வணக்கம் சிஸ்,
Feel good love story
அழகான எழுத்துநடைல இயல்பான வகையில் எந்தவித டிவிஸ்ட் அண்ட் டெர்ன்ஸ் இல்லாம தெளிந்த நீரோடையாய் சென்றது கதை. Nalla presentation and execution. அவசரம் அவசரமா முடிக்கனும்னு இல்லாம நிதானமா எல்லா கதாபாத்திரங்களையும் இணைத்து அவரவருக்கான நிலையை உணர்த்தி நிறைவு செய்தது அருமை. மருத்துவர்கள் விரைப்பாகவே காண்பிக்கும் எழுத்துலகில் இப்படியான கலகலப்பான நண்பர்கள் குழாமுடன் மருத்துவன் கிருஷ்ணா அதுவும் கடை வைத்திருக்கும் அப்பா அம்மாக்கு மருத்துவனாய் மகன்னு அவனை வெகு எதார்த்தமாக நம்முள் ஒருவன் போல காண்பித்தது பிடித்தது. எனக்கு அந்த முதல் பஸ் காட்சியே ரொம்ப பிடிச்சிது. பிருந்தாவின் முன் வாழ்க்கை அறிந்து அவளுடன் நட்பாய் பழகி இயல்பாக்கி காதலை உரைத்தது அவனின் தாய் அதை ஏற்று கொண்டது எல்லாமே நல்லா இருந்துச்சு. குற்றயுணர்வால் வாடும் தந்தை, கடைசியாக பர்வதத்திடம் காண்பிக்கும் கோபம் செம்ம. எனக்கு முதல் சில காட்சிகள்ல தன்னோட மனைவியின் நிலையை காண சகிக்காமல் பித்து நிலையில் இருந்தார்னு சொன்னது சரினாலும் பிள்ளைகளை நினைத்து அதுவும் அந்த நிலையில் பிள்ளைகள் என்ன செய்வாங்கனு அவர் கொஞ்சம் சுதாரிச்சிருக்கனும். அந்த இடத்துல குடும்ப சுமை மொத்தத்தையும் அவர் மகன் மகள் தலைல ஏத்திட்ட உணர்வு. கிருஷ்ணா நண்பன் டாக்டரா இருந்தும் தண்ணி அடிச்சு மாதிரி வந்த அவனது இன்ட்ரோ சீன் வேற மாதிரி இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். சமூக பொறுப்புள்ள வேலையில் இருந்துட்டு அவங்களே தப்பை ஆதரிக்கலாமான்ற எண்ணம் தான்.
மொத்தமாக நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது சிஸ்.