#பூந்தென்றலாய்_வந்தவளே epi 6
“ரொம்ப சந்தோசம் தம்பி... உங்க கேட்டரிங் சர்வீஸ் திருப்தியா இருந்துச்சு... இனிமே நம்ம வீட்டு விசேசம் எல்லாத்துக்கும் உங்க சாப்பாடு தான்... சீக்கிரமே நீங்களும் கல்யாணச்சாப்பாடு போடணும்... அதை மறந்துடாதிங்க”
பெரியவர் மனதாற வாழ்த்தினார்.
மாதவனுக்கு அவரது வாழ்த்தில் பிற்பாதி பலிக்கப்போவதில்லை என்ற எண்ணம் சிரிப்பை வரவழைத்தது. பெரியவரோ கல்யாணப்பேச்சை எடுத்ததும் மாதவனுக்கு வெட்கம் வந்துவிட்டதென நினைத்துக்கொண்டு கிளம்பினார்.
சமீரோடு சேர்ந்து பாத்திரங்களை மினிவேனில் ஏற்றிக் கொண்டிருந்தபோது தான் அச்சம்பவம் நடந்தேறியது.
அவள் அங்கே வந்தாள். வந்தவள் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் விதி அவளைப் பேசவைத்தது.
“எதையோ சாதிக்கப்போறேன்னு கிராமத்துக்கு வந்து கடைசில சமையல்காரனா நிக்கிறிங்களே மாதவன்... த்சூ! பாவம் நீங்க... உங்க ராசி லெச்சணம் என்னனு சொல்லியும் பெரியப்பா கேக்கல... அவங்க மகன் இன்னும் எத்தனை மாசம் பொண்டாட்டி கூட வாழப்போறானோ? கடவுளுக்கு தான் வெளிச்சம்”
அவளது பேச்சு சமீருக்கு எரிச்சலை உண்டாக்கியது.
“வாய மூடு மஹதி”
மாதவன் அவனைக் கண்களால் பொறுமை காக்கும்படி வேண்டிக்கொண்டது வீணானது.
சமீர் அந்த மஹதியை இன்று சும்மா விடுவதாக இல்லை.
“என் ஃப்ரெண்டை சொல்லுற... நீ மட்டும் பெருசா என்ன வாழ்ந்து கிழிச்சிட்ட? அந்த மனோகர் கூட ஜோடி சேர்ந்து சுத்துறத தவிர வேற என்ன செஞ்ச நீ?”
மஹதி என்பவள் சமீரைப் பார்த்த பார்வையில் ஐம்பது சதவிகிதம் அலட்சியமும் ஐம்பது சதவிகிதம் கேலியும் கலந்திருந்தது.
“சமையல்காரனுக்கு அசிஸ்டெண்டா இருக்குறவன் தானே, உனக்கு சுத்துவட்டாரத்துல நடக்குறதை யாருமே சொல்லலையா சமீர்? நானும் மனோகரும் சேர்ந்து குத்தாலத்துல ஒரு ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்... இடம் பாத்து வாடகையும் குடுத்தாச்சு... செஃப், ஸ்டாஃப்ஸ் எல்லாரும் ரெடி.... வர்ற வெள்ளிக்கிழமை க்ராண்ட் ஓப்பனிங்குக்கு சிங்கர் சரணை இன்வைட் பண்ணிருக்கோம்... உங்க ஓட்டுவீடு மெஸ் மாதிரி நினைச்சுடாத... எங்க ரெஸ்ட்ராண்ட் ரொம்ப ஹைஃபையானது... உன்னை மாதிரி ஆளுங்களை அங்க பாத்திரம் தேய்க்கக்கூட அப்பாய்ண்ட் பண்ணமாட்டோம்.... எல்லாரும் க்வாலிஃபைட் ஸ்டாப்ஸ்... கிடார் வாசிக்கிறவனும் ஃப்ளூட் வாசிக்கிறவனும் கரண்டி பிடிக்கிற மெஸ்ஸே இப்பிடி வளர்ந்து நிக்குறப்ப எங்க ரெஸ்ட்ராண்ட் வளராதா? அது வளர்ந்ததுக்கு அப்புறம் நான் என்ன கிழிச்சேன்னு உனக்குத் தெரியும்”
அவள் சமீரிடம் அதிகப்படி கர்வத்துடன் பேசியது அமைதியாய் செல்வோமென நினைத்த மாதவனைச் சீண்டிவிட்டது.
“சரி! நீயும் மனோவும் கிழிச்சுட்டு வந்து பேசுங்க... இப்ப வழிய விட்டு நகரு”
மாதவனின் உதாசீனம் மஹதியை சிலிர்த்தெழ செய்தது. ஒரு காலத்தில் மஹி மஹி என பூனைக்குட்டி போல என் காலைச் சுற்றி வந்தவனுக்கு இப்போது இவ்வளவு அலட்சியமா? இவனை விடக்கூடாது. வலிக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/
#நித்யாமாரியப்பன்
“ரொம்ப சந்தோசம் தம்பி... உங்க கேட்டரிங் சர்வீஸ் திருப்தியா இருந்துச்சு... இனிமே நம்ம வீட்டு விசேசம் எல்லாத்துக்கும் உங்க சாப்பாடு தான்... சீக்கிரமே நீங்களும் கல்யாணச்சாப்பாடு போடணும்... அதை மறந்துடாதிங்க”
பெரியவர் மனதாற வாழ்த்தினார்.
மாதவனுக்கு அவரது வாழ்த்தில் பிற்பாதி பலிக்கப்போவதில்லை என்ற எண்ணம் சிரிப்பை வரவழைத்தது. பெரியவரோ கல்யாணப்பேச்சை எடுத்ததும் மாதவனுக்கு வெட்கம் வந்துவிட்டதென நினைத்துக்கொண்டு கிளம்பினார்.
சமீரோடு சேர்ந்து பாத்திரங்களை மினிவேனில் ஏற்றிக் கொண்டிருந்தபோது தான் அச்சம்பவம் நடந்தேறியது.
அவள் அங்கே வந்தாள். வந்தவள் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் விதி அவளைப் பேசவைத்தது.
“எதையோ சாதிக்கப்போறேன்னு கிராமத்துக்கு வந்து கடைசில சமையல்காரனா நிக்கிறிங்களே மாதவன்... த்சூ! பாவம் நீங்க... உங்க ராசி லெச்சணம் என்னனு சொல்லியும் பெரியப்பா கேக்கல... அவங்க மகன் இன்னும் எத்தனை மாசம் பொண்டாட்டி கூட வாழப்போறானோ? கடவுளுக்கு தான் வெளிச்சம்”
அவளது பேச்சு சமீருக்கு எரிச்சலை உண்டாக்கியது.
“வாய மூடு மஹதி”
மாதவன் அவனைக் கண்களால் பொறுமை காக்கும்படி வேண்டிக்கொண்டது வீணானது.
சமீர் அந்த மஹதியை இன்று சும்மா விடுவதாக இல்லை.
“என் ஃப்ரெண்டை சொல்லுற... நீ மட்டும் பெருசா என்ன வாழ்ந்து கிழிச்சிட்ட? அந்த மனோகர் கூட ஜோடி சேர்ந்து சுத்துறத தவிர வேற என்ன செஞ்ச நீ?”
மஹதி என்பவள் சமீரைப் பார்த்த பார்வையில் ஐம்பது சதவிகிதம் அலட்சியமும் ஐம்பது சதவிகிதம் கேலியும் கலந்திருந்தது.
“சமையல்காரனுக்கு அசிஸ்டெண்டா இருக்குறவன் தானே, உனக்கு சுத்துவட்டாரத்துல நடக்குறதை யாருமே சொல்லலையா சமீர்? நானும் மனோகரும் சேர்ந்து குத்தாலத்துல ஒரு ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்... இடம் பாத்து வாடகையும் குடுத்தாச்சு... செஃப், ஸ்டாஃப்ஸ் எல்லாரும் ரெடி.... வர்ற வெள்ளிக்கிழமை க்ராண்ட் ஓப்பனிங்குக்கு சிங்கர் சரணை இன்வைட் பண்ணிருக்கோம்... உங்க ஓட்டுவீடு மெஸ் மாதிரி நினைச்சுடாத... எங்க ரெஸ்ட்ராண்ட் ரொம்ப ஹைஃபையானது... உன்னை மாதிரி ஆளுங்களை அங்க பாத்திரம் தேய்க்கக்கூட அப்பாய்ண்ட் பண்ணமாட்டோம்.... எல்லாரும் க்வாலிஃபைட் ஸ்டாப்ஸ்... கிடார் வாசிக்கிறவனும் ஃப்ளூட் வாசிக்கிறவனும் கரண்டி பிடிக்கிற மெஸ்ஸே இப்பிடி வளர்ந்து நிக்குறப்ப எங்க ரெஸ்ட்ராண்ட் வளராதா? அது வளர்ந்ததுக்கு அப்புறம் நான் என்ன கிழிச்சேன்னு உனக்குத் தெரியும்”
அவள் சமீரிடம் அதிகப்படி கர்வத்துடன் பேசியது அமைதியாய் செல்வோமென நினைத்த மாதவனைச் சீண்டிவிட்டது.
“சரி! நீயும் மனோவும் கிழிச்சுட்டு வந்து பேசுங்க... இப்ப வழிய விட்டு நகரு”
மாதவனின் உதாசீனம் மஹதியை சிலிர்த்தெழ செய்தது. ஒரு காலத்தில் மஹி மஹி என பூனைக்குட்டி போல என் காலைச் சுற்றி வந்தவனுக்கு இப்போது இவ்வளவு அலட்சியமா? இவனை விடக்கூடாது. வலிக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/
#நித்யாமாரியப்பன்