"எங்களுக்கு என்ன? நாங்க நல்லாத்தான் இருக்கோம்…" என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, "யார்கிட்டமா பேசிட்டு இருக்கீங்க? இங்கே உங்க பேத்தி ஒரே அழுகை. அவளை என்னன்னு பாருங்க…" என்ற மீனாவின் குரல் பின்னணியில் கேட்க, அதைத் தொடர்ந்து குழந்தையின் அழுகை சத்தமும் கேட்டது.
"பிள்ளையைப் பார்த்துக்கிற ஒரு வேலைதான் பார்க்கிற. அதையும் ஒழுங்கா பாரேன்டி. எல்லாம் நான்தான் செய்யணுமா?" என்று வனிதா பதில் சொல்ல,
"என்ன நீங்களும் இப்படிப் பேசுறீங்க? எல்லாம் என் தலையெழுத்து. எனக்கு அம்மாவும் சரியில்லை. மாமியாரும் சரியில்லை. என் பிள்ளையை நானே பார்த்துக்கிறேன்…" என்ற மீனாவின் குரல் தேய்ந்து ஒலித்தது.
"அக்கா வந்திருக்காளாமா? எப்போ வந்தாள்?" என்று கீர்த்தனா விசாரிக்க,
"அவள் வந்து இரண்டு நாளாச்சு…" என்று சலிப்பாகச் சொன்னார்.
"என்னாச்சுமா? இப்பதானே கொஞ்ச நாள் முன்னாடி போனாள். அதுக்குள்ள என்ன? திருவிழாவுக்கு வந்தாளா?" என்று யோசனையுடன் கேட்டாள்.
"திருவிழா முடிந்துதான் வந்தாள். கீர்த்தனா, இங்கே ஒரே பிரச்சினைடி. இன்னைக்கு நானும், அப்பாவும் உன்னைப் பார்க்க வரலாம்னு முடிவு பண்ணிருந்தோம். உங்க அப்பாவும் லீவ் போட்டு, முடிந்தால் இரண்டு நாள் அலைஞ்சு அங்கே வீடு பார்க்கலாம்னு சொன்னார். ஆனால் நாங்க ஒன்னு நினைக்க, தெய்வம் ஒன்னு நினைக்குது போ…" என்றார் வருத்தமாக.
"என்னமா இது? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? அக்கா வீட்டில் எதுவும் பிரச்சினையா?"
"மீனா வீட்டில் மட்டும் இல்லை. தொழிலும் பிரச்சினை ஆகிப்போச்சு…"
(திங்கள் மாலை எபி வரும்)
"பிள்ளையைப் பார்த்துக்கிற ஒரு வேலைதான் பார்க்கிற. அதையும் ஒழுங்கா பாரேன்டி. எல்லாம் நான்தான் செய்யணுமா?" என்று வனிதா பதில் சொல்ல,
"என்ன நீங்களும் இப்படிப் பேசுறீங்க? எல்லாம் என் தலையெழுத்து. எனக்கு அம்மாவும் சரியில்லை. மாமியாரும் சரியில்லை. என் பிள்ளையை நானே பார்த்துக்கிறேன்…" என்ற மீனாவின் குரல் தேய்ந்து ஒலித்தது.
"அக்கா வந்திருக்காளாமா? எப்போ வந்தாள்?" என்று கீர்த்தனா விசாரிக்க,
"அவள் வந்து இரண்டு நாளாச்சு…" என்று சலிப்பாகச் சொன்னார்.
"என்னாச்சுமா? இப்பதானே கொஞ்ச நாள் முன்னாடி போனாள். அதுக்குள்ள என்ன? திருவிழாவுக்கு வந்தாளா?" என்று யோசனையுடன் கேட்டாள்.
"திருவிழா முடிந்துதான் வந்தாள். கீர்த்தனா, இங்கே ஒரே பிரச்சினைடி. இன்னைக்கு நானும், அப்பாவும் உன்னைப் பார்க்க வரலாம்னு முடிவு பண்ணிருந்தோம். உங்க அப்பாவும் லீவ் போட்டு, முடிந்தால் இரண்டு நாள் அலைஞ்சு அங்கே வீடு பார்க்கலாம்னு சொன்னார். ஆனால் நாங்க ஒன்னு நினைக்க, தெய்வம் ஒன்னு நினைக்குது போ…" என்றார் வருத்தமாக.
"என்னமா இது? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? அக்கா வீட்டில் எதுவும் பிரச்சினையா?"
"மீனா வீட்டில் மட்டும் இல்லை. தொழிலும் பிரச்சினை ஆகிப்போச்சு…"
(திங்கள் மாலை எபி வரும்)