• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,259

Profile posts Latest activity Postings About

  • #சுருதியோடுலயம்சேரவே எபி 17
    விஷாகாவை வித்யாவுடன் இருக்கும்படி சொன்னவர் விஸ்மயாவை மட்டும் அழைத்தார்.

    “எங்கப்பா?”

    “நானும் விபூவும் வாக் போறோம்… நீயும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோயேன்”

    விஸ்மயா மறுப்பு கூறாமல் கிளம்பினாள்.

    அவர்கள் மூவரும் வாக்கிங் போன சமயத்தில் அங்கே பெரிதாக மக்கள் நடமாட்டமில்லை. காற்றாட நடக்கும்போதே வினயன் பேச ஆரம்பித்தார்.

    “வித்யா எப்ப மாம்ஃப்ளூயன்சர் ஆகணும்னு டிசைட் பண்ணுனா, தெரியுமா?”

    தெரியாதெனத் தலையாட்டினாள் விஸ்மயா.

    “விபூவ கன்சீவ் ஆனப்ப” என்றவர் வித்யாவை மாம்ஃப்ளூயன்சர் ஆகத் தூண்டியது எதுவென்ற காரணத்தைக் கூற ஆரம்பித்தார்.

    வித்யாவின் அன்னை அவரைச் செல்லமாக வளர்த்துவிட்டார். விஷாகா பிறந்த போதே குழந்தை வளர்ப்பில் மிகவும் சிரமப்பட்டுப் போனார் அவர். அடுத்து விஸ்மயாவும் சில ஆண்டுகள் இடைவெளியில் பிறக்க விஷாகாவையும் விஸ்மயாவையும் சமாளிக்க துணையாகத் தனது அன்னையைத் தன்னுடன் வைத்துக்கொண்டார்.

    விஷாகாவுக்குப் பன்னிரண்டும் விஸ்மயாவுக்கும் பத்துமாய் வயதானபோது வித்யா மீண்டும் கருவுற்றார். விஷாகா அந்நேரத்தில் பருவமெய்திவிட்டாள்.

    மகள் இச்சமயத்தில் கருவுற்றதை வித்யாவின் தாயாரால் அத்துணை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. வினயனின் அன்னையும் தமக்கையரும் வித்யாவைக் கேலி செய்வதை பார்த்தவருக்கு மகள்மீது வருத்தம்.

    “இந்த வயசுல வயித்தை தள்ளிட்டு நிக்கிறது நல்லாவா இருக்கு? உன் மாமியாரும் நாத்தனாரும் போன வாரம் வீட்டுக்கு வந்தப்ப விஷூ, விஸ்மி கிட்ட வம்பு பேசுறாங்க… ஏன்டி இப்பிடி?”
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே எபி 16
    “ஏன்மா டென்சனா இருக்க?” என ஆதுரமாய் கேட்டவர் ஏதோ பொறி தட்ட வித்யாவை ஆழ்ந்து நோக்கினார்.

    “உங்களை நான் எங்கயோ பாத்திருக்குறேன்” என ஞாபகப்படுத்த முயன்றவரிடம்

    “இன்ஸ்டாக்ராம்ல பாத்திருப்பிங்க… நான் ஒரு மாம்ஃப்ளுயன்சர்” என்ற வித்யா தனது இன்ஸ்டாக்ராம் ஐடியைக் கூறவும் மனோகரியின் வதனம் ஒரு நொடியில் மாறியது.

    “நான் இன்ஸ்டாக்ராம் வந்து…” என வித்யா சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே “ரிஷா” எனச் சத்தமாக அழைத்தார்.

    ரிஷாவும் பழச்சாறுடன் வேகமாக வந்தார்.

    வித்யூத்திடம் “அவங்களுக்கு ஜூஸ் குடு” என்றவாறு எழுந்தவர் ரிஷாவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட விஸ்மயா அவனிடம் பார்வையால் எதுவும் பிரச்சனையா என வினவினாள்.

    வித்யூத்தோ தெரியாதெனத் தோள்களைக் குலுக்கினான். வித்யாவும் வினயனும் மனோகரியின் இந்தத் திடீர் முகமாற்றத்தால் குழம்பியதைக் கண்டுகொண்டவன் “ஜூஸ் குடிங்க ஆன்ட்டி” எனச் சூழலை மாற்ற முயன்றான்.

    சில நிமிடங்கள் இப்படியே கடக்க விஸ்மயாவுக்கோ போனவர்கள் ஏன் இன்னும் வரவில்லை என்ற கலக்கம். அவளது கலக்கத்தைப் போக்க வேண்டியவனோ விபினோடு சேர்ந்து விபாஷினிக்குச் சூப்பர் சிங்கர் பற்றி டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

    எவ்வளவு நேரம் தான் ஜூஸ் குடிப்பது போல் காட்டிக்கொள்வது? சில நிமிட பொறுமைக்குப் பிறகு விஷாகவே வித்யூத்திடம் அவனது அன்னையைப் பற்றி கேட்டுவிட்டாள்.

    அவன் பதிலளிக்க எத்தனித்த சமயத்தில் மனோகரியும் ரிஷாவும் அங்கே வந்து சேர்ந்தனர். ரிஷாவின் முகத்தில் சோகம் கப்பியிருந்தது. வித்யூத்தைப் பரிதாபமாகப் பார்த்தார் அவர்.

    மனோகரி வினயனின் குடும்பத்தைப் பார்த்த பார்வையில் எவ்வித உணர்ச்சியுமில்லை. அவர்களிடம் பேசாமல் மைந்தனின் பக்கம் திரும்பியவர் “இவங்க வீட்டுப்பொண்ணை மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்ல வித்தி… நீ விஸ்மயாவ மறந்துடு” என்று சொல்லி அங்கிருந்த அனைவர் தலையிலும் குண்டைத் தூக்கிப் போட்டார்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மக்களே!

    #சுருதியோடுலயம்சேரவே EPI 15
    “அத்தனை பேர் இருந்த இடத்துல எங்களை மட்டும் அவர் ஸ்பெஷலா கவனிக்க என்ன காரணம்?” இந்தக் கேள்வியை மட்டுமே வினயன் கேட்டார்.

    அதற்குப் பதிலளிக்கும் முன்னர் விஸ்மயாவுக்கு வியர்த்துவிட்டது. எப்போதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பேசும் விஷாகாவும் அமைதி காக்கவும் வித்யாவுக்குச் சரியாகப்படவில்லை.

    “வாயைத் திறந்து பதில் சொல்லுங்கம்மா” என மகள்களிடம் தன்மையாகவே கேட்டார் அவர்.

    தன்னால் சகோதரிகளும் விசாரணை வளையத்துக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை விரும்பாதவளாக விஸ்மயா பதில் சொன்னப்போன சமயத்தில் சரியாக வித்யூத்திடமிருந்து அழைப்பு வந்தது.

    அவளது மொபைல் வித்யாவும் வினயனும் அமர்ந்திருந்த சோபாவுக்கு முன்னே கிடந்த டீபாய் மீது இருந்ததால் ‘ப்ரெய்ன்லெஸ் ஸ்டாக்கர்’ என்ற பெயரில் வந்த அழைப்பை அவர்களும் கவனித்துவிட்டார்கள்.

    அந்தப் பெயரைப் பார்த்ததும் விஸ்மயா சங்கடத்தில் நெளிந்தாள்.

    “அட்டெண்ட் பண்ணி பேசு மயூ” – வித்யா.

    “அப்புறமா பேசிக்கிறேன்மா” பணிவாய் கூறினாள் அவள்.

    அந்தோ பரிதாபம்! வித்யூத்தின் அழைப்பு தவறிய அழைப்பாகிப் போனது.

    இதற்கு மேலும் அமைதி காக்க விரும்பாதவள் “நானும் சிங்கர் வித்யூத்தும் லவ் பண்ணுறோம்மா” என்றாள் மெதுவாக.

    வினயனுக்கும் வித்யாவுக்கும் இச்செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது. எங்கள் மகள் காதலிக்கலாமா என்ற வகையறா அதிர்ச்சி இல்லை அது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏழு நாட்கள் ஒரே இடத்தில் இருந்திருப்பார்களா? அதற்குள் காதல் என்றால் அவர்கள் அதிர்ச்சியடைய மாட்டார்களா?

    “தெளிவா யோசிச்சு தான் அவரைக் காதலிக்கிறியா மயூ? ஏழு நாள் கூட முழுசா பேசிப் பழகாத ஆள் மேல உனக்கு எப்பிடி லவ் வந்துச்சுடா?” வித்யா அதிர்ச்சியைத் தாங்காதவராகக் கேட்டார்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே EPI 14
    அவனது பதில் விஸ்மயாவுக்குப் பிடித்திருந்தது. பெரும்பான்மை ஆண்களைப் போல காதலித்த பெண்ணிடம் ‘நீ என் அம்மா மாதிரிம்மா’ என்று போலியாய் உருகாமல் அன்னைக்கு நிகர் அவர் தான் என்ற உண்மையை அவன் கூறிய விதம் மற்ற ஆண்களிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டியது.

    “நீ ஒரு யூனிக் பீஸ்டா ஹெச்.பி பென்சில்”

    வாய் விட்டு அவனைப் பாராட்டினாள் விஸ்மயா. வித்யூத் இடை வரை குனிந்து கரம் நீட்டி அவளது பாராட்டை ஏற்றுக்கொண்டான். பின் நிமிர்ந்தவன் அவளை நோக்கிக் கரம் நீட்டினான்.

    விஸ்மயா அதைப் பற்ற யோசிக்கவும் “ஸ்டூடியோ வரைக்கும் தனியா வந்தாச்சு… என் கையைப் பிடிக்க மட்டும் ஏன் யோசிக்கிற?” என அவன் கேட்க

    “கையைப் பிடிச்சு நடக்க நான் என்ன குழந்தையா?” என திறமையாகப் பதிலளிப்பது பேசினாள் அவள்.

    வித்யூத் வேகமாகத் தனது வாயைப் பொத்திக்கொண்டவன் “அச்சோ! அப்ப நீ வளந்துட்டியா விஸ்மி? இந்த விபூ இல்ல விபூ, அவன் உன்னை விபாஷினி கூடக் கம்பேர் பண்ணுவான்… நான் கூட நீ இன்னும் குழந்தையா இருக்கனு நினைச்சு தான் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணிட்டேன்… ப்ச் மக்குடா வித்தி நீ” எனத் தன் தலையில் குட்டிக்கொண்டான்.

    “ஓ” என்றவளை தாமதிக்காமல் தன்னருகே இழுத்துக்கொண்டான் வித்யூத்.

    “ஏய்” என ஏதோ சொல்ல வந்தவள் அடுத்து அவனது கரம் அவளது இடையை வளைத்து இழுத்தணைக்கவும் கண்களை விரித்துத் திகைத்து நின்றாள்.

    தனது அருகாமை அவளுக்குக் கொடுத்த திகைப்பை ரசித்தபடி ஒற்றை விரலால் விஸ்மயாவின் வதனத்தை அளந்தான்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே 13
    “அங்கல்லாம் போகவேண்டாம்பா”

    என்ன காரணமென பெற்றோர் கேட்கவும் என்ன பதிலளிப்பதென தெரியாமல் அவள் திகைத்தாள். காரணம் வினயன் வித்யாவோடு போவதாகச் சொன்னது வித்யூத்தின் கான்சர்ட்டுக்கு. அவன் மீதிருந்த கோபம் அவர்களை அங்கே போகக்கூடாதென சொல்ல வைத்தது.

    “நாங்க ரெண்டு பேரும் கோல்ட் ரோ டிக்கெட் புக் பண்ணிட்டோம்டா… போகலனா இருபதாயிரம் ரூபா வேஸ்டா போயிடும்”

    வித்யா இவ்வாறு சொன்னது தான் தாமதம், விஷாகா வெடிக்க ஆரம்பித்தாள்.

    “நம்ம இப்பிடி இருக்குற நிலமைக்கு இருபதாயிரம் ரூபா செலவு பண்ணி கான்சர்ட்டுக்குப் போகணுமாம்மா? ஏன்மா இப்பிடி வீண்செலவு பண்ணுற? இந்த இருபதாயிரம் ரூபா என்னோட பாதி சம்பளம்”

    வித்யா கணவரைப் பார்க்க வினயன் மனைவிக்காகப் பரிந்து பேச ஆரம்பித்தார்.

    “உங்கம்மாக்கு இன்ஸ்டாக்ராம் கொலாபரேசன் மூலமா கிடைச்ச அமௌண்ட்மா விஷூ… அவ ஆசைப்பட்டாளேனு நான் தான் கான்சர்ட்டுக்கு டிக்கெட் புக் பண்ணுனேன்டா”

    “பணம் மட்டும் தான் பிரச்சனைனு நினைக்குறிங்களாப்பா? போன மாசம் ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்ல எவ்ளோ பிரச்சனை நடந்துச்சுனு நியூஸ்ல பாத்திங்க தானே?”

    “அது கான்சர்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியால நடந்த குளறுபடிம்மா விஷூ… வித்யூத்தோட கான்சர்ட்டை நடத்துற கம்பெனி ரொம்ப ஆர்கனைஸ்டா நடந்துவாங்க… நீ வொரி பண்ணிக்காதம்மா… நாங்க பத்திரமா போயிட்டு வந்துடுவோம்”

    விஸ்மயாவும் விஷாகாவும் இதற்கு மேல் வாதிட விரும்பவில்லை. இருவருக்கும் பிரயாண அலுப்பே அதிகம். விபாஷினியை ஓய்வெடுக்கும்படி அனுப்பி வைத்தவர்கள் தங்களது அறைக்குள் சென்று முடங்கினார்கள்.

    விஸ்மயா வென்னீர் குளியலைப் போட்டுவிட்டு உறங்கலாமென நினைத்தவள் குளிக்க ஆயத்தமாகும் போது மொபைலில் நோட்டிபிகேசன் சத்தம் வரவும் ஒரு நொடி நின்றாள்.

    வித்யூத்தாக இருக்குமோ? மனம் உடனே அவனைத் தான் நினைத்தது.

    அவசரமாக மொபைலை எடுத்துப் பார்த்தவள் மெய்யாகவே அவனிடமிருந்து செய்தி வந்திருக்கவும் தாமதிக்காமல் வாட்சப்புக்குள் நுழைந்து செய்தியைப் படித்தாள்.

    “நீ என் மேல செம கடுப்புல இருப்பனு தெரிஞ்சும் உனக்கு மெசேஜ் பண்ணுற என் மனதைரியத்தைப் பாராட்ட மாட்டியா விஸ்மி?”

    அவன் மன்னிப்பு கேட்பான் என எதிர்பார்த்தவள் இப்படி அவன் செய்தி அனுப்பி சீண்டவும் சிலிர்த்துக்கொண்டு பதிலை தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

    “சொல்லாம போனவங்களை கழுவி ஊத்துறது தான் எங்களோட பாரம்பரிய பழக்கம்… என்ன பாரம்பரியத்தை ஃபாலோ பண்ணட்டுமா?”
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே epi 12
    அதே நேரம் வாயில் வைத்த புட்டை விழுங்க முடியாமல் நீளவசனம் பேசியவனை கண்கள் தெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாள் விஸ்மயா. வித்யூத் என்னவென்பது போல புருவத்தை உயர்த்தி வினவவும் வேகமாக விழுங்கி தண்ணீரைக் குடித்தாள்.

    “என் கிட்ட ப்ரபோஸ் பண்ணுறப்ப கூட இதெல்லாம் நீ சொல்லவேல்ல… இப்ப விஷூவ சமாதானப்படுத்த பக்கம் பக்கமா டயலாக் பேசுற… நியாயப்படி நீ என்னை கரெக்ட் பண்ணுறதுக்காக தான் இப்பிடி டயலாக் பேசணும்”

    விஷாகா தங்கையின் புறங்கையில் சுரண்டி விபாஷினி தங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பதைக் காட்டினாள். அதற்கெல்லாம் விஸ்மயா அசரவில்லை.

    “அவளுக்கு இதுல்லாம் புரியும்… 2K கிட்ஸ் நம்மளை விட ஸ்மார்ட்” என்றவள் வித்யூத்தை முறைக்க அவனோ அவளது தட்டிலிருந்த புட்டை ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட்டபடி பதிலளித்தான்.

    “இதுக்கு மேல உன்னைக் கரெக்ட் பண்ணுறதுக்கு என்ன இருக்கு லக்கி சார்ம்?”

    ஸ்பூனை இரண்டு விரல்களில் சுழற்றியபடி புருவத்தை உயர்த்தி அவன் கேட்ட விதம் அவள் தன்னைக் காதலிப்பதாக அவன் நம்ப ஆரம்பித்துவிட்டதைக் கூறியது.

    விஸ்மயா உதட்டைச் சுழித்து அழகு காட்டப்போனவள் டக்கென நிறுத்தினாள். கண்கள் வித்யூத்தை அளவிட அவனோ விசமச்சிரிப்பை மடித்த உதடுகளுக்குள் அடைக்க அரும்பாடு பட்டான்.

    பின்னர் சாப்பிடும்படி கூறியவன் மூவரையும் சஜன் – சௌபர்ணிகாவின் சங்கீத் நிகழ்வில் தனது சார்பில் கலந்துகொள்ள அழைத்தான்.

    “ஹலோ! இந்த மினியன் உன்னோட காத்தாடி… இவளைக் கூப்பிடுறதுல அர்த்தம் இருக்கு… நாங்க எதுக்கு வரணும் மேன்?”

    விஸ்மயா துடுக்காய் கேட்டாள்.

    “பிகாஸ் நீங்க எல்லாரும் என்னோட ஃபேமிலி” என்றவன் கண்ணாடி தம்ளரில் அவள் குடித்து மிச்சமிருந்த தண்ணீரைக் காலி செய்துவிட்டு எழுந்தான்.

    “நீங்களும் அப்பிடி நினைச்சிங்கனா கட்டாயம் வருவிங்க”

    மூவருக்கும் பொதுவாய் சலாம் போட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தான்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே எபி 11
    “இது மூலமா நீங்க எனக்கு என்ன செய்தி சொல்ல வர்றிங்க சார்?”

    “நம்ம லவ்வுக்கு ஸ்டேட்டஸ் ஒரு பிரச்சனையா இருக்காதுனு சொல்ல வர்றேன் மேடம்… உன் அக்காவோட பயத்துக்கு அவசியமே இல்ல.. புரிஞ்சுதா?”

    வித்யூத் சொன்ன விசயம் அவளுக்குப் புரிந்ததோ என்னவோ தலையாட்டி அவன் கேட்ட விதம் விஸ்மயாவுக்குப் பிடித்திருந்தது.

    “அவங்க இன்னொன்னும் சொன்னாங்க… கவனிச்சியா மேன்? எனக்கு யோசிக்க டைம் குடுக்கணுமாம்… அம்மா சொல்லைத் தட்டாத புள்ளையா எனக்கு யோசிக்க டைம் குடுத்துட்டு போய் போட்டோக்குப் போஸ் குடு”

    “அதுல்லாம் நாங்க நல்லா குடுப்போம்… நீ என்னை துல்கர் சல்மான் மாதிரி ஸ்மார்ட்டா போட்டோ எடு… ஓ.கேவா?... இல்லனா கல்யாணப்பொண்ணு கிட்ட சொல்லி பேமெண்ட்டைக் குறைச்சிடுவேன்”

    போலியாய் மிரட்டியவனுக்கு உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் விஸ்மயா.

    “துடைப்பக்கட்டைக்குப் பேர் துல்கர் சல்மானாம்” என்று கிண்டலாய் சொன்னவள் வித்யூத் அவளை நெருங்கவும் “ஜெகன்” என்று அழைத்தபடி நண்பனிடம் ஓடிவிட்டாள்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே EPI 10
    “ஐ திங் ஐ அம் இன் லவ் வித் யூ”

    ஏற்கெனவே ஜெகனிடம் கேட்டு ஓரளவுக்குத் தெளிவோடு வந்திருந்ததால் விஸ்மயாவுக்கு வித்யூத்தின் இந்த ‘ப்ரபோசல்’ அதிர்ச்சியளிக்கவில்லை.

    “ஓ!”

    அவள் வெகு எளிதாக எடுத்துக்கொண்டது வித்யூத்துக்குக் கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.

    “என்ன ஓ? நான் எவ்ளோ பெரிய விசயத்தைச் சொல்லிருக்கேன்… அட்லீஸ்ட் உன் ப்ரபோசலை கன்சிடர் பண்ணுறேன்னாச்சும் சொல்லும்மா”

    விஸ்மயா ஒற்றை விரலை மட்டும் ‘மாட்டேன்’ என்பது போல ஆட்டியவள் “உன்னை மாதிரி செலிப்ரிட்டி மேல எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாதுப்பா… உனக்கு இப்ப நான் இன்ட்ரஸ்டிங்கான கேரக்டரா தெரியுறேன்… நாளைக்கே என்னை விட இன்ட்ரஸ்டிங்கான ஒருத்திய பாத்துட்டனா ஐயோ அவசரப்பட்டுட்டோமோனு நீ கட்டாயம் வருத்தப்படுவ… எதுக்கு இதுல்லாம்?” என்கவும்

    “ஏய்! நான் நிஜமாவே உன்னை லவ் பண்ணுறேன்… உன்னை மாதிரி இன்னொருத்திய தேடிப் போறவனா இருந்தா ஒன் இயர் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம நம்ம மீட் பண்ணப் போற மொமண்டுக்காக நான் ஏன் வெயிட் பண்ணிட்டிருக்கப்போறேன் சொல்லு” என்றான் வித்யூத் தீவிரக்குரலில்.

    உடனே விஸ்மயாவின் கண்கள் யோசனையில் சுருங்கின.

    “ஆமால்ல”

    வானைப் பார்த்தபடி மோவாயில் ஆட்காட்டிவிரலால் தட்டிக்கொண்டு உதட்டைச் சுழித்தபடி யோசித்தாள் அவள்.

    “நீ சொல்லுறதும் வேலிட் பாயிண்ட் தான்… ஆனா எனக்கு உன் மேல லவ் வரலையேப்பா”

    தோள்களைக் குலுக்கியபடி கூறினாள்.

    “அது மெதுவா வரட்டும்… நோ ப்ராப்ளம்”

    வித்யூத் இலகுவாகச் சொல்லவும் அவனிடமிருந்து வற்புறுத்தலை எதிர்பார்த்த விஸ்மயாவுக்குப் பெருத்த ஏமாற்றம். அது அவளது முகத்தில் அப்பட்டமாக பிரதிபலித்தது.

    அசுவாரசியமாக உச்சு கொட்டியவள் “அப்ப நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டாள்.

    “போறதுக்கு முன்னாடி நான் சொல்லுறதை கேட்டுட்டுப் போ”

    “என்ன?”

    “நான் உனக்கு ஐஸ் வைக்குறேன்னு நினைக்க கூடாது”

    “ம்ம்”

    “உன்னை லவ் பண்ணுறதால பொய்யா புகழுறேன்னு நினைச்சுடக்கூடாது”

    “நினைக்க மாட்டேன்”

    விஸ்மயா உறுதியளித்ததும் அவளை ஆர்வமாகத் தழுவின வித்யூத்தின் விழிகள்.

    என்ன மாதிரி பார்வை இது? பார்ப்பவனின் கண்களுக்குள் கருவிழிகளுக்குப் பதிலாக லேசர் கன் எதுவும் இருக்கிறதா என்ன? இமைகள் இடுங்க அவன் பார்க்கும் போது தேகத்துக்குள் எதுவோ ஊடுருவிப்போவது போல உள்ளதே!

    அவனது பேச்சைக் கேட்க காத்திருந்தவளுக்கு விழிகளின் தழுவல் ஏதோ ஒரு விசித்திரமான உணர்வை உள்ளுக்குள் கிளர்ந்தெழ செய்யவும் விஸ்மயா வித்யூத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து ஏரியில் தெரியும் வெண்ணிலவின் பிம்பத்தை நோக்கினாள்.

    “அமைதியான ஏரியோட கரைல நிலா வெளிச்சத்துல ஒயிட் ஸ்கர்ட் ஓப்பன் ஹேரோட நீ உக்காந்திருக்கிறதை பாக்குறப்ப ரிவர் ஃபேரி அலாரா மாதிரி இருக்கு லக்கி சார்ம்… ரெக்கை மட்டும் மிஸ்சிங்”

    அன்று சொன்ன அதே வசனம். இடம் மட்டும் வேறு! ஆனால் சொன்ன விதமும், வார்த்தைகள் குழைவாய் வந்து விழுந்த விதமும் ஏரியைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்குள் மெல்லிய நாணத்தை விதைத்துவிடவே, விஸ்மயாவின் வதனத்தில் மெல்லிய முறுவல் முகிழ்த்தது.

    தனது ரசிப்பை ஏற்று அவள் சிரிக்கிறாள் என்பதை பக்கவாட்டில் வளைந்த செவ்விதழ்களின் சுழிப்பு சொல்லிவிட வித்யூத்தின் உதடுகளும் முறுவலைப் பூட்டிக்கொண்டன.

    “ஐ லவ் யூ விஸ்மி”

    மென்மையாக அவன் காதலை உரைக்கவும் விஸ்மயாவின் பார்வை அவன் பக்கம் திரும்பியது.

    “ஹான்?”

    புருவத்தை உயர்த்தி அவள் கேட்கவும் “மறுபடிலாம் சொல்ல மாட்டேன்… ஒரு தடவை சொல்லுறப்பவே கேட்டுக்கணும்” என்று அமர்த்தலாக மொழிந்தான்.

    “ஐயே! ரொம்ப தான்”

    உதட்டைச் சுழித்து விஸ்மயா அழகு காட்டினாள்.

    “ப்ளீஸ்! அப்பிடிலாம் பண்ணாத… எங்கம்மா எனக்கு நிறைய மாரல் வேல்யூஸை சொல்லிக் குடுத்து வளத்திருக்காங்க… அதுல ஒன்னு, ஒரு பொண்ணு தனியா இருக்குறப்ப அவ கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது… நீ இப்பிடி கியூட்டா எதாச்சும் பண்ணி எனக்குள்ள இருக்குற ஒழுக்கமான வித்யூத்தை ஸ்பாயில் பண்ணுற லக்கி சார்ம்”

    அவன் சண்டை போடுபவனைப் போல பேசவும் மீண்டும் உதட்டைச் சுழித்தாள் விஸ்மயா.

    “மூனு நாளா ஒரு பொண்ணை விடாம ஸ்டாக் பண்ணுனது எந்த மாரல் வேல்யூஸ்ல அடக்கம்னு எனக்குச் சொல்லேன்… பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுயா… உன் பொய்யைத் தாங்கிக்க முடியாம ஏரித்தண்ணி பொங்கி வந்து ரிசார்ட்டை மூழ்கடிச்சிடப் போகுது”

    அவனை விளையாட்டாகச் சீண்டியபடி எழுந்தவள் “பை த வே, இவ சைல்டிஷா பேசுறாளே, கிஸ் ஹக்னு இஷ்டத்துக்கு விளையாடலாம்னு கிரிமினலா யோசிக்காத… அந்த விசயத்துல நான் ரொம்ப மோசமானவ… நம்மளை லவ் பண்ணுற பையனாச்சேனு இரக்கப்படவே மாட்டேன்” என்று சொல்லிவிட்டு பெருவிரலால் கழுத்தின் நடுவே கோடிட்டுக் காட்டினாள்.

    https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/sls-10/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே epi 7

    “என்னது இது?”

    “ஓப்பன் பண்ணிப் பாரு, உனக்கே தெரியும்”

    அமர்த்தலாக மொழிந்தாள் விஸ்மயா. விபாஷினியும் ஆவலோடு அதை திறந்தவள் உள்ளே இருந்ததைக் கண்டதும் “இதுக்குத் தான் இவ்ளோ பில்டப் குடுத்தியா?” என சலித்துக்கொண்டவளாக மீண்டும் அவளிடமே பெட்டியைக் கொடுத்தாள்.

    “என்னடி இப்பிடி சாதாரணமா சொல்லுற?” என்றவளாகப் பெட்டியை வாங்கிப் பார்த்த விஸ்மயா அதற்குள் இருந்த லட்டைக் கண்டதும் ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் பேச்சு வராமல் பற்களைக் கடிக்க தொடங்கினாள்.

    “லட்டா?”

    அவள் முகம் சிவக்க மொபைலை எடுத்து தனக்கு அழைப்பதை சில அடிகள் தொலைவிலுள்ள மேஜையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வித்யூத் விஸ்மயாவின் அழைப்பை ஏற்றான்.

    “டேய்” என அவள் ஆரம்பிக்கும்போதே “கோவிந்தா கோவிந்தா” என்றவன் தன்னருகே அமர்ந்திருந்த ரசிகர் ப்ளஸ் திருப்பதி பாலாஜியின் பக்தர் கொடுத்த இன்னொரு லட்டு பிரசாதத்தை பக்தியோடு வாங்கி விபினிடம் கொடுத்துவிட்டுத் தனியே வந்தான்.

    “என்னடா என் ப்ரேஸ்லெட்டை ஆட்டைய போட்டுட்டுக் கிண்டல் பண்ணுறியா? ஒழுங்குமரியாதையா என் ப்ரேஸ்லெட்டைக் குடுத்துடு… இல்லனா போலீஸ்ல உன் நம்பரைக் குடுத்து ட்ரேஸ் அவுட் பண்ணச் சொல்லிடுவேன்”

    “கூல் கூல்! இப்ப என்ன நடந்துச்சுனு பாப்கார்ன் மாதிரி குதிக்குற?”

    “என் ப்ரேஸ்லெட்டைத் தர்றேன்னு சொல்லி லட்டைக் குடுத்து ஏமாத்திட்டு வாய் பேசாத நீ”

    விஸ்மயா வேகமாகப் பேசியதில் மூச்சிறைப்பது வித்யூத்திற்கே கேட்டது.

    “காம் டவுன் பேபி! நான் உன் கிட்ட என்ன சொன்னேன்? ஏழாவது வாசல் துளசி மாடத்துக்கு வந்து ப்ரேஸ்லெட்டை வாங்கிக்கனு சொன்னேன்… ஆனா நீ என்ன பண்ணிருக்க?”

    “நான் அங்க தான் நிக்குறேன்”

    “நிக்குறியா? இல்ல நிக்குறிங்களா?”

    வித்யூத் அவளோடு நின்று கொண்டிருந்த விபாஷினியைக் குறிப்பு காட்டவும் விஸ்மயா தன் தலையிலடித்துக்கொண்டாள்.

    “நீ என் கிட்ட தனியா வரணும்னு சொல்லவேல்லயே?”

    “வயசுப்பையனும் வயசுப்பொண்ணும் மீட் பண்ணுற இடத்துக்குக் குழந்தைய கூட்டிட்டு வரலாமானு ஒரே ஒரு தடவை உன்னோட காமன் சென்ஸை கேட்டுப் பாத்திருக்கலாம் நீ… ப்ச்! அதை விடு… உன் ப்ரேஸ்லெட்டை திருப்பிக் குடுக்குறதுக்கான முயற்சியோட இன்னைக்குக் கோட்டா ஓவர்… இனிமே ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ் கழிச்சுத் தான் அதை திருப்பிக் குடுக்குற மூட் எனக்கு வரும்… அது வரைக்கும் நான் உனக்குக் குடுத்த லட்டைச் சாப்பிட்டு மனசைத் தேத்திக்க”

    “எனக்கு அந்த லட்டு வேண்டாம்”

    தூக்கியெறியப் போனவளை அவசரமாகத் தடுத்தது வித்யூத்தின் குரல்.

    “அது ஏழுமலையான் பிரசாதம்… தூக்கியெறிஞ்சனா அதுக்கான பாவம் உன்னைச் சேரும்”

    உடனே அந்தரத்தில் நின்றது விஸ்மயாவின் கரம் வேகமாக லட்டு இருந்த பரிசுப்பெட்டியை அவள் கண்களில் ஒற்றிக்கொள்வது தெரிந்தது.

    கூடவே “மன்னிச்சிடுங்க பெருமாளே! உங்க பிரசாதம்னு தெரியாம இந்த அறியாச்சிறுமி தூர வீசப்போயிட்டேன்… இதை மனசுல வச்சுக்கிட்டு என போட்டோகிராபி ஆம்பிசன்ல எதுவும் குழப்பத்தை உண்டாக்கிடாதிங்க” என்று அவள் பக்தியோடு வேண்டுவதும் அவனுக்கு மொபைல் வழியே கேட்டது.

    “போதும் மகளே! ஓவரா வேண்டி பெருமாளோட காதை ரிப்பேர் ஆக்கிடாத… இன்று போய் நாளை வா”

    “இராமாயணம் வசனமெல்லாம் பேசிட்டு நாளைக்கும் லட்டுக்குப் பதிலா பூந்திய குடுக்கலாம்னு நினைச்ச, நான் நேரா போலீஸ் கிட்டப் போயிடுவேன்”
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே எபி 6 “அது எப்பிடி உன் கிட்ட வந்துச்சு? நீ திருடனா? ப்ளாட்டினம் ப்ரேஸ்லெட்னதும் நான் பணக்காரப்பொண்ணுனு நினைச்சுட்டு என்னை ஃபாலோ பண்ணுறியா? இங்க பாருப்பா, ஒரு காலத்துல நாங்க வசதியா இருந்தோம்… இப்ப வேலை செஞ்சா தான் எங்களுக்குச் சோறுங்கிற நிலமை… நீ எதிர்பாக்குற எதையும் என்னால தரமுடியாது” “ப்ச்! நான் திருடனும் இல்ல கிரிமினலும் இல்ல… உன் லக்கி ப்ரேஸ்லெட்டோட செகண்ட் ஓனர்” “அடுத்தவங்க பொருளுக்கு ஓனர்னு சொல்ல உனக்கு வெக்கமால்ல?” “ரொம்ப வெக்கமா இருக்கு… அதனால தான் அந்த ப்ரேஸ்லெட்டை உனக்குத் திருப்பிக் குடுக்கலாம்னு இருக்கேன்” உடனே விஸ்மயா எந்த பதிலையும் அனுப்பவில்லை. வித்யூத்தும் காத்திருந்தான். நிதானமாக எதையோ அவள் தட்டச்சு செய்வதும் அழிப்பதுமாக இருப்பதை அவளது பெயருக்குக் கீழே வந்த ‘டைப்பிங்’ என்ற ஆங்கில வார்த்தை உணர்த்தியது. “ப்ளீஸ்! அது என் தங்கச்சியோட ப்ரேஸ்லெட்… அதை தொலைச்சதுக்கு அவ என்னை எவ்ளோ கேவலமா திட்டுனா தெரியுமா? நீ அதை வச்சு என்ன செய்யப்போற? ப்ளீஸ் குடுத்துடு” பணிவாக இல்லையில்லை கெஞ்சலாக பதில் வரவும் வித்யூத்தும் கொடுப்பதாக வாக்களித்தான். “நீ தங்கப்போற ரிசார்ட்ல தான் நான் இப்ப இருக்குறேன்… இங்க ‘எட்டுக்கெட்டு’னு ஒரு ஃபுட்கோர்ட் கேரளா பேலஸ் மாதிரி இருக்கும்… அதோட ஏழாவது வாசல் கிட்ட சின்னதா துளசி மாடம் இருக்கு… அங்க நான் ப்ரேஸ்லெட்டோட உனக்காக வெயிட் பண்ணுவேன்” “நாங்க இப்ப தான் ரிசார்ட்டுக்கு வந்தோம்… எங்களுக்கு ஹெரிட்டேஜ் ஏரியால ரூம்… நான் விசாரிச்சிட்டு அங்க வர்றேன்… முன்ன பின்ன லேட் ஆனாலும் வந்துடுவேன்… நீ போயிடாத” சரியென பதிலளித்தவன் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த விபின் மலபார் பரோட்டாவை முறைத்தபடி பிய்க்கவும் கொஞ்சம் அரண்டு போனான். “ஏன் இவ்ளோ கோவம் மை ஃப்ரெண்ட்?” “கேரளா வந்ததும் எதுவும் மோகினி பிசாசு அடிச்சிடுச்சாடா? நீ சரியில்ல” என்றவன் “நீ ட்ரெயின்ல அந்தப் பொண்ணைத் தெரியாதுனு உருட்டுனியே ஒரு உலகமகா உருட்டு, அப்பவே நீ சரியில்ல… என்னடா நடக்குது? அம்மா என்ன சொல்லி அனுப்புனாங்கனு மறந்துட்டியா?” என மனோகரியின் அறிவுரையை ஞாபகப்படுத்தினான். வித்யூத் பழத்துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான் நிதானமாக. “அவ தான் நான் தேடுன லக்கி சார்ம்டா… உன் கிட்ட நான் என்ன சொன்னேன்? மறுபடி அவளைப் பாத்தா கட்டாயம் லவ் பண்ணுவேன்னு சொன்னேனா இல்லையா?” “வாஸ்தவம் தான் மச்சி… பட் அந்தப் பொண்ணோட நேச்சர் உனக்குச் செட் ஆகாதுடா… அவங்க அக்காக்கு இருக்குற கவனம் அவளுக்கு இல்ல… அவங்க தங்கச்சினு ஒரு குட்டிப்பொண்ணு இருந்துச்சே, அதுக்கு ஒரு பத்து இல்லனா பதிமூனு வயசு இருக்குமா? அந்த வயசுக்கேத்த மெச்சூரிட்டி தான் உன் லக்கி சார்முக்கு இருக்கு… ஒரு ஃப்ரெண்ட்லி அட்வைஸ்… ஜெனிலியாவல்லாம் ஸ்க்ரீன்ல பாக்குறப்ப தான் ரசிக்க முடியும்… ரியாலிட்டில மண்டைய பிச்சுக்கணும்… இதுக்கு அப்புறம் உன் இஷ்டம்” https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/ #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom