உன்னில் இதயம் அளாவுதே - 3
“மதினி!”
பற்பசையோடு இருந்த ப்ரஷை கையில் பிடித்தபடி அவள் சிலையாய் நிற்க சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த சாந்தியோ
“என்னடி இது? இன்னைக்கே கடைக்குப் போறியா?” என்று கேட்க
“இங்க இருந்து என்ன செய்யப்போறேன் அத்தை? உன் மகன் எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கான்னு தெரியல... இந்த லெட்சணத்துல மறுவீட்டு விருந்து ஒன்னு தான் குறைச்சல்... கடைக்குப் போனா மாசம் முடிஞ்சதும் சம்பளமாச்சும் வரும்... நீ ஒன்னு பண்ணு, இடியாப்பத்தையே மதியானத்துக்கும் டிபன் பாக்ஸ்ல போட்டு குடுத்துடு... வெளிய சாப்பிட்டா என் சம்பளத்துக்குக் கட்டுப்படி ஆகாது அத்தை... நாளையில இருந்து நான் சீக்கிரம் எந்திரிச்சு சமைச்சுக்கிறேன்” என்றாள் அவள்.
அவளது பேச்சு மூவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனமொன்றில் விற்பனைப்பெண்ணாக பணிபுரிகிறாள் ஆனந்தி. நாள் முழுக்க கால் கடுக்க நிற்கும் வேலை தான். பதினொன்றாம் வகுப்பு கூட தாண்டாதவளுக்கு வேறென்ன வேலை கிடைக்கும்?
அந்நேரம் பார்த்து வீட்டுக்குள் வந்த சரவணன் தங்கை வேலை பார்க்கும் கடைக்குக் கிளம்பி நிற்பதைக் கண்டதும் பற்களை கடித்தவன்
“நீ வீட்டு மானத்தை வாங்கணும்னு கங்கணம் கட்டிருக்கியா? நேத்து தான் கல்யாணம் ஆகிருக்கு... இன்னைக்கு நீ வேலைக்குப் போனா தெருவுல உள்ளவங்க என்ன பேசுவாங்க?” என கத்தினான்.
ஆனந்தி காதை சுண்டுவிரலால் நிமிண்டிவிட்டு “எவன் என்ன பேசுனா எனக்கு என்ன? நான் வேலைக்குத் தானே போறேன், எவன் கூடவும் ஓடிப்போகலையே... நீ என்ன புதுசா குடும்பமானத்தைப் பத்தி கவலைப்படுற? உனக்குத் தான் நாங்க எக்கேடு கெட்டாலும் கவலை இல்லையே... அப்பா ஆக்சிடெண்ட்ல காலை இழந்து வேலைக்குப் போகமுடியாம ஆனப்ப கூட அண்ணி முந்தானைய பிடிச்சுட்டுப் போனவன் தானே நீ... அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் எங்களை நாங்க தானே பாத்துக்குறோம்... உன் பொண்டாட்டி மகராசி மட்டும் கல்யாணம் கருமாதினு எங்க வீட்டுப்படி ஏறலைனா இப்பவும் எதுவும் மாறிருக்காது... சும்மா இங்க வந்து சாமியாடாம வழிய விடு... இல்லனா அண்ணன்னு கூட பாக்க மாட்டேன்” என்று சொல்ல சரவணன் குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்து விலகி நின்றான்.
ஆவுடையப்பனையும் சாந்தியையும் பார்த்தவள் “நான் கிளம்புறேன்... உங்க மகன் வந்தா அடுத்து அவன் என்ன பண்ணலாம்னு இருக்கான்னு கேட்டு வைங்க... காலம் முழுக்க டாஸ்மாக் கடையே கதினு கிடப்பானா இல்ல வீடு குடும்பம் தங்கச்சிய பத்தி யோசிச்சு முடிவெடுப்பானானு எனக்குத் தெரியணும்... அவன் குடிச்சி கட்டமண்ணா போவேன்னு சொன்னான்னு வச்சுக்கோங்க, இந்த ஆனந்தியோட சுயரூபத்தைப் பாப்பான்... மறுபடியும் சொல்லுறேன், நான் அவனை என்ன செஞ்சாலும் நீங்க கேள்வி கேக்கக்கூடாது....................
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-3.4844/
#உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
“மதினி!”
பற்பசையோடு இருந்த ப்ரஷை கையில் பிடித்தபடி அவள் சிலையாய் நிற்க சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த சாந்தியோ
“என்னடி இது? இன்னைக்கே கடைக்குப் போறியா?” என்று கேட்க
“இங்க இருந்து என்ன செய்யப்போறேன் அத்தை? உன் மகன் எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கான்னு தெரியல... இந்த லெட்சணத்துல மறுவீட்டு விருந்து ஒன்னு தான் குறைச்சல்... கடைக்குப் போனா மாசம் முடிஞ்சதும் சம்பளமாச்சும் வரும்... நீ ஒன்னு பண்ணு, இடியாப்பத்தையே மதியானத்துக்கும் டிபன் பாக்ஸ்ல போட்டு குடுத்துடு... வெளிய சாப்பிட்டா என் சம்பளத்துக்குக் கட்டுப்படி ஆகாது அத்தை... நாளையில இருந்து நான் சீக்கிரம் எந்திரிச்சு சமைச்சுக்கிறேன்” என்றாள் அவள்.
அவளது பேச்சு மூவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனமொன்றில் விற்பனைப்பெண்ணாக பணிபுரிகிறாள் ஆனந்தி. நாள் முழுக்க கால் கடுக்க நிற்கும் வேலை தான். பதினொன்றாம் வகுப்பு கூட தாண்டாதவளுக்கு வேறென்ன வேலை கிடைக்கும்?
அந்நேரம் பார்த்து வீட்டுக்குள் வந்த சரவணன் தங்கை வேலை பார்க்கும் கடைக்குக் கிளம்பி நிற்பதைக் கண்டதும் பற்களை கடித்தவன்
“நீ வீட்டு மானத்தை வாங்கணும்னு கங்கணம் கட்டிருக்கியா? நேத்து தான் கல்யாணம் ஆகிருக்கு... இன்னைக்கு நீ வேலைக்குப் போனா தெருவுல உள்ளவங்க என்ன பேசுவாங்க?” என கத்தினான்.
ஆனந்தி காதை சுண்டுவிரலால் நிமிண்டிவிட்டு “எவன் என்ன பேசுனா எனக்கு என்ன? நான் வேலைக்குத் தானே போறேன், எவன் கூடவும் ஓடிப்போகலையே... நீ என்ன புதுசா குடும்பமானத்தைப் பத்தி கவலைப்படுற? உனக்குத் தான் நாங்க எக்கேடு கெட்டாலும் கவலை இல்லையே... அப்பா ஆக்சிடெண்ட்ல காலை இழந்து வேலைக்குப் போகமுடியாம ஆனப்ப கூட அண்ணி முந்தானைய பிடிச்சுட்டுப் போனவன் தானே நீ... அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் எங்களை நாங்க தானே பாத்துக்குறோம்... உன் பொண்டாட்டி மகராசி மட்டும் கல்யாணம் கருமாதினு எங்க வீட்டுப்படி ஏறலைனா இப்பவும் எதுவும் மாறிருக்காது... சும்மா இங்க வந்து சாமியாடாம வழிய விடு... இல்லனா அண்ணன்னு கூட பாக்க மாட்டேன்” என்று சொல்ல சரவணன் குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்து விலகி நின்றான்.
ஆவுடையப்பனையும் சாந்தியையும் பார்த்தவள் “நான் கிளம்புறேன்... உங்க மகன் வந்தா அடுத்து அவன் என்ன பண்ணலாம்னு இருக்கான்னு கேட்டு வைங்க... காலம் முழுக்க டாஸ்மாக் கடையே கதினு கிடப்பானா இல்ல வீடு குடும்பம் தங்கச்சிய பத்தி யோசிச்சு முடிவெடுப்பானானு எனக்குத் தெரியணும்... அவன் குடிச்சி கட்டமண்ணா போவேன்னு சொன்னான்னு வச்சுக்கோங்க, இந்த ஆனந்தியோட சுயரூபத்தைப் பாப்பான்... மறுபடியும் சொல்லுறேன், நான் அவனை என்ன செஞ்சாலும் நீங்க கேள்வி கேக்கக்கூடாது....................
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-3.4844/
#உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்