#பூந்தென்றலாய்_வந்தவளே epi 18
கனகதாரணியிடம் போகிற போக்கில் சொல்லிவிட்டு ராதாவைத் தொடர்ந்து நடந்தான் அவன்.
மாதவன் என்ற ஒருவன் தன்னைத் தொடர்கிறான் என்பதை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென நடந்த ராதா கங்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்.
காலணியைக் கழற்றிவிட்டுக் கோவிலுக்குள் பிரவேசித்தவளை “நிக்க மாட்டியா ராதா? ராதே என் ராதேனு பாட்டு வேணும்னா பாடட்டுமா?” என்று உரத்தக்குரலில் கேட்டான் மாதவன்.
தனது சீண்டலுக்குப் பதிலடி கொடுப்பாள் என எதிர்பார்த்த மாதவனுக்குப் பெருத்த ஏமாற்றம். அவனை ராதா திரும்பிக்கூட பார்க்கவில்லை.
நேரே அம்மன் சன்னதிக்கு முன்னே போய் நின்றவள் கருவறையில் இருந்த கங்கையம்மனைக் கரம் கூப்பி வணங்கினாள்.
மாதவனும் அவளோடு சேர்ந்து கண் மூடி வேண்டிக்கொண்டிருந்தபோது
“அம்மா தாயே! வளைகாப்புல வச்ச வேண்டுதலை வாபஸ் வாங்கிக்கிறேன்… என் பக்கத்துல நிக்குறவருக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகக்கூடாது” என்று சத்தமாகக் கூறினாள் அவள்.
அது கோவில் நடை சாத்தும் நேரம் என்பதால் அவர்கள் இருவரைத் தவிர வேறு எந்தப் பக்தர்களும் இல்லை. ஆனால் பூசாரி இருந்தாரே! அவர் இருவரையும் விசித்திரமாகப் பார்த்து வைத்தார்.
“ஷ்ஷ் ராதா சத்தம் போடாத” என உதட்டின் மீது விரல் வைத்து சைகை காட்டினான் மாதவன்.
“நீங்க ராதே என் ராதேனு பாட்டு பாடுறதா சொன்னதை விட இது ஒன்னும் சத்தமில்ல”
உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு மீண்டும் சத்தமாக அதே கோரிக்கையை வைத்தாள் அவள்.
பூசாரி ஆரத்தி தட்டுடன் வந்தவர் “அம்பாள் கிட்ட இந்த மாதிரி கெடுதலான வேண்டுதல் வைக்கக்கூடாதும்மா” என்றார்.
“அம்பாளுக்குக் கெடுதலா தெரிஞ்சாலும் இதோ நிக்குறாரே, இந்த மனுசனுக்கு நல்லது தான்”
குத்தலாகச் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விபூதியை வாங்கிக்கொண்டாள்.
பூசாரி மாதவனைப் பரிதாபமாகப் பார்த்து விபூதியை நெற்றியில் பூசிவிட்டார்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/
#நித்யாமாரியப்பன்
கனகதாரணியிடம் போகிற போக்கில் சொல்லிவிட்டு ராதாவைத் தொடர்ந்து நடந்தான் அவன்.
மாதவன் என்ற ஒருவன் தன்னைத் தொடர்கிறான் என்பதை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென நடந்த ராதா கங்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்.
காலணியைக் கழற்றிவிட்டுக் கோவிலுக்குள் பிரவேசித்தவளை “நிக்க மாட்டியா ராதா? ராதே என் ராதேனு பாட்டு வேணும்னா பாடட்டுமா?” என்று உரத்தக்குரலில் கேட்டான் மாதவன்.
தனது சீண்டலுக்குப் பதிலடி கொடுப்பாள் என எதிர்பார்த்த மாதவனுக்குப் பெருத்த ஏமாற்றம். அவனை ராதா திரும்பிக்கூட பார்க்கவில்லை.
நேரே அம்மன் சன்னதிக்கு முன்னே போய் நின்றவள் கருவறையில் இருந்த கங்கையம்மனைக் கரம் கூப்பி வணங்கினாள்.
மாதவனும் அவளோடு சேர்ந்து கண் மூடி வேண்டிக்கொண்டிருந்தபோது
“அம்மா தாயே! வளைகாப்புல வச்ச வேண்டுதலை வாபஸ் வாங்கிக்கிறேன்… என் பக்கத்துல நிக்குறவருக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகக்கூடாது” என்று சத்தமாகக் கூறினாள் அவள்.
அது கோவில் நடை சாத்தும் நேரம் என்பதால் அவர்கள் இருவரைத் தவிர வேறு எந்தப் பக்தர்களும் இல்லை. ஆனால் பூசாரி இருந்தாரே! அவர் இருவரையும் விசித்திரமாகப் பார்த்து வைத்தார்.
“ஷ்ஷ் ராதா சத்தம் போடாத” என உதட்டின் மீது விரல் வைத்து சைகை காட்டினான் மாதவன்.
“நீங்க ராதே என் ராதேனு பாட்டு பாடுறதா சொன்னதை விட இது ஒன்னும் சத்தமில்ல”
உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு மீண்டும் சத்தமாக அதே கோரிக்கையை வைத்தாள் அவள்.
பூசாரி ஆரத்தி தட்டுடன் வந்தவர் “அம்பாள் கிட்ட இந்த மாதிரி கெடுதலான வேண்டுதல் வைக்கக்கூடாதும்மா” என்றார்.
“அம்பாளுக்குக் கெடுதலா தெரிஞ்சாலும் இதோ நிக்குறாரே, இந்த மனுசனுக்கு நல்லது தான்”
குத்தலாகச் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விபூதியை வாங்கிக்கொண்டாள்.
பூசாரி மாதவனைப் பரிதாபமாகப் பார்த்து விபூதியை நெற்றியில் பூசிவிட்டார்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/
#நித்யாமாரியப்பன்