"என்ன யோசனை?" என்ற குரல் மிக அருகே கேட்க, திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள்.
அவளின் கணவனின் குரல்தான். சாப்பிடும் இடம் வந்து அமர்ந்த பின்னும் யோசனையில் இருந்தவளை கலைத்திருந்தான்.
"இலையில் சாப்பாடு வச்சுட்டாங்க பார். சாப்பிடாமல் என்ன யோசனை பண்ற?" என்று அவன் மீண்டும் கேட்க, ஒன்றுமில்லை என்பது போல் வேகமாகத் தலையை ஆட்டியவள் சாப்பாட்டில் கைவைத்தாள்.
"என்ன திருமதி ஆனதும் திருவாயை திறக்க மாட்டீங்கிற?" என்று கேலியாய் கேட்டவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவன் புருவத்தை உயர்த்த, "இது மிலிட்டரி தானா? இல்லை வேற யாருமான்னு பார்க்கிறேன். திருவாளர் ஆனதும் உங்க திருவாய் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு போல…" என்று கிண்டலாய் சொன்னாள் கீர்த்தனா.
"இல்லையா பின்ன, என்னோட திருமதி சரியான வாயாடி. அதுக்கு ஏத்த மாதிரி திருவாளரும் மாறியாகணுமே…" என்று சிறு புன்னகையுடன் சொன்னவனைக் கண்டு வியந்துதான் போனாள்.
தன் மீது கோபமாக இருப்பானோ? இந்தத் திருமணத்தை அவன் எப்படி ஏற்றுக் கொள்வானோ? என்ற எண்ணம் அவளுக்கு இருக்கவே செய்தது.
ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் அவன் சகஜமாக இருப்பது அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது.
(நாளை மாலை எபியோடு வர்றேன்)
அவளின் கணவனின் குரல்தான். சாப்பிடும் இடம் வந்து அமர்ந்த பின்னும் யோசனையில் இருந்தவளை கலைத்திருந்தான்.
"இலையில் சாப்பாடு வச்சுட்டாங்க பார். சாப்பிடாமல் என்ன யோசனை பண்ற?" என்று அவன் மீண்டும் கேட்க, ஒன்றுமில்லை என்பது போல் வேகமாகத் தலையை ஆட்டியவள் சாப்பாட்டில் கைவைத்தாள்.
"என்ன திருமதி ஆனதும் திருவாயை திறக்க மாட்டீங்கிற?" என்று கேலியாய் கேட்டவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவன் புருவத்தை உயர்த்த, "இது மிலிட்டரி தானா? இல்லை வேற யாருமான்னு பார்க்கிறேன். திருவாளர் ஆனதும் உங்க திருவாய் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு போல…" என்று கிண்டலாய் சொன்னாள் கீர்த்தனா.
"இல்லையா பின்ன, என்னோட திருமதி சரியான வாயாடி. அதுக்கு ஏத்த மாதிரி திருவாளரும் மாறியாகணுமே…" என்று சிறு புன்னகையுடன் சொன்னவனைக் கண்டு வியந்துதான் போனாள்.
தன் மீது கோபமாக இருப்பானோ? இந்தத் திருமணத்தை அவன் எப்படி ஏற்றுக் கொள்வானோ? என்ற எண்ணம் அவளுக்கு இருக்கவே செய்தது.
ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் அவன் சகஜமாக இருப்பது அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது.
(நாளை மாலை எபியோடு வர்றேன்)