• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் மன வானில்...💑👩‍❤️‍👩👫🕴️💗💕

மனோஜா

✍️
Writer
நான் அரசுப்பணித் தேர்வு எழுத பயிற்சி பெரும் மையத்திற்கு நான் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். பல்லடம் வழியாகக் கோவை செல்லும் பேருந்தில் என் பயணம் இருக்கும். காலை நேரம் என்பதால் சரியாக ஐந்தரை மணிக்கு பேருந்து பல்லடத்தில் நுழையும்.

அங்குதான் அந்த பெண்மணியைச் சந்திப்பேன். அம்முக்கா…

அம்முக்கா… பேருந்தில் வருபவர்களிடம்
யாசகம் கேட்பார்கள். ஏன் அவர்களுக்கு அந்த நிலை?

அவர் ஒரு திருநங்கை. அவரிடம் பேசியபோது மேலும் அதிர்ச்சியான தகவல்கள்

எனக்குக் கிடைத்தது. அவர் குடும்பம் வட இந்தியாவில் இருக்கிறது.
அதிலும் காவல் துறையில் பணிபுரியும் நபர்கள் நிறைந்த குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவர் ஒரு திருநங்கை என்று உணர்ந்த போது குடும்பமே ஆடிப் போய்விட்டது.

அம்முக்கா வாங்கிய அடிகள் ஏராளம். சொந்தக் குடும்பமே அவரை தரக் குறைவாக நடத்தியுள்ளனர். அதனால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அவர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஆணாக இருந்த அவர் அம்மு என்ற பெண்ணாக மாறிவிட்டார். இதுதான் அம்முக்காவின் கதை

தற்போது கூட பல்லடம் சென்றால் என் நினைவுக்கு சட்டென்று வருவது அம்முக்காதான்.



அம்முக்கா பிறப்பில் ஆண்தான். ஆனால் அவர் மனதளவில் பெண். டிரான்ஸ் ஜெண்டர் என்பதுதான் இவர்களின் அடையாளம். இப்போது மக்களாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டுவருகிறது.

இது மனிதர்களுக்கு மட்டும் கிடையாது. விலங்குகளுக்கும் பொருந்தும். இவ்வளவு ஏன் என்னுடைய பாட்டி வீட்டில் ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்த்தார்கள். அது மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தது.

இன்று பார்க்கப் போகும் விஷயம் இதற்கு தொடர்புடையது.

பாலியல் ஒருங்கிணைவுகள் அதாவது செக்சுவல் ஓரியண்டேசன் பற்றி இன்று பார்ப்போம்.

பொதுவாக விடலைப் பருவத்தில் எதிர்பாலரிடம் ஈர்ப்பு, காதல் எல்லாம் தோன்றும். நம் உடலைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். விடலைப் பருவம் பிரேக் இல்லாமல் அதிக வேகத்தில் ஓடும் வாகனத்தைப் போல் ஹார்மோன் மாற்றத்தால் தடுமாறும். பாலியல் எண்ணங்களும் தோன்றும். மனித விலங்கு தன்னுடைய துணையைத் தேட ஆரம்பிக்கும். பாலியல் ஒருங்கிணைவுகள் இதிலிருந்துதான் ஆரம்பிக்கும்.

பாலியல் ஒருங்கிணைப்பு என்பது உணர்வு ரீதியில் காதல் வயப்படல் அல்லது பாலியல் ஈர்ப்பை ஒருவர் மற்றொரு நபரின் மீது இருப்பதாக தோன்றுதல் ஆகும். அந்த மற்றொரு நபர் ஆணாக இருக்கலாம். இல்லை பெண்ணாக இருக்கலாம். இரண்டுமே தவறில்லை. அது இயற்கை.

பாலியல் ஒருங்கிணைப்பில் அறுபது வகைகளுக்கு மேலிருந்தாலும் நாம் நாலு வகைகள் பற்றி மட்டும் இக்கட்டுரையில் பேசுவோம்.

ஹெட்டிரோசெக்சுவல் : இந்த வகை அண்ணலும் நோக்கினாள் ; அவளும் நோக்கினாள் என்பது போல் எதிர்பாலிரிடம் ரொமாண்டிக் மற்றும் உடல் ஈர்ப்பு இருக்கும். இவர்களை ஸ்ட்ரெய்ட் என்றும் அழைப்பர். இதுதான் சோ கால்ட் நார்மல் என்று சொல்லப்படும் வகை.

ஹோமோசெக்சுவல் : நான் டீனேஜில் இருக்கும் போது நிறைய பத்திரிக்கைகளில் ஓரின சேர்க்கையாளர்ளை முறை தவறிய உறவு மற்றும் அதனால் குற்றங்கள் நடைபெறுவதாகச் சித்தரிப்பர். இருபாலர் செய்யும் காதல் எத்தனை வெட்டுக்குத்தில் முடிந்தது என்று நான் சொல்ல வேண்டியது இல்லை.
இந்த வகையில் தன் பாலினத்தவரிடம் ஈர்ப்பு இருக்கும். லெஸ்பியன் , கே இந்த வகையைச் சார்ந்தவர்.

பைசெக்சுவல் : பல பேருக்கு இப்படி ஒரு வகையினர் இருப்பது தெரியாது என்று நினைக்கிறேன். இந்த வகையினர் ஆண், பெண் என்று இருபாலரிடமும் ஈர்க்கப்படுவர். அவர்களால் ஒரு முறை ஆணின் மீது காதல் வயப்பட முடிந்தால் இன்னொரு முறை பெண்ணையும் காதலிக்க முடியும். உடல் ரீதியான ஈர்ப்பும் அப்படித்தான்.

எசெக்சுவல் : இந்த வகையினருக்கு உடலுறவின் மீது ஆர்வம் இருக்காது. ஆனால் உணர்வுப் பூர்வமாக பிறரிடம் நெருக்கமாக உணர முடியும்.

இதில் இன்னும் வகைகள் போய்க்கொண்டே இருக்கும். ஆனால் மேற்கண்டவை அடிப்படை. ஒருவர் ஹோமோசெக்சுவல் அல்லது பைசெக்சுவலாக இருப்பதும் இயற்கைதான். இதில் முகம் சுளிக்க ஒன்றுமில்லை. ஓரினச் சேர்க்கை விலங்குகள் உலகத்திலும் சாதாரணம். சந்தேகம் என்றால் நேசஷனல் ஜியோகிராபி வெப்சைடுகளில் கட்டுரைகள் இருக்கும்.

பாலியல் ஒருங்கிணைப்புகள் பற்றி நான் அதிக அளவில் கட்டுரைகள் படித்தது இந்தியன் எக்ஸ்பிரசில் மட்டும்தான். மற்ற பத்திரிக்கைகள் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் எழுதுவதில்லை.

பைனல் டச் ஒன்று கொடுத்து
விடுகிறேன். நம் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு தங்களுடைய உணர்வை வெளிப்படுத்த முடியாது. குடும்ப மரியாதை , அவமானம் மற்றும் சமூக எதிர்ப்புகளுக்கு பயந்து எதிர் பாலினத்தவரை திருமணம் செய்து குழந்தை குடும்பமாக வாழ்பவர்கள் அநேகம்.

இந்தக் கட்டுரையை எழுதக் காரணம் என்னுடைய அம்மா. அம்மா ஒரு ஆர்த்தடக்ஸ் ஃபேம்லியால் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டவர். எட்டாவது வரை கூட முழுதாகப் படிக்கவில்லை. நானும் அம்மாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி பேச நேர்ந்தது. அவர்களுக்கு இந்த காரணத்தால் இப்படி நடக்கிறது என்று புரிய வைத்தேன். அவரும் புரிந்து கொண்டார். அதனால் இது இன்னும் பலருக்கு தெரியட்டும் என்று எழுதினேன்.

அன்புடன்

மனோஜா.

 

Attachments

  • eiANKB422168.jpg
    eiANKB422168.jpg
    674.4 KB · Views: 90

மனோஜா

✍️
Writer
உங்களுக்கு எதாவது விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கமென்டில் சொல்லவும் . அதிலும் ஒரு நூலைப் போட்டுவிடலாம்.💛💛💛💜
 

Nithya Mariappan

✍️
Writer
நான் அரசுப்பணித் தேர்வு எழுத பயிற்சி பெரும் மையத்திற்கு நான் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். பல்லடம் வழியாகக் கோவை செல்லும் பேருந்தில் என் பயணம் இருக்கும். காலை நேரம் என்பதால் சரியாக ஐந்தரை மணிக்கு பேருந்து பல்லடத்தில் நுழையும்.

அங்குதான் அந்த பெண்மணியைச் சந்திப்பேன். அம்முக்கா…

அம்முக்கா… பேருந்தில் வருபவர்களிடம்
யாசகம் கேட்பார்கள். ஏன் அவர்களுக்கு அந்த நிலை?

அவர் ஒரு திருநங்கை. அவரிடம் பேசியபோது மேலும் அதிர்ச்சியான தகவல்கள்

எனக்குக் கிடைத்தது. அவர் குடும்பம் வட இந்தியாவில் இருக்கிறது.
அதிலும் காவல் துறையில் பணிபுரியும் நபர்கள் நிறைந்த குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவர் ஒரு திருநங்கை என்று உணர்ந்த போது குடும்பமே ஆடிப் போய்விட்டது.

அம்முக்கா வாங்கிய அடிகள் ஏராளம். சொந்தக் குடும்பமே அவரை தரக் குறைவாக நடத்தியுள்ளனர். அதனால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அவர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஆணாக இருந்த அவர் அம்மு என்ற பெண்ணாக மாறிவிட்டார். இதுதான் அம்முக்காவின் கதை

தற்போது கூட பல்லடம் சென்றால் என் நினைவுக்கு சட்டென்று வருவது அம்முக்காதான்.




அம்முக்கா பிறப்பில் ஆண்தான். ஆனால் அவர் மனதளவில் பெண். டிரான்ஸ் ஜெண்டர் என்பதுதான் இவர்களின் அடையாளம். இப்போது மக்களாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டுவருகிறது.

இது மனிதர்களுக்கு மட்டும் கிடையாது. விலங்குகளுக்கும் பொருந்தும். இவ்வளவு ஏன் என்னுடைய பாட்டி வீட்டில் ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்த்தார்கள். அது மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தது.

இன்று பார்க்கப் போகும் விஷயம் இதற்கு தொடர்புடையது.

பாலியல் ஒருங்கிணைவுகள் அதாவது செக்சுவல் ஓரியண்டேசன் பற்றி இன்று பார்ப்போம்.

பொதுவாக விடலைப் பருவத்தில் எதிர்பாலரிடம் ஈர்ப்பு, காதல் எல்லாம் தோன்றும். நம் உடலைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். விடலைப் பருவம் பிரேக் இல்லாமல் அதிக வேகத்தில் ஓடும் வாகனத்தைப் போல் ஹார்மோன் மாற்றத்தால் தடுமாறும். பாலியல் எண்ணங்களும் தோன்றும். மனித விலங்கு தன்னுடைய துணையைத் தேட ஆரம்பிக்கும். பாலியல் ஒருங்கிணைவுகள் இதிலிருந்துதான் ஆரம்பிக்கும்.

பாலியல் ஒருங்கிணைப்பு என்பது உணர்வு ரீதியில் காதல் வயப்படல் அல்லது பாலியல் ஈர்ப்பை ஒருவர் மற்றொரு நபரின் மீது இருப்பதாக தோன்றுதல் ஆகும். அந்த மற்றொரு நபர் ஆணாக இருக்கலாம். இல்லை பெண்ணாக இருக்கலாம். இரண்டுமே தவறில்லை. அது இயற்கை.

பாலியல் ஒருங்கிணைப்பில் அறுபது வகைகளுக்கு மேலிருந்தாலும் நாம் நாலு வகைகள் பற்றி மட்டும் இக்கட்டுரையில் பேசுவோம்.

ஹெட்டிரோசெக்சுவல் : இந்த வகை அண்ணலும் நோக்கினாள் ; அவளும் நோக்கினாள் என்பது போல் எதிர்பாலிரிடம் ரொமாண்டிக் மற்றும் உடல் ஈர்ப்பு இருக்கும். இவர்களை ஸ்ட்ரெய்ட் என்றும் அழைப்பர். இதுதான் சோ கால்ட் நார்மல் என்று சொல்லப்படும் வகை.

ஹோமோசெக்சுவல் : நான் டீனேஜில் இருக்கும் போது நிறைய பத்திரிக்கைகளில் ஓரின சேர்க்கையாளர்ளை முறை தவறிய உறவு மற்றும் அதனால் குற்றங்கள் நடைபெறுவதாகச் சித்தரிப்பர். இருபாலர் செய்யும் காதல் எத்தனை வெட்டுக்குத்தில் முடிந்தது என்று நான் சொல்ல வேண்டியது இல்லை.
இந்த வகையில் தன் பாலினத்தவரிடம் ஈர்ப்பு இருக்கும். லெஸ்பியன் , கே இந்த வகையைச் சார்ந்தவர்.

பைசெக்சுவல் : பல பேருக்கு இப்படி ஒரு வகையினர் இருப்பது தெரியாது என்று நினைக்கிறேன். இந்த வகையினர் ஆண், பெண் என்று இருபாலரிடமும் ஈர்க்கப்படுவர். அவர்களால் ஒரு முறை ஆணின் மீது காதல் வயப்பட முடிந்தால் இன்னொரு முறை பெண்ணையும் காதலிக்க முடியும். உடல் ரீதியான ஈர்ப்பும் அப்படித்தான்.

எசெக்சுவல் : இந்த வகையினருக்கு உடலுறவின் மீது ஆர்வம் இருக்காது. ஆனால் உணர்வுப் பூர்வமாக பிறரிடம் நெருக்கமாக உணர முடியும்.

இதில் இன்னும் வகைகள் போய்க்கொண்டே இருக்கும். ஆனால் மேற்கண்டவை அடிப்படை. ஒருவர் ஹோமோசெக்சுவல் அல்லது பைசெக்சுவலாக இருப்பதும் இயற்கைதான். இதில் முகம் சுளிக்க ஒன்றுமில்லை. ஓரினச் சேர்க்கை விலங்குகள் உலகத்திலும் சாதாரணம். சந்தேகம் என்றால் நேசஷனல் ஜியோகிராபி வெப்சைடுகளில் கட்டுரைகள் இருக்கும்.

பாலியல் ஒருங்கிணைப்புகள் பற்றி நான் அதிக அளவில் கட்டுரைகள் படித்தது இந்தியன் எக்ஸ்பிரசில் மட்டும்தான். மற்ற பத்திரிக்கைகள் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் எழுதுவதில்லை.

பைனல் டச் ஒன்று கொடுத்து
விடுகிறேன். நம் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு தங்களுடைய உணர்வை வெளிப்படுத்த முடியாது. குடும்ப மரியாதை , அவமானம் மற்றும் சமூக எதிர்ப்புகளுக்கு பயந்து எதிர் பாலினத்தவரை திருமணம் செய்து குழந்தை குடும்பமாக வாழ்பவர்கள் அநேகம்.

இந்தக் கட்டுரையை எழுதக் காரணம் என்னுடைய அம்மா. அம்மா ஒரு ஆர்த்தடக்ஸ் ஃபேம்லியால் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டவர். எட்டாவது வரை கூட முழுதாகப் படிக்கவில்லை. நானும் அம்மாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி பேச நேர்ந்தது. அவர்களுக்கு இந்த காரணத்தால் இப்படி நடக்கிறது என்று புரிய வைத்தேன். அவரும் புரிந்து கொண்டார். அதனால் இது இன்னும் பலருக்கு தெரியட்டும் என்று எழுதினேன்.


அன்புடன்

மனோஜா.
படிச்சவங்களே ஓரினச்சேர்க்கையாளர்களை இயற்கைக்கு முரணானவங்கனு சொல்லுறாங்க சிஸ்... இதுல்லாம் மனம் சார்ந்த உணர்வுகள்னு அவங்களுக்கே புரியல... அவங்களை அசிங்கமா சித்தரிக்கிற நகைச்சுவைக்காட்சிகளை சின்னவயசுல புரியாம பாத்திருக்கேன்... ஆனா விவரம் தெரிஞ்சதும் அதுல்லாம் எவ்ளோ அபத்தம்னு புரியுது... இன்னுமே சமூகத்துல LGBTQ பத்தி தெளிவு இல்ல
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom