கண்கள் தேடுது தஞ்சம்.....
எதிரியாக இரு குடும்பம்
பார்க்கும் போதெல்லாம்
பார்வை திருப்பி செல்ல
பகையில் முளைக்கும்
பாச போராட்டம்....
நட்பில் எடுத்துக்காட்டாய்
மருத வாணன் தேவ நாயகம் ...
நண்பனை நம்பினாலும்
நடைமுறை சூழ்நிலை
நட்பை பதம் பார்க்க
கோவம் கண்ணை மறைத்து
கடுஞ்சொல் உறவை பிரித்து
வருடங்கள் பல கடந்தாலும்
வார்த்தை தவறி நொடி
ஆறா வடுவாய் பதிந்து
வயது ஆகும் போது தான்
வார்த்தைகளின் வீரியம் புரிய
வருந்தி என்ன செய்ய????
விவசாயம் பற்றியும்
விவசாயின் வலியையும்
விரிவாக விவரித்த விதம்.....
விளையும் பயிர்
முளையிலே தெரியும் அதுபோல
சிறு வயதிலேயே
பிள்ளைகளுக்கு
விழிப்புணர்வு நடத்துவது
விசில் போடு.....
ஆண்களின் பகையில்
பெண்கள் பதறி துடிப்பது...
இயலாமையின் உச்சம்....
அன்னைகளாகவும்
சம்பந்திகளாகவும்
ஈஸ்வரி அம்ச வேனி அருமை..
கனி கச்சிதம்......
பைந்தமிழரசன்
பவள நங்கை
காதலாய் காண
கண்ணெதிரே வந்தால்
கண் சிவந்து நின்றிருக்க
கோவ பார்வையில்
காய்ந்திடாமல் பார்த்து இரசிக்க
கள்ளி இவள் வந்தேனடா.........
கல்லூரி முடிந்ததும் - உன்
காதல் காண
கால்கடுக்க- உன் பார்வை பார்க்க
சாலை ஓரம் நின்று
காத்து கிடந்தேனடா..........
ஊர் யாரும் பார்த்திடாமல்
ஊமைவிழி பார்வையிலே
உன்னிடமே சொன்னேனடா.....
உதாசீனம் செய்து _ எனை
உதறி செல்ல
உன்னால் எப்படி முடிகிறது?????
உள்ளூர பதுக்கி வைத்து
உள்ளம் உடைந்து செல்லும் எனை
உனக்குத்தான் தெரியவில்லையா???? என் காதல்
உரைக்கவில்லையா???
நங்கையின் காதலுக்கு இணையாக....
தமிழும் தன் மனதிற்குள்லே
தவிக்கும் தவிப்பு...
தன்னிலை விளக்கமாய்
திருமணத்திற்கு பிறகு
திருவாய் மலர்ந்து விளக்க....
திருமதியாய் ஆனவள்
திகைத்து தான் போனாள்....
திக்குமுக்காடி திளைத்து
திணறினாள் அவன் காதலில்....
தஞ்சம் புகுந்தாள் தமிழிடம்....
மொத்தத்தில் நம் சராசரி வாழ்க்கையில் இயற்கையின்
வழியே தான் வாழ்க்கை- அதுவும் விவசாயம் வழியே....
கண்கள் தேடுது தஞ்சம்
மறப்பதில்லை நெஞ்சம்....
வாழ்க வளமுடன்.....