கலாட்டா காதல்
காணாத கதிரை
கண்கள் தேட
கண்ணுக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி ஆட்டம்
காட்டும் கணவன்
காதருகே கேட்ட
காட்டு கத்தலில்
கன்னி மனம் பதைபதைக்க
கண்டுக்காம சீண்டும்
கணவனை கோபமாய் பார்த்தால்
காதலால் வழிகிற
கண்ணை விழி விரித்து பார்க்க
கள்வன் கேட்ட கேள்விக்கு
காட்டமாய் பார்த்தாள் ......
உனக்கு பொங்கல் பிடிக்குமா
என்னை பிடிக்குமா???
போங்கள் அத்தான் .....
பொங்கலை விட
உங்களை தான் பிடிக்கும் என்று
பிடித்ததை அவனை இறுக
பிடித்து அனைத்து கூறினால்
பிடிக்காமல் போகுமோ _ அவளை
படித்தவனுக்கு......
பள்ளியறை பாடம்
படிக்கும் வேளையில்
புரியாததை புரிந்த கொண்டே
புவி கதிர் வாழ்வு தொடங்கட்டும்......
பிரியாவிடை நாம் கொடுப்போம்