#பூந்தென்றலாய்_வந்தவளே epi 5
“ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா தம்பி?”
“இல்லைய்யா... நான் வந்து பத்து நிமிசம் தான் இருக்கும்”
பணிவாய் பேசிய மாதவன் சமையலில் அதிகப்படியாக சேர்க்கவேண்டிய உணவு வகைகளின் பட்டியலை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
கூடவே அட்வான்சையும் கொடுத்தவர் “இந்த வட்டாரத்துல உங்க சமையல் தான் பெஸ்டுனு சொன்னாங்க... சின்னப்பையனுக்கு என்ன தெரியும்னு யோசிச்சவனை நிச்சயதார்த்தத்துக்கு நீங்க சமைச்ச சாப்பாடு தலைகீழா மாத்திடுச்சு தம்பி... கல்யாணத்துக்கும் நீங்க தான் சமைக்கணும்னு என் பொண்டாட்டி பிடிவாதமா சொல்லிட்டா... அப்புறம், என் மருமகனோட பொண்டாட்டி சொன்னதை தப்பா நினைச்சுக்காதிங்க... அதுக்குக் கொஞ்சம் மூளைக்கோளாறு” என்று கடந்த வாரம் நடந்த சம்பவத்துக்காக மீண்டும் மன்னிப்பு வேண்டினார்.
மூளைக்கோளாறு என்றதும் மாதவனுக்குச் சிரிப்பு பீறிட்டது. இதை மட்டும் அவள் கேட்டிருக்க வேண்டும்.
“பரவால்லங்கய்யா... மன்னிப்புலாம் எதுக்கு? உங்களுக்கு என் அப்பாவோட வயசு இருக்கும்... பெரிய வார்த்தை பேசாதிங்க.. நான் அதை அப்பவே மறந்துட்டேன்” என்றான் மாதவன்.
“உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது தம்பி... அவ என்ன உங்களை ராசிக்கெட்டவன்னு சொல்லுறது? நீங்க கைராசிக்காரர்னு ஊர்ல பேசிக்கிறாங்க... நீங்க கேட்டரிங் பண்ணுன கல்யாணத்துல யாருமே சாப்பாடு சரியில்லனு முகம் சுளிச்சதே இல்லையாம்... பத்து நல்ல மனுசங்க இருக்குற இடத்துல இந்த மாதிரி சில தேள்கொடுக்கும் இருக்கு... ஹூம்!”
பெரியவர் சொன்ன வார்த்தை மாதவனின் மனதுக்கு இதமாக இருந்தது. சமையலில் அவனது கைமணம் தனி. அதற்காக இலஞ்சியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் அவனுக்கு நற்பெயர் இருப்பதை இப்போது தான் ஒருவர் சொல்லி கேட்கிறான் மாதவன். இதை விட வேறென்ன வேண்டும்?
மனநிறைவோடு பெரியவரிடமிருந்து விடைபெற்றான் மாதவன்.
இனி அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறதே! பட்டியலில் உள்ள உணவுக்குத் தேவையான மளிகை, காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும், உதவியாளர்களுக்குச் சம்பளம் எவ்வளவு, எவ்வளவு இலாபம் என திட்டமிட்டுச் செயலாற்றுவது அவனது பாணி.
அதனால் தான் இசையுலகத்தை விட்டு சம்பந்தமற்ற சமையல் தொழிலில் இறங்கிய போதும் மாதவன் தடுமாறவில்லை.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/
#நித்யாமாரியப்பன்
“ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா தம்பி?”
“இல்லைய்யா... நான் வந்து பத்து நிமிசம் தான் இருக்கும்”
பணிவாய் பேசிய மாதவன் சமையலில் அதிகப்படியாக சேர்க்கவேண்டிய உணவு வகைகளின் பட்டியலை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
கூடவே அட்வான்சையும் கொடுத்தவர் “இந்த வட்டாரத்துல உங்க சமையல் தான் பெஸ்டுனு சொன்னாங்க... சின்னப்பையனுக்கு என்ன தெரியும்னு யோசிச்சவனை நிச்சயதார்த்தத்துக்கு நீங்க சமைச்ச சாப்பாடு தலைகீழா மாத்திடுச்சு தம்பி... கல்யாணத்துக்கும் நீங்க தான் சமைக்கணும்னு என் பொண்டாட்டி பிடிவாதமா சொல்லிட்டா... அப்புறம், என் மருமகனோட பொண்டாட்டி சொன்னதை தப்பா நினைச்சுக்காதிங்க... அதுக்குக் கொஞ்சம் மூளைக்கோளாறு” என்று கடந்த வாரம் நடந்த சம்பவத்துக்காக மீண்டும் மன்னிப்பு வேண்டினார்.
மூளைக்கோளாறு என்றதும் மாதவனுக்குச் சிரிப்பு பீறிட்டது. இதை மட்டும் அவள் கேட்டிருக்க வேண்டும்.
“பரவால்லங்கய்யா... மன்னிப்புலாம் எதுக்கு? உங்களுக்கு என் அப்பாவோட வயசு இருக்கும்... பெரிய வார்த்தை பேசாதிங்க.. நான் அதை அப்பவே மறந்துட்டேன்” என்றான் மாதவன்.
“உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது தம்பி... அவ என்ன உங்களை ராசிக்கெட்டவன்னு சொல்லுறது? நீங்க கைராசிக்காரர்னு ஊர்ல பேசிக்கிறாங்க... நீங்க கேட்டரிங் பண்ணுன கல்யாணத்துல யாருமே சாப்பாடு சரியில்லனு முகம் சுளிச்சதே இல்லையாம்... பத்து நல்ல மனுசங்க இருக்குற இடத்துல இந்த மாதிரி சில தேள்கொடுக்கும் இருக்கு... ஹூம்!”
பெரியவர் சொன்ன வார்த்தை மாதவனின் மனதுக்கு இதமாக இருந்தது. சமையலில் அவனது கைமணம் தனி. அதற்காக இலஞ்சியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் அவனுக்கு நற்பெயர் இருப்பதை இப்போது தான் ஒருவர் சொல்லி கேட்கிறான் மாதவன். இதை விட வேறென்ன வேண்டும்?
மனநிறைவோடு பெரியவரிடமிருந்து விடைபெற்றான் மாதவன்.
இனி அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறதே! பட்டியலில் உள்ள உணவுக்குத் தேவையான மளிகை, காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும், உதவியாளர்களுக்குச் சம்பளம் எவ்வளவு, எவ்வளவு இலாபம் என திட்டமிட்டுச் செயலாற்றுவது அவனது பாணி.
அதனால் தான் இசையுலகத்தை விட்டு சம்பந்தமற்ற சமையல் தொழிலில் இறங்கிய போதும் மாதவன் தடுமாறவில்லை.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/
#நித்யாமாரியப்பன்