எழிலன்புவின் ‘யுத்தம் செய்தாய் என்னுள்ளே’
பிடிவாதக்கார மிலிட்டரி மாம்ஸ் மணிவர்மன் அவனுக்குள் காதல் யுத்தம் செய்யும் கீர்த்தனா – யுத்தமாக ஆரம்பித்து கவிதையாய் முடிந்த அவர்களின் காதல்.
விடுமுறைக்கு ஊருக்கு வரும் இராணுவவீரன் மணிவர்மனைச் சுற்றி நகரும் கதை. திருமணமே வேண்டாமென பிடிவாதமாக இருப்பவனின் வாழ்க்கைக்குள் அதிரடியாக நுழையும் கீர்த்தனா அவன் மனதிலும் இடம் பிடிப்பாளா? மணிவர்மனின் பிடிவாதத்திற்கான காரணம் எதுவாக இருக்கும்?
மணிவர்மனை திருமணகோலத்தில் பார்க்க தவிக்கிற அம்மாவின் ஏக்கம், தம்பிக்காக பேசுற மகேஷ்வரனின் பாசம் இதை விட கவர்ந்தது இந்துவுக்கும் கோகிலாவுக்கும் இடையில இருந்த அன்பு. மாமியாரும் மருமகளும் மோதிக்கிறதுக்குச் சூழ்நிலை அமைந்தாலும் அதை இந்து கையாண்ட விதம் அருமை.
மீனா – வன்மத்தின் மொத்த உருவம். தன்னைத் தவிர யாரையும் நிம்மதியா இருக்கவிடாத குணம். சொந்த தங்கச்சி கிட்டவே வன்மம் காட்டி வில்லி வேலை செய்யுற வன்ம கொடவுன்.
சகுந்தலா - பெண் சகுனி. இவங்களோட சகுனி வேலையில் இந்துமதி சிக்காதது அவளோட மதியூகம்.
மணிவர்மன் காதலுக்குச் சொன்ன விளக்கம் அருமை.
சின்னப்பிள்ளை பக்குவமில்லனு மணிவர்மன் கிட்ட பேர் எடுத்த கீர்த்தனாவோட வைராக்கியமும் தைரியமும், அவ அவன் கிட்ட உடைஞ்சு அழுற இடமும் மனசை தொட்டுச்சு.
அழகான காதல் + குடும்பக்கதையை குடுத்ததுக்கு நன்றிக்கா @Ezhilanbu .
கதை ஏப்ரல் 15 வரைக்கும் தான் தளத்துல இருக்கும் மக்களே! படிக்க விரும்புறவங்க சீக்கிரம் படிச்சிடுங்க.
பிடிவாதக்கார மிலிட்டரி மாம்ஸ் மணிவர்மன் அவனுக்குள் காதல் யுத்தம் செய்யும் கீர்த்தனா – யுத்தமாக ஆரம்பித்து கவிதையாய் முடிந்த அவர்களின் காதல்.
விடுமுறைக்கு ஊருக்கு வரும் இராணுவவீரன் மணிவர்மனைச் சுற்றி நகரும் கதை. திருமணமே வேண்டாமென பிடிவாதமாக இருப்பவனின் வாழ்க்கைக்குள் அதிரடியாக நுழையும் கீர்த்தனா அவன் மனதிலும் இடம் பிடிப்பாளா? மணிவர்மனின் பிடிவாதத்திற்கான காரணம் எதுவாக இருக்கும்?
மணிவர்மனை திருமணகோலத்தில் பார்க்க தவிக்கிற அம்மாவின் ஏக்கம், தம்பிக்காக பேசுற மகேஷ்வரனின் பாசம் இதை விட கவர்ந்தது இந்துவுக்கும் கோகிலாவுக்கும் இடையில இருந்த அன்பு. மாமியாரும் மருமகளும் மோதிக்கிறதுக்குச் சூழ்நிலை அமைந்தாலும் அதை இந்து கையாண்ட விதம் அருமை.
மீனா – வன்மத்தின் மொத்த உருவம். தன்னைத் தவிர யாரையும் நிம்மதியா இருக்கவிடாத குணம். சொந்த தங்கச்சி கிட்டவே வன்மம் காட்டி வில்லி வேலை செய்யுற வன்ம கொடவுன்.
சகுந்தலா - பெண் சகுனி. இவங்களோட சகுனி வேலையில் இந்துமதி சிக்காதது அவளோட மதியூகம்.
மணிவர்மன் காதலுக்குச் சொன்ன விளக்கம் அருமை.
சின்னப்பிள்ளை பக்குவமில்லனு மணிவர்மன் கிட்ட பேர் எடுத்த கீர்த்தனாவோட வைராக்கியமும் தைரியமும், அவ அவன் கிட்ட உடைஞ்சு அழுற இடமும் மனசை தொட்டுச்சு.
அழகான காதல் + குடும்பக்கதையை குடுத்ததுக்கு நன்றிக்கா @Ezhilanbu .
கதை ஏப்ரல் 15 வரைக்கும் தான் தளத்துல இருக்கும் மக்களே! படிக்க விரும்புறவங்க சீக்கிரம் படிச்சிடுங்க.
யுத்தம் செய்தாய் என்னுள்ளே!
ezhilanbunovels.com
Last edited: