#சுருதியோடுலயம்சேரவே எபி 5
வித்யூத் விஸ்மயாவைக் கிண்டலாய் பார்த்தபடியே “நாங்களும் சஜனோட மேரேஜுக்குத் தான் போறோம் செலிப்ரிட்டி போட்டோகிராஃபர் மேடம்” என்கவும் அவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“அச்சோ!”
ஒரு கண்ணை மூடி ஒற்றைக்கரத்தால் மற்றொரு கண்ணால் அவனைப் பார்த்தவள் ‘இவன் என்று தெரியாமல் நேற்று அவ்வளவு பில்டப்பாக பேசிவிட்டோமே’ என நாணவும் விஷாகா அவளது கையைப் பிடித்து தங்களது இருக்கைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கவும் சரியாக இருந்தது.
“எவ்ளோ க்யூட்டா இருக்கு இந்தப் பொண்ணோட வெக்கம்?” என்ற வித்யூத்தின் ரசனை விஷாகாவின் இச்செயலால் ப்ரேக் போட்டது போல நின்றது.
விஸ்மயா அவசரமாக அவளது கையை உதறியவள் “சார் உங்களை நேர்ல மீட் பண்ணுனா இதை கேக்கணும்னு நினைச்சேன்… ஃபிலிம் ஃபேர் அவார்ட் போட்டோஷூட் அன்னைக்கு நான் போட்டுட்டு வந்த ப்ரேஸ்லெட் காணாம போயிடுச்சு... அது விபூவோடது… இவ அன்னைக்கு என்னலாம் சொல்லி திட்டுனா தெரியுமா?” என்று அப்பாவியாய் கூற வித்யூத் “அப்பிடியா? த்சூ த்சூ! தொலைஞ்சிடுச்சா? ஐயோ பாவம் நீங்க” என்றான் ஒன்றும் அறியாதவனைப் போல.
விபின் மீண்டும் நண்பனின் நடிப்பு திறமையைப் பார்த்து ‘அடேய் போதும்டா, இங்க என்ன ஆஸ்காரும் கோல்டன் க்ளோபுமா குடுக்குறாங்க?’ என்று மைண்ட்வாய்சில் கடுப்புற்றான்.
“ரொம்ப பாவம் சார்… எங்க மூனு பேர்ல நான் ஒருத்தி தான் அப்பாவி”
இப்போது விபாஷினியும் விஷாகாவும் அதிர்ந்தனர்.
“நீ ஒன்னும் அப்பாவி கிடையாது… அடப்பாவினு சொல்லுற மாதிரி எல்லா காரியத்தையும் பண்ணுறவ”
விஷாகா துடுக்காகப் பேசி மானத்தை வாங்கவும் விஸ்மயா அவசரமாக அவளது வாயைப் பொத்தினாள்.
“சஜன் சாரோட மேரேஜ்ல என் அக்கா தான் வெட்டிங் ப்ளானர்… எல்லாம் நல்லபடியா முடியணுமேங்கிற டென்சன்ல உளறுறா” என்றாள் விஸ்மயா.
மேலும் விஷாகா ஏதும் பேசும் முன்னர் சுதாரித்தவள் “குமரகம் லேக் ரிசார்ட்ல மீட் பண்ணுவோம் சார்… பை” என்று இருவரிடமிருந்தும் அவசரமாக விடைபெற்று தமக்கை மற்றும் தங்கையை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
அவள் அங்கிருந்து போனதும் மழையடித்து ஓய்ந்தது போல இருந்தது.
“ஏன்டா அந்தப் பொண்ணு கிட்ட ஒன்னும் தெரியாதது மாதிரி நடிச்ச?”
நண்பனிடம் கேட்டான் விபின்.
“எல்லாத்தையும் ஓப்பனா சொன்னா என்ன கிக் இருக்கு விபூ? ஒன் வீக் அவ என் கண் பார்வைல தானே இருக்கப்போறா… மெதுவா சொல்லிக்கலாம்… பை த வே, ஷீ இஸ் குயிட் இன்ட்ரஸ்டிங்”
“எதே? பேச ஆரம்பிச்சா சைனா வால் மாதிரி நிறுத்தாம பேசுது… அந்தப் பொண்ணு உனக்கு இன்ட்ரெஸ்டிங்கா? டேய் உன்னை மாதிரி பசங்க இருக்குறதால தான்டா ஹாசினி டைப் பொண்ணுங்களை தான் பசங்களுக்குப் பிடிக்குதுங்கிற தப்பான கருத்து சொசைட்டில உலா வருது… பொண்ணுனா அவ கூட வந்தாளே அவளோட அக்கா, அந்தப் பொண்ணு மாதிரி இருக்கணும்… ப்பா! என்னா ஃபயரு கண்ணுல!”
விபின் விஷாகாவைப் பற்றி சொல்லி சிலாகிக்கவும் வித்யூத் நண்பனைக் கேலியாகப் பார்த்தான்.
“எப்ப வெடிக்கும்னு தெரியாத புஸ்வாணம் மாதிரி புஸ்புஸுனு மூச்சு விட்டுட்டு நின்னா தான் சாருக்குப் பிடிக்கும் போல… எனக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்குற மத்தாப்பூ தான்பா பிடிக்கும்” என்றான் வித்யூத்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/
#நித்யாமாரியப்பன்
வித்யூத் விஸ்மயாவைக் கிண்டலாய் பார்த்தபடியே “நாங்களும் சஜனோட மேரேஜுக்குத் தான் போறோம் செலிப்ரிட்டி போட்டோகிராஃபர் மேடம்” என்கவும் அவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“அச்சோ!”
ஒரு கண்ணை மூடி ஒற்றைக்கரத்தால் மற்றொரு கண்ணால் அவனைப் பார்த்தவள் ‘இவன் என்று தெரியாமல் நேற்று அவ்வளவு பில்டப்பாக பேசிவிட்டோமே’ என நாணவும் விஷாகா அவளது கையைப் பிடித்து தங்களது இருக்கைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கவும் சரியாக இருந்தது.
“எவ்ளோ க்யூட்டா இருக்கு இந்தப் பொண்ணோட வெக்கம்?” என்ற வித்யூத்தின் ரசனை விஷாகாவின் இச்செயலால் ப்ரேக் போட்டது போல நின்றது.
விஸ்மயா அவசரமாக அவளது கையை உதறியவள் “சார் உங்களை நேர்ல மீட் பண்ணுனா இதை கேக்கணும்னு நினைச்சேன்… ஃபிலிம் ஃபேர் அவார்ட் போட்டோஷூட் அன்னைக்கு நான் போட்டுட்டு வந்த ப்ரேஸ்லெட் காணாம போயிடுச்சு... அது விபூவோடது… இவ அன்னைக்கு என்னலாம் சொல்லி திட்டுனா தெரியுமா?” என்று அப்பாவியாய் கூற வித்யூத் “அப்பிடியா? த்சூ த்சூ! தொலைஞ்சிடுச்சா? ஐயோ பாவம் நீங்க” என்றான் ஒன்றும் அறியாதவனைப் போல.
விபின் மீண்டும் நண்பனின் நடிப்பு திறமையைப் பார்த்து ‘அடேய் போதும்டா, இங்க என்ன ஆஸ்காரும் கோல்டன் க்ளோபுமா குடுக்குறாங்க?’ என்று மைண்ட்வாய்சில் கடுப்புற்றான்.
“ரொம்ப பாவம் சார்… எங்க மூனு பேர்ல நான் ஒருத்தி தான் அப்பாவி”
இப்போது விபாஷினியும் விஷாகாவும் அதிர்ந்தனர்.
“நீ ஒன்னும் அப்பாவி கிடையாது… அடப்பாவினு சொல்லுற மாதிரி எல்லா காரியத்தையும் பண்ணுறவ”
விஷாகா துடுக்காகப் பேசி மானத்தை வாங்கவும் விஸ்மயா அவசரமாக அவளது வாயைப் பொத்தினாள்.
“சஜன் சாரோட மேரேஜ்ல என் அக்கா தான் வெட்டிங் ப்ளானர்… எல்லாம் நல்லபடியா முடியணுமேங்கிற டென்சன்ல உளறுறா” என்றாள் விஸ்மயா.
மேலும் விஷாகா ஏதும் பேசும் முன்னர் சுதாரித்தவள் “குமரகம் லேக் ரிசார்ட்ல மீட் பண்ணுவோம் சார்… பை” என்று இருவரிடமிருந்தும் அவசரமாக விடைபெற்று தமக்கை மற்றும் தங்கையை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
அவள் அங்கிருந்து போனதும் மழையடித்து ஓய்ந்தது போல இருந்தது.
“ஏன்டா அந்தப் பொண்ணு கிட்ட ஒன்னும் தெரியாதது மாதிரி நடிச்ச?”
நண்பனிடம் கேட்டான் விபின்.
“எல்லாத்தையும் ஓப்பனா சொன்னா என்ன கிக் இருக்கு விபூ? ஒன் வீக் அவ என் கண் பார்வைல தானே இருக்கப்போறா… மெதுவா சொல்லிக்கலாம்… பை த வே, ஷீ இஸ் குயிட் இன்ட்ரஸ்டிங்”
“எதே? பேச ஆரம்பிச்சா சைனா வால் மாதிரி நிறுத்தாம பேசுது… அந்தப் பொண்ணு உனக்கு இன்ட்ரெஸ்டிங்கா? டேய் உன்னை மாதிரி பசங்க இருக்குறதால தான்டா ஹாசினி டைப் பொண்ணுங்களை தான் பசங்களுக்குப் பிடிக்குதுங்கிற தப்பான கருத்து சொசைட்டில உலா வருது… பொண்ணுனா அவ கூட வந்தாளே அவளோட அக்கா, அந்தப் பொண்ணு மாதிரி இருக்கணும்… ப்பா! என்னா ஃபயரு கண்ணுல!”
விபின் விஷாகாவைப் பற்றி சொல்லி சிலாகிக்கவும் வித்யூத் நண்பனைக் கேலியாகப் பார்த்தான்.
“எப்ப வெடிக்கும்னு தெரியாத புஸ்வாணம் மாதிரி புஸ்புஸுனு மூச்சு விட்டுட்டு நின்னா தான் சாருக்குப் பிடிக்கும் போல… எனக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்குற மத்தாப்பூ தான்பா பிடிக்கும்” என்றான் வித்யூத்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/
#நித்யாமாரியப்பன்