“நீங்க சொல்லுங்களேன். நீங்க ஊருக்குப் போன பிறகு கீர்த்தனா வீட்டில் தானே இருப்பாள். கொஞ்ச நேரம் ஒதுக்கி கம்ப்யூட்டர் சென்டரை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லுங்களேன் சகலை…” என்று திடீரென மணிவர்மனிடம் கேட்டு வைத்தான் கதிர்வேலன்.
அவன் அப்படிக் கேட்பான் என்று அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிலும் கீர்த்தனா திடுக்கிட்டுப் போனாள். கணவன் சம்மதம் சொல்லிவிடக் கூடாது என்று அவனைத் தடுக்க அவனின் புறம் திரும்பினாள்.
அவனோ அவளைப் பார்க்கவே இல்லை.
தான் வேண்டாம் என்று சொன்ன பிறகும் பெரிய மாப்பிள்ளை ஏன் இப்படிச் செய்கிறார் என்று திருமலைக்குக் கடுப்பாக இருந்தது. ஆனாலும் மாப்பிள்ளையிடம் அப்படி நேராகக் கேட்டுவிட முடியாமல் அமைதியாக இருந்தார்.
‘இவர் ஏன் அந்த ஆளுகிட்ட போய்க் கெஞ்சிட்டு இருக்கார்?’ என்று எரிச்சலுடன் கணவனைத் தனக்குள் திட்டிக் கொண்டாள் மீனா.
கதிர்வேலனோ யார் என்ன நினைப்பார்கள் என்ற கவலை எல்லாம் படவே இல்லை. அவனுக்கு இப்போதைக்கு வேலை நடக்க வேண்டும். புதிதாக ஆரம்பித்த தொழில். பயிற்சி ஆசிரியர்கள் இல்லை என்றால் கம்ப்யூட்டர் சென்டரை இழுத்து மூடிவிட்டு போக வேண்டியதுதான். அந்த நிலைக்கு விட்டுவிடக் கூடாது என்பதில்தான் அவன் முனைப்பாக இருந்தான்.
அதனால் நல்ல பதில் சொல்ல வேண்டுமே என்று மணிவர்மனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதில் முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை சகலை. கீர்த்தனாதான் முடிவு செய்யணும். அவள் வேலைக்குப் போகப் பிரியப்பட்டால் அதை நான் தடுக்க மாட்டேன்…” என்றான் மணிவர்மன்.
கூடிய விரைவில் இப்படிச் சொன்ன கணவனே மாற்றிச் சொல்ல போகிறான் என்பதை அறியாமல் கணவனைக் காதல் பொங்க பார்த்து வைத்தாள் கீர்த்தனா.
*நாளை மாலை பதிவு வரும் *
அவன் அப்படிக் கேட்பான் என்று அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிலும் கீர்த்தனா திடுக்கிட்டுப் போனாள். கணவன் சம்மதம் சொல்லிவிடக் கூடாது என்று அவனைத் தடுக்க அவனின் புறம் திரும்பினாள்.
அவனோ அவளைப் பார்க்கவே இல்லை.
தான் வேண்டாம் என்று சொன்ன பிறகும் பெரிய மாப்பிள்ளை ஏன் இப்படிச் செய்கிறார் என்று திருமலைக்குக் கடுப்பாக இருந்தது. ஆனாலும் மாப்பிள்ளையிடம் அப்படி நேராகக் கேட்டுவிட முடியாமல் அமைதியாக இருந்தார்.
‘இவர் ஏன் அந்த ஆளுகிட்ட போய்க் கெஞ்சிட்டு இருக்கார்?’ என்று எரிச்சலுடன் கணவனைத் தனக்குள் திட்டிக் கொண்டாள் மீனா.
கதிர்வேலனோ யார் என்ன நினைப்பார்கள் என்ற கவலை எல்லாம் படவே இல்லை. அவனுக்கு இப்போதைக்கு வேலை நடக்க வேண்டும். புதிதாக ஆரம்பித்த தொழில். பயிற்சி ஆசிரியர்கள் இல்லை என்றால் கம்ப்யூட்டர் சென்டரை இழுத்து மூடிவிட்டு போக வேண்டியதுதான். அந்த நிலைக்கு விட்டுவிடக் கூடாது என்பதில்தான் அவன் முனைப்பாக இருந்தான்.
அதனால் நல்ல பதில் சொல்ல வேண்டுமே என்று மணிவர்மனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதில் முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை சகலை. கீர்த்தனாதான் முடிவு செய்யணும். அவள் வேலைக்குப் போகப் பிரியப்பட்டால் அதை நான் தடுக்க மாட்டேன்…” என்றான் மணிவர்மன்.
கூடிய விரைவில் இப்படிச் சொன்ன கணவனே மாற்றிச் சொல்ல போகிறான் என்பதை அறியாமல் கணவனைக் காதல் பொங்க பார்த்து வைத்தாள் கீர்த்தனா.
*நாளை மாலை பதிவு வரும் *