• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அருணாகதிரின் நெற்காட்டு ராஜகுமாரி

selvipandiyan

Active member
Member
#கதை_விமர்சனம்
அருணாகதிரின் நெற்காட்டு ராஜகுமாரி.
இது இவங்களின் முதல் கதை.
படிச்சா அப்படி இருக்காது.தேர்ந்த எழுத்தாளர் மாதிரி எழுதியிருப்பாங்க.சஸ்பென்ஸ் திரில்லர் கதை.

வேணி சென்னையில் வேலை செய்பவள்.அஷோக் அதே ஆபீஸில் வேலை பார்ப்பான்.வேணி யாரையும் நெருங்குவதும் இல்லை,யாருடனும் விரோதமும் இல்லை.தானுண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பவள்.அஷோக்கும் அப்படியே.இருவரும் ஒருவரை ஒருவர் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல காதலில் விழுவார்கள்.
வேணியின் வாழ்வில் சில மர்மங்கள்.கோர்ட்டுக்கு ஏன் செல்கிறாள்?அவள் சித்தப்பா பெரிய பணக்காரரா?கிராமத்தில் செல்வாக்குடன் இருப்பவள் ஏன் தன்னை மறைத்து வாழ்கிறாள்?எதற்கு கேஸ் நடக்கிறது?இப்படி கதையில் பல முடிச்சுகள்.கதையில் என்னை கவர்ந்த விஷயங்கள்...முதலில் அந்த கிராமம்,அந்த வாய்க்கால் ,நாய்,வாய்க்காலில் கிளாம்புகள்,கன்றுக்குட்டி பிறப்பது அதை யாரோ கொல்வது,கோனாரின் மரணம்,ரஞ்சித்தின் பேராசை இப்படி நிறைய மர்மங்கள்!
ஆபீஸில் அந்த நடனப்போட்டி,அவளை மட்டம் தட்டுபவர்கள் வாய் பிளந்து பார்ப்பது,அஷோக்கின் காதல் இவையெல்லாம் நம்மை கதைக்குள் பிடித்து வைக்கும் இடங்கள்.வேணியின் தைரியமும் திட்டமிடலும் ராஜகுமாரி போன்ற அவளின் கம்பீரமும் அழகு.கண் முன் விரியும் அந்த கிராமமும் அந்த வீடும் வாய்க்காலும் வயல்வெளிகளும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.தலைப்புக்கு ஏற்ற கதை!
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom