• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💗7 Years of காவியத்தலைவன்_ பொறாமையால் அழிந்த மனிதனின் கதை😎

Nithya Mariappan

✍️
Writer
திரைப்படம் : காவியத்தலைவன்
இயக்குனர் : வசந்தபாலன்
வெளியான வருடம் : 2014


917yCYWyMOL._SS500_.jpg


என்னம்மா சினிமாவுக்குலாம் ரைட்டப்பானு வாசிக்கிற நீங்க யோசிக்கலாம் மக்களே! சில திரைப்படங்கள் பாடமாவும் மாறும்ங்கிறதுக்கு 'காவியத்தலைவன்' ஒரு சிறந்த உதாரணம்!

நாடக கம்பெனிகள் செழித்திருந்த கால கட்டத்தை நம்ம கண்ணு முன்னால கொண்டு வந்த படம் இது. கதாபாத்திரங்கள் நம்மளை அந்தக் காலக்கட்டத்துக்கே கூட்டிட்டு போயிருப்பாங்க.

கதைக்கரு என்னவோ சாதாரணமானது தான். ஒரே இடத்துல வளர்ற ரெண்டு கலைஞர்களில் ஒருத்தனுக்குக் கிடைக்கிற புகழ் இன்னொருத்தனை பொறாமை வலைக்குள்ள தள்ளுறதால அவன் எவ்வளவு வன்மத்தோட செயல்படுறான், கடைசில அவனுக்கு என்ன முடிவு கிடைக்குதுங்கிறதே இந்தப் படத்தோட கதை.

சிவதாஸ் சாமிகள் நடத்துற நாடக ட்ரூப்ல காளியும் கோமதியும் ஒன்னாவே வளர்றாங்க. காளிக்கு நல்லா பாட வரும். கோமதியும் நடிப்புல சளைச்சவன் இல்ல. ஒரு கட்டத்துல நாடக கம்பெனில ராஜபார்ட் வேஷம் போடுறவர் இல்லாம போனதால சிவதாஸ் சாமிகள் காளி, கோமதி ரெண்டு பேர்ல ஒருத்தரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படுது. அவரால காளி தேர்ந்தெடுக்கப்படுறான். இது கோமதிய கோவப்படுத்துது. அடுத்தடுத்து காளியோட வளர்ச்சிய பாத்து பொறாமைப்படுற கோமதி காளியும் ஜமீன் இளவரசியும் காதலிக்கிறத சிவதாஸ் சாமிகள் கிட்ட போட்டு குடுக்குறான். இதனால கோவப்பட்ட சாமிகள் காளிய சபிச்சிடுறார்.

குருபக்தி நிறைஞ்ச காளிக்கு சாமிகளோட கோவம் வருத்தத்தை உண்டாக்குது. அவர் கிட்ட மன்னிப்பு கேட்டவன் கிட்ட அவரும் இனிமே இளவரசிய மறந்துடணும்னு சத்தியம் வாங்கிடுறாரு. இது எல்லாத்துக்கும் காரணமான கோமதி நாடக கம்பெனில காளியோட இடத்தை பிடிச்சிடுறான்.

அதே நாடக கம்பெனில புதுசா சேருற வடிவு மேல கோமதிக்கு காதல் வருது. ஆனா அவளுக்கு காளிய தான் பிடிக்கும். இப்பிடியே போயிட்டிருக்கப்ப ஒரு நாள் இளவரசி தற்கொலை பண்ணிடுவா. அவ சாகுறப்ப காளியோட குழந்தைய சுமந்துட்டு தான் இறந்திருப்பா. இது தெரிஞ்சதும் காளி துக்கம் தாளாம சாமிகளை சபிச்சிடுவான். அவன் சாபமும் வேலை செஞ்சு சாமிகள் கை கால் வராம படுக்கைல விழுந்துடுவார்.

இதையெல்லாம் பயன்படுத்திக்கிட்ட கோமதி நாடக கம்பெனிய தன் வசப்படுத்திக்கிட்டு காளிய துரத்தி விட்டுருவான். வெளிநாடுகளுக்குலாம் போய் நாடகம் போட்டு பெரிய ராஜபார்ட் ஆகிடுவான். காளிய ஜெயிச்சிட்டோம்ங்கிற மமதைல இருக்குறவனுக்கு வடிவோட காதல் மட்டும் கிடைக்கவே கிடைக்காது.

ஒரு நாள் அவனுக்கு முடியாம போகறப்ப வேற வழியில்லாம நாடகத்துல ராஜபார்ட் கேரக்டரை காளிக்கு குடுப்பான். இத்தனை நாள் குடிகாரனா சுத்திட்டிருந்த காளி தனக்கு கிடைச்ச வாய்ப்பை சிறப்பா பயன்படுத்திப்பான். அந்த நாடகம் எல்லாரலயும் பாராட்டப்படும். தொடர்ந்து கோமதியோட உடல்நிலை சரியாகுற வரைக்கும் காளியே எல்லா நாடகத்துலயும் ராஜபார்ட் வேஷம் போடுவான். மறுபடியும் அவனுக்குப் பேர் புகழ் வரும். அதை பாத்து பொறாமைப்படுற கோமதி காளிக்கு விடுதலை போராட்டத்துல ஆர்வம் இருக்குறத கண்டுபிடிச்சு பிரிட்டிஷ் ஆட்களுக்கு போட்டுக் குடுத்துடுவான். அவங்க காளிய அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுருவாங்க. அங்க விடுதலைபோராட்டக்காரங்களோட ஃப்ரெண்ட்ஷிப் காளிக்கு கிடைக்கும்.

ஜெயிலுக்கு அனுப்பிட்டு அவனே வந்து ஜாமீனும் எடுப்பான் கோமதி. வெளிய வந்த காளி நாடகம் வழியா விடுதலை போராட்டத்த மக்கள் மத்தியில கொண்டு போய் சேர்ப்பான். அவனோட நாடக ட்ரூப்ல வடிவும் சேர்ந்துடுவா. அவங்களோட விடுதலை போராட்டம் கான்செப்ட் நிறைஞ்ச புதுமையான நாடகங்கள் மக்களை கவர ஆரம்பிச்சிடும். அதனால கோமதியோட பழங்கால நாடகங்கள் சரியா ஓடாம அவன் கம்பெனிய மூடுற நிலமை வந்துடும்.

அப்பவும் காளி தன்னோட ட்ரூப்ல அவனை சேர்த்து ராஜபார்ட் வேஷம் நீங்களே போடுங்கண்ணேனு சொல்லுவான். கோமதி வெளிய நடிச்சாலும் மனசுக்குள்ள இன்னும் அவன் மேல பொறாமையோட தான் இருப்பான். வடிவும் காளியும் காதலிக்கிறது வேற அவனோட பொறாமைய இன்னும் தூண்டிடும்.

அதனால சுதந்திர போராட்ட கான்செப்ட் நாடகம் ஒன்னு போடுறப்ப பிரிட்டிஷ்காரங்க வந்துடுவாங்க. காளி, கோமதி, வடிவு மூனு பேரும் தப்பிச்சு ஓடுவாங்க. வடிவை பாதுகாப்பான இடத்துல வச்சிட்டு கோமதிய அவளோட இருக்கும்படி சொல்லிட்டு ஓடுவான் காளி.

அப்ப கோமதி காளிய சுட்டுடுவான். காளிக்கு அவனோட சுயரூபம் அப்ப தான் தெரியும். கோமதி தனக்கு கிடைக்க வேண்டிய ராஜபார்ட் கேரக்டரை சாமிகள் அவனுக்குக் குடுத்ததுல ஆரம்பிச்சு வடிவோட காதல் வரைக்கும் சொல்லுவான். எல்லாமே காளிக்கு கிடைச்சதால அவனுக்கு கோபம்னு சொல்லி தன்னோட பொறாமைய நியாயப்படுத்த பார்ப்பான்.

ஆனா காளிக்கு முன்னாடியே கோமதியோட பொறாமை தெரிஞ்சிருக்கும். இளவரசியும் காளியும் காதலிக்கிறத அவன் கோமதிய தவிர வேற யாருக்கும் சொல்லிருக்க மாட்டான். சாமிகள் கிட்ட போட்டுக் குடுத்தது கோமதி தான்னு அவனுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும். அவனை ஜெயிலுக்கு அனுப்புனதும் கோமதி தான்னு காளிக்கு தெரியும்.

இதெல்லாம் தெரிஞ்சும் கோமதிய அவன் மதிக்க காரணம் அவன் கோமதிய தன்னோட அண்ணனா நினைச்சது தான். இந்த உண்மை கோமதியோட வன்மம் பொறாமைய துடைச்சிடும். அவன் மனசு மாறிடுவான்.

தான் கூட இருந்தவனோட வளர்ச்சிய பாத்து உண்டான பொறாமையால இவ்ளோ கேவலமான காரியத்த பண்ணிருக்கோம்னு வருத்தப்பட்டு சாகப்போவான். ஆனா காளி தன்னை சுடுனு கோமதி கிட்ட சண்டை போடுவான். அந்தச் சண்டைல துப்பாக்கி தானா வெடிச்சு காளி செத்துடுவான். மறுநாள் காளியோட இறுதி சடங்கு நடக்குறப்ப தான் வடிவு காளியோட குழந்தைய சுமக்குறத சொல்லுவா.

கோமதி காளியோட அஸ்திய கங்கைல கரைக்க எடுத்துட்டுப் போனவன் அஸ்தியோட சேர்ந்து தானும் கங்கைல மூழ்கிடுவான். இதோட எண்ட் கார்ட் போட்டுருவாங்க.

காளியா சித்தார்த் இயல்பான நடிப்பை குடுத்திருப்பார். பொறாமையும் கோபமும் கொண்ட வில்லன் கோமதியா ப்ரித்விராஜ் பாக்குற நம்மளை காண்டாக்குவார். இளவரசி கேரக்டரை விட வடிவா நடிச்ச வேதிகா மனசுல நிப்பாங்க.

ரஹ்மான் மியூசிக்ல 'யாருமில்லா தனி அரங்கில்' பாட்டு செமய்யா இருக்கும். ஷார்ட்டா சொல்லணும்னா an one time watchable periodic tragic drama🤗 பொறாமை ஒரு மனுசனை எவ்ளோ வன்மம் உள்ளவனா மாத்தும்ங்கிறத அழகா சொல்லுற இந்த மூவி என்னோட ஆல் டைம் ஃபேவரைட்ல ஒன்னு!​
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom