#அவள்ஒருராகமாலிகை எபி 22
சந்திரிகா அவரைப் பொறுமையாக இருக்குமாறு கண் காட்டினாள்.
உணவுமேஜையில் அமர்ந்திருந்த சாந்தமதிக்கு வேலைக்காரப்பெண் முன்னே நடந்த அவமானத்தில் முகம் கறுத்து கண்கள் கலங்கிவிட்டன.
சர்வேஷும் சரிதாவும் நமக்கேன் வம்பு என இட்லிகளைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
சந்திரிகா அவர்களைப் பார்த்து தலையிலடித்துக்கொண்டாள்.
“எவன் செத்தா என்ன? என் வயிறு நிறையணும்… சீ! என்ன புத்தி?”
கடுகடுவென அவள் பேசவும் சட்டநாதன் வழக்கமாய் சொல்லும் அறிவுரையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“இதுங்க மூனும் அட்டைப்பூச்சி மாதிரி உன் உழைப்பை உறிஞ்சிடும் பாப்பா… அதான் மூனு பேரையும் தூத்துக்குடிக்கு அனுப்பிடுவோம்னு சொன்னேன்”
சந்திரிகாவுக்குத் தந்தையின் பேச்சிலிருந்த ஆதங்கம் புரியாமல் இல்லை. ஆனால் தனக்கு தாயும் தமையனும் செய்த துரோகத்திற்காக தந்தையை அவரது மனைவி மகனிடமிருந்து பிரிப்பது பாவமென நினைத்தாள் அவள்.
என்றாவது ஒரு நாள் அவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறாள் அவள். வயோதிகத்தில் தந்தைக்குத் துணையாக தாய் தானே இருக்கவேண்டும். என்ன தான் மகளாக சந்திரிகா அவருக்குத் துணையாக இருந்தாலும் சாந்தமதியின் துணை தானே அவருக்கு நிரந்தரம்.
சந்திரிகா யோசிக்கவும் “என்ன பாப்பா, நம்ம கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா அப்பாவை கவனிக்க ஆள் இருக்காதேனு யோசிக்கிறியா?” என்று கேட்க
“நான் கல்யாணம் பண்ணிட்டுப் போவேனாங்கிற கேள்விய விடுங்கப்பா… உங்களுக்கு எத்தனை பேர் துணையா நின்னாலும் அம்மா உங்க கூட இருக்குற மாதிரி வராதுப்பா… அண்ணன் மாறுவானானு எனக்குத் தெரியாது… ஆனா அம்மா மாறுவாங்கனு நம்புறேன்… அண்ணனை நம்பி அவங்களைத் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்க முடியாதுப்பா… அவன் சுயநலமானவன்… அவங்களால அவனுக்குப் பிரயோஜனமில்லனு தெரிஞ்சு போச்சுனா அம்மாவை அவன் தூக்கியெறிஞ்சிடுவான்… அப்ப அவங்க எங்க போவாங்க? நான் அவங்களை வெறுத்துட்டேன்… ஆனா நீங்க வெறுத்துடாதிங்க” என்றாள் சந்திரிகா.
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-22.5631/
#நித்யாமாரியப்பன்
சந்திரிகா அவரைப் பொறுமையாக இருக்குமாறு கண் காட்டினாள்.
உணவுமேஜையில் அமர்ந்திருந்த சாந்தமதிக்கு வேலைக்காரப்பெண் முன்னே நடந்த அவமானத்தில் முகம் கறுத்து கண்கள் கலங்கிவிட்டன.
சர்வேஷும் சரிதாவும் நமக்கேன் வம்பு என இட்லிகளைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
சந்திரிகா அவர்களைப் பார்த்து தலையிலடித்துக்கொண்டாள்.
“எவன் செத்தா என்ன? என் வயிறு நிறையணும்… சீ! என்ன புத்தி?”
கடுகடுவென அவள் பேசவும் சட்டநாதன் வழக்கமாய் சொல்லும் அறிவுரையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“இதுங்க மூனும் அட்டைப்பூச்சி மாதிரி உன் உழைப்பை உறிஞ்சிடும் பாப்பா… அதான் மூனு பேரையும் தூத்துக்குடிக்கு அனுப்பிடுவோம்னு சொன்னேன்”
சந்திரிகாவுக்குத் தந்தையின் பேச்சிலிருந்த ஆதங்கம் புரியாமல் இல்லை. ஆனால் தனக்கு தாயும் தமையனும் செய்த துரோகத்திற்காக தந்தையை அவரது மனைவி மகனிடமிருந்து பிரிப்பது பாவமென நினைத்தாள் அவள்.
என்றாவது ஒரு நாள் அவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறாள் அவள். வயோதிகத்தில் தந்தைக்குத் துணையாக தாய் தானே இருக்கவேண்டும். என்ன தான் மகளாக சந்திரிகா அவருக்குத் துணையாக இருந்தாலும் சாந்தமதியின் துணை தானே அவருக்கு நிரந்தரம்.
சந்திரிகா யோசிக்கவும் “என்ன பாப்பா, நம்ம கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா அப்பாவை கவனிக்க ஆள் இருக்காதேனு யோசிக்கிறியா?” என்று கேட்க
“நான் கல்யாணம் பண்ணிட்டுப் போவேனாங்கிற கேள்விய விடுங்கப்பா… உங்களுக்கு எத்தனை பேர் துணையா நின்னாலும் அம்மா உங்க கூட இருக்குற மாதிரி வராதுப்பா… அண்ணன் மாறுவானானு எனக்குத் தெரியாது… ஆனா அம்மா மாறுவாங்கனு நம்புறேன்… அண்ணனை நம்பி அவங்களைத் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்க முடியாதுப்பா… அவன் சுயநலமானவன்… அவங்களால அவனுக்குப் பிரயோஜனமில்லனு தெரிஞ்சு போச்சுனா அம்மாவை அவன் தூக்கியெறிஞ்சிடுவான்… அப்ப அவங்க எங்க போவாங்க? நான் அவங்களை வெறுத்துட்டேன்… ஆனா நீங்க வெறுத்துடாதிங்க” என்றாள் சந்திரிகா.
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-22.5631/
#நித்யாமாரியப்பன்