பொம்பளைங்க காதலை நம்பி விடாதே .
(அது அப்படி அல்ல சகி பொம்பளைங்களே .....
காதலை நம்பி விடாதே!!!!!)
அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பதற்கு என்று
அன்றே முடக்கி வைத்தான்
அதையும் மீறி.....
அனைத்தையும்
அன்பாலும்
அறிவாலும்
அறிவை அறிவாய் அரிவை.....
ஆணின் உலகை
அழகாகவும் அற்புதமாகவும்
அமைக்கும் பெண்களை
அடிமை படுத்தும்
ஆண் வர்க்கம் என்று மாறுமோ....
அரசியல் பேசும் பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு அலட்சியமே...
பாலூட்ட நீ வேண்டும்
பரிவு காட்ட நீ வேண்டும்
பந்தம் ஏற்பட நீ வேண்டும்
பாசம் வைக்க நீ வேண்டும்
பாதையில் கைகோர்க்க நீ வேண்டும்
படுத்து உறங்க உன் மடி வேண்டும்
பழி போடவும் நீ வேண்டும்.....