லாங்வேஜ் செண்டர்ல ஒர்க் பண்ணுனாங்க”
“பண்ணுனாங்க மீன்ஸ்….”
“ஷீ இஸ் நோ மோர் நவ்”
சந்திரிகா அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“அப்பிடி பாக்காத… எனக்குப் பிடிக்கல”
அடுத்த நொடியே அவள் தன்னைத் தவறாக எண்ணிவிடுவாளோ என விளக்கமளிக்க ஆரம்பித்தான்.
“நான் சின்ன வயசுல இருந்து இப்பிடியே வளர்ந்துட்டேன்… யாரும் என்னை பரிதாபமா பாத்தா பிடிக்காது… சாரி” https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-27.5653/ #நித்யாமாரியப்பன்
#மாயமித்ரா எபி 26
தேள் கொடுக்கு நாக்கால் சந்திரிகாவைப் பற்றி கணவன் மோசமாகப் பேசியதில் சரிதாவுக்கே சங்கடமாகிவிட்டது. என்ன தான் ஆண்பிள்ளையை உயர்வாக நினைக்கும் தாயாக இருந்தாலும் மகள் தனிமரமாக நிற்பாளென மகன் சொன்னதைக் கேட்டதும் சாந்தமதியின் மனம் இரணமாகிப்போனது. அதை அவரது முகமாற்றத்தில் கண்டுகொண்டாள் சரிதா. மாமியார் மீது பரிதாபம் கொண்டவள் கணவனை அதட்டினாள்.
“சர்வேஷ் வேண்டாம்… அப்பிடிலாம் பேசாத”
“ஏன் பேசக்கூடாது பேபி? நமக்குக் குழந்தை இல்லனு எவ்ளோ கஷ்டப்படுறோம்? இவங்க மூனு பேரும் சொகுசா இருக்காங்க… மனசுல கொஞ்சம் ஈரம் இருந்துச்சுனா நமக்குப் பணம் குடுத்து உதவுவாங்க… இவங்களுக்குத் தான் மனசே இல்லையே”
“ப்ச்! என் யூடியூப் வருமானம் உன் சம்பளத்தை வச்சு சமாளிக்கலாம் சர்வேஷ்”
“எல்லாத்தையும் ட்ரீட்மெண்டுக்கே செலவளிச்சிட்டா எனக்குனு எதுடி மிஞ்சும்? நான் லொட்டு லொட்டுனு வேலை பாத்து சம்பாதிக்கிறதால எனக்கு என்னடி யூஸ்? ஒரு பார்ட்டி, பப்னு போக முடியாது… வீக்கெண்ட்ல அவுட்டிங், சினிமானு எதுவுமே இல்லாத வாழ்க்கைலாம் ஒரு வாழ்க்கையா? உங்க யாராலயும் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல”
சர்வேஷின் சுயரூபம் இப்போது தான் வெளிப்பட்டது. அவனது சுயநலமான மனப்பாங்கில் அவன் மட்டுமே அவனுக்கு முக்கியம். தனது சந்தோசம், தனது பணம், தனது சௌகரியம் மட்டுமே அவனுக்கு பெரியது.
மனைவியே ஆனாலும் தனக்காக கூட அவன் யோசிக்கவில்லை என்பதை அறிந்ததும் சரிதா அதிர்ந்தே போய்விட்டாள். இவனை மணமுடித்து தவறு செய்துவிட்டோமோ என்று தாமதமாக ஞானோதயம் பிறந்தது.
கோபத்துடன் அவனை முறைத்தாள்.
“என்னடா ஓவரா பேசுற? என்னமோ குழந்தை பிறந்தா அது எனக்கு மட்டும் தான் குழந்தைங்கிற மாதிரி பேசுற… சீ! நீ இவ்ளோ செல்ஃபிஷாடா? காசு காசுனு ஏன் அலையுற? நீ நரேஷ் கூட சேர்ந்து செஞ்ச கேவலமான காரியத்துக்கு அப்புறமும் சந்து உன்னையும் என்னையும் இந்த வீட்டுல தங்க வச்சிருக்காடா… உன் சம்பளத்துல இருந்து ஒரு ரூபா நீ இந்த வீட்டுக்காக செலவளிச்சிருக்கியா? இந்த வீட்டை விட்டு வெளியே போய் வாடகைக்கு இன்னொரு வீட்டுல இருந்து பாரு… மாசமாசம் எவ்ளோ செலவாகும்னு உனக்குத் தெரியும்… உன்னால பெத்த அம்மாக்கு மெடிக்கல் செலவு பண்ணமுடியாது, கட்டுன பொண்டாட்டிக்கு ட்ரீட்மெண்டுக்குச் செலவு பண்ணமுடியாது… அப்ப என்ன தான் பண்ண முடியும் உன்னால? உன் பணத்தை வச்சு சொகுசா நீ மட்டும் வாழணும்… இதே மாதிரி சந்திரிகா யோசிச்சிருந்தா நீயோ நானோ இவ்ளோ சொகுசா வாழ முடியுமாடா? உன்னைக் கல்யாணம் பண்ணுனதுக்கு முதல் தடவையா வெக்கப்படுறேன்.. நீ எனக்காக பத்து பைசா செலவளிக்கவேண்டாம்… இப்ப இருந்து உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”
வெறுப்போடு சொன்னவள் சாந்தமதியைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டாள்.