நாளைய எபியிலிருந்து... (நாளை மாலை ஐந்து மணிக்கு எபி வரும்)
“பெத்த பிள்ளைக்கு ஒரு அநியாயம் நடக்குதுன்னு கேள்விப்படுறப்போ பிள்ளையை நினைச்சுத்தான் பெத்தவ மனசு முதலில் தவிக்கும். அவனுக்கு இப்படி அநியாயம் நினைச்சுட்டாங்களே தவிக்கும் மனசுக்கு முன்னாடி வேற யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க. அது பெத்தவ நிலையில் இருந்து பார்த்தால்தான் புரியும். நாளைக்கு உனக்குன்னு ஒரு பிள்ளை பிறந்த பிறகு நீயே இதைப் புரிந்து கொள்வ…” என்று அடுப்பில் இருந்த காயை கிண்டிக் கொண்டே கோகிலா பேச ஆரம்பிக்க,
அவித்த இட்லியை ஹாட்பாக்ஸில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த இந்துமதியின் கைகள் அப்படியே நின்றன.
மெல்ல திரும்பி மாமியாரைப் பார்த்தாள்.
தானும் மருமகள் பக்கம் திரும்பியவர், “உனக்கு என் மேல இருக்குற கோபம் புரியுது. அந்த நேரம் நான் உன் பக்கமும் பேசியிருக்கணும். ஆனா, உங்க அம்மா மேல இருந்த ஆதங்கம் உன் பக்கம் திரும்பிருச்சு. அது தப்புதான். நீ எங்க குடும்பத்துக்குக் கிடைச்ச வரம். பையனுக்குக் காதல் கல்யாணமாச்சே பொண்ணு எப்படி நடந்துப்பாளோன்னு முன்னாடி எல்லாம் மனதுக்குள் ஒரு பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் நீ அந்தப் பயத்தை எல்லாம் ஒன்னுமில்லாமல் ஆக்கி இந்தக் குடும்பத்துக்காக நிறைய விட்டு கொடுத்து போற. உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்திருந்தால் மன்னிச்சு…” என்று அவர் முழுதாகச் சொல்லி முடிக்கும் முன்,
“அத்தை, என்ன பண்றீங்க. வேண்டாம்…” என்று தடுத்திருந்தாள் இந்துமதி.
“பெத்த பிள்ளைக்கு ஒரு அநியாயம் நடக்குதுன்னு கேள்விப்படுறப்போ பிள்ளையை நினைச்சுத்தான் பெத்தவ மனசு முதலில் தவிக்கும். அவனுக்கு இப்படி அநியாயம் நினைச்சுட்டாங்களே தவிக்கும் மனசுக்கு முன்னாடி வேற யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க. அது பெத்தவ நிலையில் இருந்து பார்த்தால்தான் புரியும். நாளைக்கு உனக்குன்னு ஒரு பிள்ளை பிறந்த பிறகு நீயே இதைப் புரிந்து கொள்வ…” என்று அடுப்பில் இருந்த காயை கிண்டிக் கொண்டே கோகிலா பேச ஆரம்பிக்க,
அவித்த இட்லியை ஹாட்பாக்ஸில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த இந்துமதியின் கைகள் அப்படியே நின்றன.
மெல்ல திரும்பி மாமியாரைப் பார்த்தாள்.
தானும் மருமகள் பக்கம் திரும்பியவர், “உனக்கு என் மேல இருக்குற கோபம் புரியுது. அந்த நேரம் நான் உன் பக்கமும் பேசியிருக்கணும். ஆனா, உங்க அம்மா மேல இருந்த ஆதங்கம் உன் பக்கம் திரும்பிருச்சு. அது தப்புதான். நீ எங்க குடும்பத்துக்குக் கிடைச்ச வரம். பையனுக்குக் காதல் கல்யாணமாச்சே பொண்ணு எப்படி நடந்துப்பாளோன்னு முன்னாடி எல்லாம் மனதுக்குள் ஒரு பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் நீ அந்தப் பயத்தை எல்லாம் ஒன்னுமில்லாமல் ஆக்கி இந்தக் குடும்பத்துக்காக நிறைய விட்டு கொடுத்து போற. உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்திருந்தால் மன்னிச்சு…” என்று அவர் முழுதாகச் சொல்லி முடிக்கும் முன்,
“அத்தை, என்ன பண்றீங்க. வேண்டாம்…” என்று தடுத்திருந்தாள் இந்துமதி.