#பூந்தென்றலாய்_வந்தவளே epi 11
“மூனு வேளையும் நான் சமைச்சுப் போட்டதை தின்னுட்டு உங்கப்பா எங்க போயி நன்றிய காட்டிருக்கார் பாருங்க... இதனால தான் முன்னாடியே சொத்து முழுக்க எழுதி வாங்குங்கனு தலை தலையா அடிச்சேன்... என் பேச்சைக் கேட்டிங்களா?”
கிருஷ்ணனால் தந்தையிடம் வெளிப்படையாகக் கோபத்தைக் காட்ட முடியாத நிலை. இப்போதே வீட்டை விட்டுக் கிளம்பு எனச் சொல்லிவிட்டார் என்றால் அவனும் மகாலெட்சுமியும் எங்கே செல்வார்கள்?
ஆனால் அவன் மனைவிக்கு அந்தப் பயமில்லை.
சங்கரன் தனது காட்டுக்கத்தலை கண்டுகொள்ளவில்லை என்றதும் கோபம் உச்சிக்கேறியது அவளுக்கு.
நேரே அவர் முன்னே வந்தவள் “என்ன பெருசா செஞ்சு கிழிச்சிட்டான்னு அந்த மகனுக்கு எல்லா சொத்தையும் எழுதி வச்சிருக்கிங்க? அவனால என்ன பிரயோஜனம் உங்களுக்கு? அந்த ராசி கெட்டவன் ஆம்பளையே இல்லனு அவன் பொண்டாட்டி அத்து விட்டுட்டுப் போயிட்டா... பட்ட மரத்துக்குச் சொத்து ஒன்னு தான் கேடு”
நரம்பில்லாத நாக்கு சுடுசொற்களை அமிலமாய் அள்ளி இறைக்க ஒவ்வொரு சொல்லும் சுருக்கென நெஞ்சில் குத்துவது போன்ற பிரமை சங்கரனுக்கு.
மகாலெட்சுமியின் தேள்கொடுக்கு வார்த்தைகள் அவருக்குப் பழகிப்போனது தான். ஆனால் மாதவனை ஆண்மையற்றவன், பட்டமரம், ராசி கெட்டவன் என அவள் வகைதொகையின்றி திட்டுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இப்படிப்பட்டவளா தனக்கு மருமகளாக வந்து வாய்த்திருக்க வேண்டும்?
மனவேதனையின் உச்சமாகச் சுருக்கெனப் பிரமையாகத் தோன்றிய வலி சில நிமிடங்களில் உண்மையாகி இதயத்தைக் கைகளில் வைத்துக் கசக்குவது போன்ற கொடூர வலியாய் மாரடைப்பாய் மாற நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார் சங்கரன்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/
#நித்யாமாரியப்பன்
“மூனு வேளையும் நான் சமைச்சுப் போட்டதை தின்னுட்டு உங்கப்பா எங்க போயி நன்றிய காட்டிருக்கார் பாருங்க... இதனால தான் முன்னாடியே சொத்து முழுக்க எழுதி வாங்குங்கனு தலை தலையா அடிச்சேன்... என் பேச்சைக் கேட்டிங்களா?”
கிருஷ்ணனால் தந்தையிடம் வெளிப்படையாகக் கோபத்தைக் காட்ட முடியாத நிலை. இப்போதே வீட்டை விட்டுக் கிளம்பு எனச் சொல்லிவிட்டார் என்றால் அவனும் மகாலெட்சுமியும் எங்கே செல்வார்கள்?
ஆனால் அவன் மனைவிக்கு அந்தப் பயமில்லை.
சங்கரன் தனது காட்டுக்கத்தலை கண்டுகொள்ளவில்லை என்றதும் கோபம் உச்சிக்கேறியது அவளுக்கு.
நேரே அவர் முன்னே வந்தவள் “என்ன பெருசா செஞ்சு கிழிச்சிட்டான்னு அந்த மகனுக்கு எல்லா சொத்தையும் எழுதி வச்சிருக்கிங்க? அவனால என்ன பிரயோஜனம் உங்களுக்கு? அந்த ராசி கெட்டவன் ஆம்பளையே இல்லனு அவன் பொண்டாட்டி அத்து விட்டுட்டுப் போயிட்டா... பட்ட மரத்துக்குச் சொத்து ஒன்னு தான் கேடு”
நரம்பில்லாத நாக்கு சுடுசொற்களை அமிலமாய் அள்ளி இறைக்க ஒவ்வொரு சொல்லும் சுருக்கென நெஞ்சில் குத்துவது போன்ற பிரமை சங்கரனுக்கு.
மகாலெட்சுமியின் தேள்கொடுக்கு வார்த்தைகள் அவருக்குப் பழகிப்போனது தான். ஆனால் மாதவனை ஆண்மையற்றவன், பட்டமரம், ராசி கெட்டவன் என அவள் வகைதொகையின்றி திட்டுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இப்படிப்பட்டவளா தனக்கு மருமகளாக வந்து வாய்த்திருக்க வேண்டும்?
மனவேதனையின் உச்சமாகச் சுருக்கெனப் பிரமையாகத் தோன்றிய வலி சில நிமிடங்களில் உண்மையாகி இதயத்தைக் கைகளில் வைத்துக் கசக்குவது போன்ற கொடூர வலியாய் மாரடைப்பாய் மாற நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார் சங்கரன்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/
#நித்யாமாரியப்பன்