• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,857

Profile posts Latest activity Postings About

  • #பூந்தென்றலாய்_வந்தவளே epi 5
    “ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா தம்பி?”
    “இல்லைய்யா... நான் வந்து பத்து நிமிசம் தான் இருக்கும்”
    பணிவாய் பேசிய மாதவன் சமையலில் அதிகப்படியாக சேர்க்கவேண்டிய உணவு வகைகளின் பட்டியலை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
    கூடவே அட்வான்சையும் கொடுத்தவர் “இந்த வட்டாரத்துல உங்க சமையல் தான் பெஸ்டுனு சொன்னாங்க... சின்னப்பையனுக்கு என்ன தெரியும்னு யோசிச்சவனை நிச்சயதார்த்தத்துக்கு நீங்க சமைச்ச சாப்பாடு தலைகீழா மாத்திடுச்சு தம்பி... கல்யாணத்துக்கும் நீங்க தான் சமைக்கணும்னு என் பொண்டாட்டி பிடிவாதமா சொல்லிட்டா... அப்புறம், என் மருமகனோட பொண்டாட்டி சொன்னதை தப்பா நினைச்சுக்காதிங்க... அதுக்குக் கொஞ்சம் மூளைக்கோளாறு” என்று கடந்த வாரம் நடந்த சம்பவத்துக்காக மீண்டும் மன்னிப்பு வேண்டினார்.
    மூளைக்கோளாறு என்றதும் மாதவனுக்குச் சிரிப்பு பீறிட்டது. இதை மட்டும் அவள் கேட்டிருக்க வேண்டும்.
    “பரவால்லங்கய்யா... மன்னிப்புலாம் எதுக்கு? உங்களுக்கு என் அப்பாவோட வயசு இருக்கும்... பெரிய வார்த்தை பேசாதிங்க.. நான் அதை அப்பவே மறந்துட்டேன்” என்றான் மாதவன்.
    “உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது தம்பி... அவ என்ன உங்களை ராசிக்கெட்டவன்னு சொல்லுறது? நீங்க கைராசிக்காரர்னு ஊர்ல பேசிக்கிறாங்க... நீங்க கேட்டரிங் பண்ணுன கல்யாணத்துல யாருமே சாப்பாடு சரியில்லனு முகம் சுளிச்சதே இல்லையாம்... பத்து நல்ல மனுசங்க இருக்குற இடத்துல இந்த மாதிரி சில தேள்கொடுக்கும் இருக்கு... ஹூம்!”
    பெரியவர் சொன்ன வார்த்தை மாதவனின் மனதுக்கு இதமாக இருந்தது. சமையலில் அவனது கைமணம் தனி. அதற்காக இலஞ்சியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் அவனுக்கு நற்பெயர் இருப்பதை இப்போது தான் ஒருவர் சொல்லி கேட்கிறான் மாதவன். இதை விட வேறென்ன வேண்டும்?
    மனநிறைவோடு பெரியவரிடமிருந்து விடைபெற்றான் மாதவன்.
    இனி அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறதே! பட்டியலில் உள்ள உணவுக்குத் தேவையான மளிகை, காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும், உதவியாளர்களுக்குச் சம்பளம் எவ்வளவு, எவ்வளவு இலாபம் என திட்டமிட்டுச் செயலாற்றுவது அவனது பாணி.
    அதனால் தான் இசையுலகத்தை விட்டு சம்பந்தமற்ற சமையல் தொழிலில் இறங்கிய போதும் மாதவன் தடுமாறவில்லை.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே எபி 4
    என்னடா சொல்லுற? அது விளைச்சல் நிலம்... அதை விக்குறது தப்பு... எங்கப்பா பாடுபட்டு உழைச்ச பூமிடா அது... உனக்குக் கல்யாணம் ஆனதும் உன் பேர்ல அதை மாத்தலாம்னு வச்சிருக்கேன் மாதவா”

    மாதவன் தந்தை அருகே அமர்ந்தான். அவரது கையைப் பற்றிக் கொண்டவன்

    “கல்யாணம்னு ஒரு சம்பவம் இனிமே என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுப்பா... அண்ணன் சொன்னபடி அந்த நிலத்தை வித்து அண்ணியோட ட்ரீட்மெண்டுக்கு பணம் குடுத்துடுங்க” என்றான் நிதானமாக.

    சங்கரனுக்குக் கண்கள் கலங்கிப் போனது.

    “ஏன்டா இப்பிடிலாம் பேசுற? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க மாதவா”

    “எனக்கு நம்பிக்கை இல்லப்பா... இன்னும் எத்தனை பேர் அந்தப் பொய்யை உண்மைனு நம்பிட்டிருக்காங்கனு உங்களுக்கோ எனக்கோ தெரியுமா? நம்ம கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணுனாலும் யாரும் நம்ப மாட்டாங்கப்பா”

    விட்டேற்றியாக மொழிந்தவனை ஆதங்கத்துடன் ஏறிட்டார் சங்கரன்.

    “நீ அந்தப் பொய்யை ஒத்துக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்டா... ஏன் அவசரப்பட்டு இந்த மாதிரி ஒத்துக்கிட்ட?”

    “உங்களுக்கே தெரியும்ல, எனக்குப் பிடிச்சவங்க என்ன கேட்டாலும் நான் மறுக்க மாட்டேன்னு... அப்ப எனக்கு வேற வழி தெரியலப்பா... நான் வேண்டவே வேண்டாம்னு ஒதுங்கிப் போறவங்களை இழுத்து வச்சிக்க விரும்பல... அவங்க சொன்ன பொய்யை ஒத்துக்கிட்டு விலகிப்போறதுக்கு வழி விட்டுட்டேன்”

    “ஆனா நீ யாருக்காக இதெல்லாம் செஞ்சியோ அவங்க உன்னை பத்தி யோசிக்கலயேடா... அவங்க இப்ப சந்தோசமா வாழுறாங்க... அவங்க சந்தோசத்துக்குக் காரணமான நீ இப்பிடி தனிமரமா நிக்குறியே”
    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே எபி 3
    “என்ன கொழுந்தனாரே! அடுத்த பலியாடை தயார் பண்ணிட்டீங்க போலயே” என அந்தப் பெண் எள்ளலாக வினவினாள்.
    “ராதா வா போவோம்”
    மாதவன் ராதாவின் கரத்தைப் பற்ற இருவரது கரத்தையும் பார்த்து நமட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்தாள் அந்தப் பெண்.
    “இந்தப் பொண்ணை எங்கயோ பாத்திருக்கேனே”
    அவள் யோசித்தாள்.
    “பாத்திருக்கிங்கல்ல, அப்ப பொறுமையா உக்காந்து யார்னு ஞாபகப்படுத்தி பாருங்க... உங்க கூட வெட்டியா பேசி என் நேரத்தை நாசம் பண்ண எனக்கு விருப்பமில்ல”
    கடினக்குரலில் பதிலளித்தவாறு ராதாவுடன் நகர எத்தனித்தான் மாதவன்.
    அப்போது “லெட்சுமி அர்ச்சனை தட்டை மறந்துட்டு வந்துட்டம்மா” என்றபடி வேகமாக வந்தான் ஒரு ஆடவன். ஜாடையில் மாதவனை ஒத்திருந்தவன் அவனைக் கண்டதும் “மாதவா யாருடா இந்தப் பொண்ணு?” என்றபடி நின்றான்.
    “உங்க ராசிகெட்ட தம்பி கிட்ட சிக்கிருக்குற அடுத்த அப்பாவி” என்றாள் லெட்சுமி என்ற அந்தப் பெண் நக்கலாக.
    மாதவனின் பொறுமை எல்லையைக் கடக்கப் போகிறது என்பது அவனது பிடி இறுகுகையில் தெரிந்தது ராதாவிற்கு.
    இவ்வளவு தூரம் பேசியவளை அப்படியே விட்டு செல்ல மனமில்லை அவனுக்கு.
    அந்த ஆடவனையும் அவளையும் உணர்ச்சியற்ற பார்வையால் வெறித்தவன் அன்றொரு நாள் சங்கரன் கூறிய அறிவுரை நினைவுக்கு வரவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான்.
    “இந்த ராசிகெட்டவன் கூட இருந்ததால உங்க வீட்டுல எந்த நல்லதும் நடக்கலனு உன் ஒய்ப் வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவாங்களே, நான் வீட்டை விட்டு வெளிய வந்து ஒரு வருசம் ஓடிருச்சு... இந்த ஒரு வருசத்துல என்னோட கெட்ட ராசி உங்களை ஒன்னும் பண்ணிருக்காதே... அப்பவும் ஏன் நீ அப்பா ஆகலண்ணா?”
    வார்த்தைகளை மாதவன் ஏளனத்தோடு கடித்துத் துப்பவும் அந்தத் தம்பதியினரின் முகம் செத்துப் போய்விட்டது.
    “அண்ணனா?” என்று மனதிற்குள் திகைத்தாள் ராதா.
    “ஒருத்தவங்களோட குறைய குத்திக் காட்டி பேசுறது எனக்குச் சுத்தமா பிடிக்காதுண்ணா... ஆனா எதிர்ல இருக்குறவங்க என்னை வலிக்க வலிக்க அடிக்குறப்ப கையைக் கட்டிட்டு வேடிக்கை பாக்குறதுக்கு நான் ஒன்னும் காந்தி இல்லயே... நானும் சராசரி மனுசன்தான்... என் வாழ்க்கைல எனக்கு எந்த நல்லதும் நடக்காததுக்கு என் ராசி காரணம்னா உங்க வாழ்க்கைல குழந்தைனு ஒன்னு வராததுக்கு உங்க ராசி காரணமா? இத்தனை நாள் நான் மௌனமா இருந்ததுக்குக் காரணம் உன் ஒய்ப் அளவுக்கு நான் தரம் இறங்க கூடாதுனு மட்டும் தான்... ஆனா என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு... இதோட என்னை பத்தி கிண்டலா பேசுறதை நிறுத்திக்கிட்டா அவங்களுக்கு நல்லது... இன்னொரு தடவை இதே மாதிரி பொறுமையா நான் பேசமாட்டேன்... பூர்வீக சொத்து எனக்கு வேண்டாம்னு நான் இன்னும் பத்திரத்துல கையெழுத்து போட்டு குடுக்கல... உங்க சங்காத்தம் வேண்டாம்னு ஒதுங்கி இருக்குறவனை தேடி வந்து சீண்டாதிங்க”
    அவர்களிடம் உறுமிவிட்டு ராதாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் மாதவன்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பூந்தென்றல்-3.5679/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே எபி 2
    “மாமா இல்லடி... அத்தான்னு சொல்லு... அவங்கப்பாவும் மாமா, அவனும் மாமாவா உனக்கு?”
    “அத்தான்னு சொல்லுறதுலாம் டூ ஓல்ட் ஃபேஷன்... என்னைப் பாத்தா அந்தக் காலத்து சரோஜாதேவி சாவித்திரி மாதிரி தெரியுதாம்மா உனக்கு? அத்தான்னு கூப்புடணுமாம்ல... உவ்வேக்” என்றாள் ராதா.
    அவளது ‘உவ்வேக்’கில் மாதவன் திரும்பிப் பார்க்கவும்
    “அது உங்களுக்குச் சொன்ன உவ்வேக் இல்லை மாமா... அந்த அத்தான்ங்கிற வார்த்தைக்குச் சொன்னது... நீங்க வேலைய பாருங்க” என்றாள் அவள்.
    அதற்குள் உள்ளே இருந்து “உன்னைய போய் சரோஜாதேவி சாவித்திரி கூட கம்பேர் பண்ணுவேனாடி? அவங்க மூக்கும் முழியுமா எவ்ளோ அழகா இருப்பாங்க... நான் பெத்தது பொண்ணா குரங்கானு இப்ப வரைக்கும் எனக்கே சந்தேகமா இருக்கு... வாலு ஒன்னு தான் இல்லை” என்று பதிலடி வந்தது கனகதாரணியிடமிருந்து.
    ராதா “க்ரேட் இன்சல்ட்” என்று வாய்க்குள் முணுமுணுக்க மாதவனிடமிருந்து நமட்டுச்சிரிப்பு வெளிப்பட்டது.
    உடனே அவனை முறைத்தாள் ராதா.
    “இதுக்கு மட்டும் கத்துதா இந்தப் பல்லி?” என்று மைண்ட் வாய்சில் மட்டும் கேட்டுக்கொண்டாள், எல்லாம் அவனது முறைப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தான்.
    இத்தனை களேபரங்களுக்கு இடையே ராதாவின் முதுகலைப்படிப்பிற்கான விண்ணப்பமும் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது.
    “செலக்டான ஸ்டூடண்ட்ஸ் லிஸ்டை சைட்லயே பாத்துக்கலாம்... ஃபீசும் ஆன்லைன்லயே கட்டிட்டோம்னா காலேஜ் திறக்குறப்ப அங்க போனா போதும்”
    அவளிடம் கூறிய மாதவன் சமையலறையை நோக்கி செல்ல அவனை ராதாவும் தொடர்ந்தாள்.
    கனகதாரணி மகளுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று வினவினார் மாதவனிடம்.
    “நல்ல மார்க் இருக்கு அத்தை... அதனால சீட் கிடைக்கிறதுல பிரச்சனை இருக்காது... நீங்க யோசிக்காம யூனிஃபார்முக்குத் துணி எடுத்து தைக்க குடுத்துடுங்க” என்றான் மாதவன்.
    கனகதாரணி சந்தோசத்தில் தலையசைத்தபோது “என்னது யூனிஃபார்மா?” என ராதாவின் அதிர்ந்த குரல் கேட்டது.
    “ஆமா... ஏன் அங்க யூனிஃபார்ம் போடணும்னு உனக்குத் தெரியாதா?”
    சாதாரணமாக கேட்டுவிட்டு மெஸ்சுக்குக் கிளம்ப தயாரானான் மாதவன்.
    சீருடை அணிந்து கல்லூரிக்குச் செல்வது தனக்கு இழைக்கப்படும் அநீதி எனும் அளவுக்கு ராதா கனகதாரணியிடம் வாதிட ஆரம்பிக்க அதை கேட்டு சிரித்தபடியே தனது அறைக்குள் சென்றான்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பூந்தென்றல்-2.5668/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை epi 27
    சந்திரிகாவின் தோற்றத்தில் திருப்தியுற்றவன் ரிசார்ட்டிலிருந்து காரைக் கிளப்பி ஜங்டுங்சாவை நோக்கி செலுத்தினான்.
    செல்லும் வழியெங்கும் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
    “இந்த வருசம் செர்ரி ப்ளாசம் கொஞ்சம் ஏர்லியரா ஆரம்பிச்சிடுச்சு”
    “இதெல்லாம் நீங்க ரசிப்பிங்களா? ஆச்சரியமா இருக்கு”
    “ஏன் நான் ரசிக்கக்கூடாதா?”
    “இல்ல… செர்ரி ப்ளாசமை ஜப்பானியர்கள் தானே கொண்டாடுவாங்க… அதான் கேட்டேன்”
    “கொரியா முழுக்க ஜப்பானோட காலனி ஆதிக்கத்துக்குக் கீழ வந்தப்ப அவங்க கொரிய பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா சிதைச்சு ஜப்பானோட கலாச்சாரத்தை புகுத்த ஆரம்பிச்சாங்க… அதோட ஆரம்பமா கொரியாவுல முக்கியமான அரண்மனைகள்ல செர்ரி மரங்களை வளர்த்தாங்க… ஆரம்பத்துல செர்ரி ப்ளாசமை கொரியர்கள் ‘பிட்டர் ஸ்வீட் மொமண்ட்’டா கடந்தாலும் காலப்போக்குல அதை தூய்மை அழகோட சின்னமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க… சௌத் கொரியால செர்ரி ப்ளாசம் ஃபெஸ்டிவலை அந்தந்த பிராந்தியங்கள்ல ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க… எனக்குச் செர்ரி ப்ளாசம் வந்தாலே என் அம்மாவோட ஞாபகம் வந்துடும்”
    எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவன், அதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கறாராகப் பேசுபவன் அன்று மனம் விட்டுப் பேசுவதே சந்திரிகாவுக்கு ஆச்சரியம். அதிலும் அவனது அன்னையைப் பற்றி சொன்னதும் கொஞ்சம் மனம் இளகியது அவளுக்கு.
    “உங்க அம்மா எங்க இருக்காங்க?” மெதுவாக வினவினாள்.
    “வூசொங் யூனிவர்சிட்டில கொரியன் லாங்வேஜ் செண்டர்ல ஒர்க் பண்ணுனாங்க”
    “பண்ணுனாங்க மீன்ஸ்….”
    “ஷீ இஸ் நோ மோர் நவ்”
    சந்திரிகா அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
    “அப்பிடி பாக்காத… எனக்குப் பிடிக்கல”
    அடுத்த நொடியே அவள் தன்னைத் தவறாக எண்ணிவிடுவாளோ என விளக்கமளிக்க ஆரம்பித்தான்.
    “நான் சின்ன வயசுல இருந்து இப்பிடியே வளர்ந்துட்டேன்… யாரும் என்னை பரிதாபமா பாத்தா பிடிக்காது… சாரி”
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-27.5653/

    #நித்யாமாரியப்பன்
    #மாயமித்ரா எபி 26
    தேள் கொடுக்கு நாக்கால் சந்திரிகாவைப் பற்றி கணவன் மோசமாகப் பேசியதில் சரிதாவுக்கே சங்கடமாகிவிட்டது. என்ன தான் ஆண்பிள்ளையை உயர்வாக நினைக்கும் தாயாக இருந்தாலும் மகள் தனிமரமாக நிற்பாளென மகன் சொன்னதைக் கேட்டதும் சாந்தமதியின் மனம் இரணமாகிப்போனது. அதை அவரது முகமாற்றத்தில் கண்டுகொண்டாள் சரிதா. மாமியார் மீது பரிதாபம் கொண்டவள் கணவனை அதட்டினாள்.
    “சர்வேஷ் வேண்டாம்… அப்பிடிலாம் பேசாத”
    “ஏன் பேசக்கூடாது பேபி? நமக்குக் குழந்தை இல்லனு எவ்ளோ கஷ்டப்படுறோம்? இவங்க மூனு பேரும் சொகுசா இருக்காங்க… மனசுல கொஞ்சம் ஈரம் இருந்துச்சுனா நமக்குப் பணம் குடுத்து உதவுவாங்க… இவங்களுக்குத் தான் மனசே இல்லையே”
    “ப்ச்! என் யூடியூப் வருமானம் உன் சம்பளத்தை வச்சு சமாளிக்கலாம் சர்வேஷ்”
    “எல்லாத்தையும் ட்ரீட்மெண்டுக்கே செலவளிச்சிட்டா எனக்குனு எதுடி மிஞ்சும்? நான் லொட்டு லொட்டுனு வேலை பாத்து சம்பாதிக்கிறதால எனக்கு என்னடி யூஸ்? ஒரு பார்ட்டி, பப்னு போக முடியாது… வீக்கெண்ட்ல அவுட்டிங், சினிமானு எதுவுமே இல்லாத வாழ்க்கைலாம் ஒரு வாழ்க்கையா? உங்க யாராலயும் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல”
    சர்வேஷின் சுயரூபம் இப்போது தான் வெளிப்பட்டது. அவனது சுயநலமான மனப்பாங்கில் அவன் மட்டுமே அவனுக்கு முக்கியம். தனது சந்தோசம், தனது பணம், தனது சௌகரியம் மட்டுமே அவனுக்கு பெரியது.
    மனைவியே ஆனாலும் தனக்காக கூட அவன் யோசிக்கவில்லை என்பதை அறிந்ததும் சரிதா அதிர்ந்தே போய்விட்டாள். இவனை மணமுடித்து தவறு செய்துவிட்டோமோ என்று தாமதமாக ஞானோதயம் பிறந்தது.
    கோபத்துடன் அவனை முறைத்தாள்.
    “என்னடா ஓவரா பேசுற? என்னமோ குழந்தை பிறந்தா அது எனக்கு மட்டும் தான் குழந்தைங்கிற மாதிரி பேசுற… சீ! நீ இவ்ளோ செல்ஃபிஷாடா? காசு காசுனு ஏன் அலையுற? நீ நரேஷ் கூட சேர்ந்து செஞ்ச கேவலமான காரியத்துக்கு அப்புறமும் சந்து உன்னையும் என்னையும் இந்த வீட்டுல தங்க வச்சிருக்காடா… உன் சம்பளத்துல இருந்து ஒரு ரூபா நீ இந்த வீட்டுக்காக செலவளிச்சிருக்கியா? இந்த வீட்டை விட்டு வெளியே போய் வாடகைக்கு இன்னொரு வீட்டுல இருந்து பாரு… மாசமாசம் எவ்ளோ செலவாகும்னு உனக்குத் தெரியும்… உன்னால பெத்த அம்மாக்கு மெடிக்கல் செலவு பண்ணமுடியாது, கட்டுன பொண்டாட்டிக்கு ட்ரீட்மெண்டுக்குச் செலவு பண்ணமுடியாது… அப்ப என்ன தான் பண்ண முடியும் உன்னால? உன் பணத்தை வச்சு சொகுசா நீ மட்டும் வாழணும்… இதே மாதிரி சந்திரிகா யோசிச்சிருந்தா நீயோ நானோ இவ்ளோ சொகுசா வாழ முடியுமாடா? உன்னைக் கல்யாணம் பண்ணுனதுக்கு முதல் தடவையா வெக்கப்படுறேன்.. நீ எனக்காக பத்து பைசா செலவளிக்கவேண்டாம்… இப்ப இருந்து உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”
    வெறுப்போடு சொன்னவள் சாந்தமதியைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டாள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-26.5647/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை எபி 25
    “ஒரு பொண்ணுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான தகுதி எதுவும் உன் கிட்ட இல்ல மிஸ் க்வாங்… ஐ மீன் அழகு அறிவு இது ரெண்டுமே இல்லனு சொல்ல வர்றேன்… பட் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் செல்ஃப் ரெஸ்பெக்ட் கூடவா இல்ல?”
    “சாரி! நீங்க சொல்லுறது புரியலை மேம்”
    “நீ கே-பாப் ஐடலுக்குத் தகுதியில்லாதவனு துரத்துன ஏஜென்சிக்காக கான்சர்ட் பண்ணப்போறியே, அதை சொன்னேன்”
    “நான் ஒன்னும் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் கிட்ட கெஞ்சி இந்த வாய்ப்பை வாங்கல மேம்… அவங்க தான் என்னை இன்வைட் பண்ணிருக்காங்க” என்றாள் சந்திரிகா அடக்கமாக.
    அவளை மேலிருந்து கீழாகப் பார்த்த ஹனாவின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.
    “கே-பாப் ரசிகர்கள் விரும்புற எந்த அம்சமும் உன் கிட்ட இல்ல… உன்னை வச்சு கான்சர்ட் பண்ணுனா, அந்த கான்சர்ட் நஷ்டத்துல தான் முடியும்” என்றாள் துச்சமாக.
    கே-பாப் ரசிகர்கள் விரும்பும் சைஸ் ஜீரோ உடல் சந்திரிகாவுக்கு இல்லை என்பதை குத்திக் காட்டினாள் ஹனா.
    “அது லாபத்துல முடியுதா நஷ்டத்துல முடியுதானு மிஸ்டர் லீஹோவும், மைல் ஸ்டோன் மியூசிக்கும் கவலைப்படட்டும் மேடம்… என் வேலைய செய்ய நான் இங்க வந்திருக்கேன்… அதை திருப்தியா முடிச்சிட்டுக் கிளம்பிடுவேன்… நீங்க தேவையில்லாம என் கிட்ட ஹார்ஷா பேசுறது நல்லா இல்ல… இப்ப கே-பாப் ஐடல்ஸ் சிலரே கொரியன்சோட பியூட்டி ஸ்டேண்டர்ட் பத்தி துணிச்சலா எதிர்கேள்வி கேக்குறாங்க… மாமாமூ ஹ்வாசாவோட ரீசண்ட் ஆல்பம் ‘ஐ லவ் மை பாடி’ய நீங்க கேட்டிருப்பிங்கனு நம்புறேன்… ஒரு பொண்ணுக்கு அடிப்படையா இருக்க வேண்டிய தகுதி ‘பாடி பாசிடிவிட்டி’ அண்ட் ‘செல்ஃப் லவ்’… இது ரெண்டும் எனக்கு இருக்கு… நான் ஒல்லியோ குண்டோ எனக்கு நான் அழகி தான்… அழகுக்கு நீங்க குடுத்திருக்குற டெபனிசன்ல இருந்து வெளிய வர முயற்சி பண்ணுங்க… என்னை கேலி செய்யுற இந்த நிமிசம் நீங்க என் கண்ணுக்கு இந்த உலகத்துலயே ரொம்ப குரூரமான பொண்ணா தெரியுறிங்க”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-25.5645/

    #நித்யாமாரியப்பன்
    அவள் ஒரு ராகமாலிகை எபி 24
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom