இவனோட கற்பனை, இவனோட வலி, இவனோட ஏமாற்றம் எல்லாத்துக்கும் இவன் தான் காரணமே தவிர, அடுத்தவங்க இல்லையே. அதுக்காக மத்தவங்களை எதுக்கு கொடுரமா கொல்லணும்..? எல்லாமே இந்த பிரகதியால வந்ததுன்னு நினைக்கிறேன். அவ தான், ஏகலைவனோட காதல் தோல்வியை தெரிஞ்சுக்கிட்டு, அவனோட மறுபிறப்பு நம்பிக்கையை யூஸ் பண்ணி, பணம் சம்பதிக்கும் ஆசையில, டார்க் வெப்ல பேக் ஐடியை உருவாக்கி ஏகலைவன் கிட்ட சேட்டிங் பண்ணி இனியா தான் அந்த தேவசேனாங்கற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பா. ஏன்னா, இனியாவோட ஆட்டிட்யூட், ஃபாரன்சிக் மேல அவளுக்கு இருந்த ஆர்வம், ராமபாண கொடி மேல காட்டின ஆர்வம், இதெல்லாத்தையும் நிஷாந்த் தான் பிரகதி கிட்ட சொல்லியிருப்பான். ஸோ, அதை வைச்சு இவ ஏகலைவனுக்கு தெரயப்படுத்தி ஈடிஎஸ்ங்கிற பேக் ஐடி மூலமா தெரிஞ்சுக்கிட்டு விளையாடி இருக்கிறான். தவிர, இதுல நிஷாந்த் வேற நிசமாவே இனியா கிட்ட காதல் வசப்படவும்,
பிரகதி தன் காதலன் நிஷாந்த்ங்கற பொஸசீவ்நெஸ்ல அதையும் ஏகலைவன் கிட்ட போட்டு கொடுத்துட்டிருப்பா. இதுல ஏகலைவன் வேற நிஷாந்தும் இனியாவும் ஒண்ணா சுத்தறதையும், ஒண்ணா இருந்ததையும் பார்த்தவுடனே, தன்னோட சைக்கோபாத் வெறியை தீர்க்க அவளை கொடுரமா கொன்னிருக்கான். ஏகலைவனோட கொலைவெறிக்கு அவன் மட்டுமே காரணமா இருந்திருக்க மாட்டான். பிரகதி தன்னுடைய பர்ஸனல் வென்ஜினன்ஸை இப்படி பழி தீர்த்துக்கிட்டான்னு நினைக்கிறேன்.
ஆமா, அவளும் அப்ப ஏகலைவனோட மொத்த சொத்தும் நிஷாந்த்துக்கு வரும்ன்னு தானே அவனை காதலிக்கத் தொடங்கியிருந்தா. அதேநேரத்துல ஏகலைவன் மூலமா தன்னோட பணஆசையையும் நிவர்த்திக்க விரும்புனதால, பிரகதியோட ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கற இந்தெதிட்டமிடுதலும் ஒரு காரணமா இருக்குமோன்னு தோணுது. அதான், கடைசியில அவளே பலியாகிட்டா. கத்தி எடுத்தா, அந்த கத்திக்கே நம்ம
பலியாயிடுவோமாம்.
CRVS (or) CRVS 2797