உன்னில் இதயம் அளாவுதே - 2
அகிலனும் மறுபேச்சு பேசாமல் அன்னையிடம் சென்றான்.
அவரோ அன்று நடந்தேற வேண்டிய சாந்தி முகூர்த்தத்தைப் பற்றி கோடிட்டுக் காட்ட அகிலனுக்குச் சங்கடமாக இருந்தது.
“இதுக்கு என்னம்மா அவசரம்?” என்று தயங்கியவனை சாந்தி பார்த்த பார்வையில் அந்த வீடு பற்றியெரியாதது ஆச்சரியம்.
“இப்ப தான் நான் அவசரப்படாம யோசிச்சு முடிவெடுத்திருக்கேன் அகிலு... உன் பேச்சைக் கேட்டு அவசர அவசரமா கல்யாணம் ஏற்பாடு பண்ணி அது நின்னு ஊர் முன்னாடி தலை குனிஞ்சது போதும்... கிடைச்ச வாழ்க்கைய ஒழுங்கா வாழ பாரு... மறுபடியும் உன்னால நானோ உன் அப்பாவோ தலைகுனிஞ்சு நிக்க தயாரா இல்ல” என சீறினார் சாந்தி.
அவரது சீற்றத்தில் அகிலனின் கண்கள் கலங்கியது. பத்து நாட்களுக்கு முன்பு வரை அன்பே உருவாக இருந்த அன்னை. அவரும் தான் எவ்வளவு பழிசொற்களைத் தாங்குவார்?
“சாந்தி”
அவன் கண் கலங்குவதைப் பார்த்து மனைவியை அதட்டினார் ஆவுடையப்பன்.
“என்னை ஏன் அதட்டுறிங்க? எல்லாம் இவன் செஞ்ச தப்பு தானே”
“அவன் தெரிஞ்சா பண்ணுனான்? உன் அண்ணனும் அவர் மகளும் பண்ணுன காரியத்தை மறந்துட்டியா? பத்து நாள்ல கல்யாணம், ஊர் முழுக்க பத்திரிக்கை குடுத்தாச்சுனு தெரிஞ்சும் துணிச்சலா கல்யாணத்தை நிறுத்துனாங்க... ஏன்? இவன் செய்யாத தப்புக்காக... இவன் அப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுவானானு சுப்ரஜா யோசிச்சிருக்க வேண்டாமா? சும்மா அகில் கிட்ட குரலை உயர்த்தி பேசாத... இந்த வீட்டுலயும், இதுல இருக்குற ஒவ்வொரு பொருள்லயும் பத்தொன்பது வயசுல இருந்து அவன் தூங்காம கம்பெனில ஷிப்ட் பாத்து உழைச்ச உழைப்பு இருக்கு... அவன் மட்டுமா உன் அண்ணன் மகளை விரும்புனான்? நீயும் வார்த்தைக்கு வார்த்தை அந்த சுப்ரஜாவை மருமகள் மருமகள்னு கொண்டாடுனல்ல... அவளை தலை மேல தூக்கி வச்சு ஆடுனல்ல... அவ காதலிச்சவனையும் நம்பல... பாசம் காட்டுன உன்னையும் மதிக்கல... சும்மா இவனைத் திட்டாத”
“எனக்கு மட்டும் என் பிள்ளைய திட்டணும்னு ஆசையாங்க?”
குரல் கமற கண்ணீர் கசிந்த விழிகளை புடவை முந்தானையில் துடைத்துக்கொண்டார் சாந்தி.
அகிலன் வரவழைத்துக்கொண்ட இயல்பான குரலில் “அழாதம்மா... அப்பா ஏதோ ஆதங்கத்துல பேசிட்டார்... நீ சொன்ன மாதிரி இனிமே ஒழுங்கா நடந்துப்பேன்மா... என்னால இனிமே நீயோ அப்பாவோ வருத்தப்படுற சூழ்நிலை வராது” என்றான்......................
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-2.4826/
#நித்யாமாரியப்பன் #உன்னில்இதயம்அளாவுதே
அகிலனும் மறுபேச்சு பேசாமல் அன்னையிடம் சென்றான்.
அவரோ அன்று நடந்தேற வேண்டிய சாந்தி முகூர்த்தத்தைப் பற்றி கோடிட்டுக் காட்ட அகிலனுக்குச் சங்கடமாக இருந்தது.
“இதுக்கு என்னம்மா அவசரம்?” என்று தயங்கியவனை சாந்தி பார்த்த பார்வையில் அந்த வீடு பற்றியெரியாதது ஆச்சரியம்.
“இப்ப தான் நான் அவசரப்படாம யோசிச்சு முடிவெடுத்திருக்கேன் அகிலு... உன் பேச்சைக் கேட்டு அவசர அவசரமா கல்யாணம் ஏற்பாடு பண்ணி அது நின்னு ஊர் முன்னாடி தலை குனிஞ்சது போதும்... கிடைச்ச வாழ்க்கைய ஒழுங்கா வாழ பாரு... மறுபடியும் உன்னால நானோ உன் அப்பாவோ தலைகுனிஞ்சு நிக்க தயாரா இல்ல” என சீறினார் சாந்தி.
அவரது சீற்றத்தில் அகிலனின் கண்கள் கலங்கியது. பத்து நாட்களுக்கு முன்பு வரை அன்பே உருவாக இருந்த அன்னை. அவரும் தான் எவ்வளவு பழிசொற்களைத் தாங்குவார்?
“சாந்தி”
அவன் கண் கலங்குவதைப் பார்த்து மனைவியை அதட்டினார் ஆவுடையப்பன்.
“என்னை ஏன் அதட்டுறிங்க? எல்லாம் இவன் செஞ்ச தப்பு தானே”
“அவன் தெரிஞ்சா பண்ணுனான்? உன் அண்ணனும் அவர் மகளும் பண்ணுன காரியத்தை மறந்துட்டியா? பத்து நாள்ல கல்யாணம், ஊர் முழுக்க பத்திரிக்கை குடுத்தாச்சுனு தெரிஞ்சும் துணிச்சலா கல்யாணத்தை நிறுத்துனாங்க... ஏன்? இவன் செய்யாத தப்புக்காக... இவன் அப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுவானானு சுப்ரஜா யோசிச்சிருக்க வேண்டாமா? சும்மா அகில் கிட்ட குரலை உயர்த்தி பேசாத... இந்த வீட்டுலயும், இதுல இருக்குற ஒவ்வொரு பொருள்லயும் பத்தொன்பது வயசுல இருந்து அவன் தூங்காம கம்பெனில ஷிப்ட் பாத்து உழைச்ச உழைப்பு இருக்கு... அவன் மட்டுமா உன் அண்ணன் மகளை விரும்புனான்? நீயும் வார்த்தைக்கு வார்த்தை அந்த சுப்ரஜாவை மருமகள் மருமகள்னு கொண்டாடுனல்ல... அவளை தலை மேல தூக்கி வச்சு ஆடுனல்ல... அவ காதலிச்சவனையும் நம்பல... பாசம் காட்டுன உன்னையும் மதிக்கல... சும்மா இவனைத் திட்டாத”
“எனக்கு மட்டும் என் பிள்ளைய திட்டணும்னு ஆசையாங்க?”
குரல் கமற கண்ணீர் கசிந்த விழிகளை புடவை முந்தானையில் துடைத்துக்கொண்டார் சாந்தி.
அகிலன் வரவழைத்துக்கொண்ட இயல்பான குரலில் “அழாதம்மா... அப்பா ஏதோ ஆதங்கத்துல பேசிட்டார்... நீ சொன்ன மாதிரி இனிமே ஒழுங்கா நடந்துப்பேன்மா... என்னால இனிமே நீயோ அப்பாவோ வருத்தப்படுற சூழ்நிலை வராது” என்றான்......................
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-2.4826/
#நித்யாமாரியப்பன் #உன்னில்இதயம்அளாவுதே