#சுருதியோடுலயம்சேரவே EPI 14
அவனது பதில் விஸ்மயாவுக்குப் பிடித்திருந்தது. பெரும்பான்மை ஆண்களைப் போல காதலித்த பெண்ணிடம் ‘நீ என் அம்மா மாதிரிம்மா’ என்று போலியாய் உருகாமல் அன்னைக்கு நிகர் அவர் தான் என்ற உண்மையை அவன் கூறிய விதம் மற்ற ஆண்களிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டியது.
“நீ ஒரு யூனிக் பீஸ்டா ஹெச்.பி பென்சில்”
வாய் விட்டு அவனைப் பாராட்டினாள் விஸ்மயா. வித்யூத் இடை வரை குனிந்து கரம் நீட்டி அவளது பாராட்டை ஏற்றுக்கொண்டான். பின் நிமிர்ந்தவன் அவளை நோக்கிக் கரம் நீட்டினான்.
விஸ்மயா அதைப் பற்ற யோசிக்கவும் “ஸ்டூடியோ வரைக்கும் தனியா வந்தாச்சு… என் கையைப் பிடிக்க மட்டும் ஏன் யோசிக்கிற?” என அவன் கேட்க
“கையைப் பிடிச்சு நடக்க நான் என்ன குழந்தையா?” என திறமையாகப் பதிலளிப்பது பேசினாள் அவள்.
வித்யூத் வேகமாகத் தனது வாயைப் பொத்திக்கொண்டவன் “அச்சோ! அப்ப நீ வளந்துட்டியா விஸ்மி? இந்த விபூ இல்ல விபூ, அவன் உன்னை விபாஷினி கூடக் கம்பேர் பண்ணுவான்… நான் கூட நீ இன்னும் குழந்தையா இருக்கனு நினைச்சு தான் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணிட்டேன்… ப்ச் மக்குடா வித்தி நீ” எனத் தன் தலையில் குட்டிக்கொண்டான்.
“ஓ” என்றவளை தாமதிக்காமல் தன்னருகே இழுத்துக்கொண்டான் வித்யூத்.
“ஏய்” என ஏதோ சொல்ல வந்தவள் அடுத்து அவனது கரம் அவளது இடையை வளைத்து இழுத்தணைக்கவும் கண்களை விரித்துத் திகைத்து நின்றாள்.
தனது அருகாமை அவளுக்குக் கொடுத்த திகைப்பை ரசித்தபடி ஒற்றை விரலால் விஸ்மயாவின் வதனத்தை அளந்தான்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/
#நித்யாமாரியப்பன்
அவனது பதில் விஸ்மயாவுக்குப் பிடித்திருந்தது. பெரும்பான்மை ஆண்களைப் போல காதலித்த பெண்ணிடம் ‘நீ என் அம்மா மாதிரிம்மா’ என்று போலியாய் உருகாமல் அன்னைக்கு நிகர் அவர் தான் என்ற உண்மையை அவன் கூறிய விதம் மற்ற ஆண்களிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டியது.
“நீ ஒரு யூனிக் பீஸ்டா ஹெச்.பி பென்சில்”
வாய் விட்டு அவனைப் பாராட்டினாள் விஸ்மயா. வித்யூத் இடை வரை குனிந்து கரம் நீட்டி அவளது பாராட்டை ஏற்றுக்கொண்டான். பின் நிமிர்ந்தவன் அவளை நோக்கிக் கரம் நீட்டினான்.
விஸ்மயா அதைப் பற்ற யோசிக்கவும் “ஸ்டூடியோ வரைக்கும் தனியா வந்தாச்சு… என் கையைப் பிடிக்க மட்டும் ஏன் யோசிக்கிற?” என அவன் கேட்க
“கையைப் பிடிச்சு நடக்க நான் என்ன குழந்தையா?” என திறமையாகப் பதிலளிப்பது பேசினாள் அவள்.
வித்யூத் வேகமாகத் தனது வாயைப் பொத்திக்கொண்டவன் “அச்சோ! அப்ப நீ வளந்துட்டியா விஸ்மி? இந்த விபூ இல்ல விபூ, அவன் உன்னை விபாஷினி கூடக் கம்பேர் பண்ணுவான்… நான் கூட நீ இன்னும் குழந்தையா இருக்கனு நினைச்சு தான் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணிட்டேன்… ப்ச் மக்குடா வித்தி நீ” எனத் தன் தலையில் குட்டிக்கொண்டான்.
“ஓ” என்றவளை தாமதிக்காமல் தன்னருகே இழுத்துக்கொண்டான் வித்யூத்.
“ஏய்” என ஏதோ சொல்ல வந்தவள் அடுத்து அவனது கரம் அவளது இடையை வளைத்து இழுத்தணைக்கவும் கண்களை விரித்துத் திகைத்து நின்றாள்.
தனது அருகாமை அவளுக்குக் கொடுத்த திகைப்பை ரசித்தபடி ஒற்றை விரலால் விஸ்மயாவின் வதனத்தை அளந்தான்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/
#நித்யாமாரியப்பன்