• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூரண நிலவே! - அமேசான்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பூரண நிலவே!

எனது அடுத்த கதை அமேசான் கிண்டிலில் தொடராக வந்து கொண்டிருக்கிறது.

கதையிலிருந்து சின்ன டீசர்...​

அவர்களின் முதல் வாழ்க்கைப் பயணம் தொடங்கிய இடம்! அன்று நடந்த ஒவ்வொன்றும் பசுமையாக அவனுள் இருந்தது.

மனைவியைத் தேடி உடலும், உள்ளமும் ஏங்கியது. தன் நிலை புரியாமல் தள்ளி நின்று மனைவி கண்ணாமூச்சி ஆடுகிறாளே என்று அவளின் மீது கோபமும் வந்தது.

தான் வெளியே செல்லாமல் அவள் உள்ளே வர மாட்டாள் என்பது புரிய, வெளியே சென்றான்.

அடுத்து அவள் சென்று உடையை மாற்றிவிட்டு வந்தாள். இங்கேயும் ஒரு முறை இருவரும் இணைந்து சாமி கும்பிட்டனர்.

மதிய விருந்து தயாரானதும் பெரியவர்களுடன் அமர்ந்து உண்டனர்.

எல்லாம் நல்லபடியாக முடிய, மதிய ஓய்விற்காக இருவரும் உள்ளே வர, “நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க. நான் வெளியே அம்மாவிடம் பேசிட்டு இருக்கேன்…” என்று அவள் வெளியே செல்ல போக, அவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன்,

“இப்ப எதுக்கு நீ ஓடிட்டே இருக்க? என் கூட இருந்தால் நான் என்ன உன்னைக் கடிச்சா தின்னுடுவேன்?” எனக் கேட்டான்.

அவளின் கை அவன் கைக்குள் சிக்கியிருக்க, அவளோ கணவனைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இன்னும் எத்தனை நாள் என்னிடம் முகம் திருப்பிக் கொண்டிருக்க ஐடியா பண்ணிருக்க? என் பக்கம் திரும்பு க்யூட்டி…” என்றான் ஏக்கமாக.

சில நாட்களுக்குப் பிறகு கணவன் அழைத்த ‘க்யூட்டி’ அவளைத் தடம் புரள வைத்தது.

கண்களில் கண்ணீர் தேங்க, பொங்கி வந்த அழுகையை அடக்க உதடுகளைப் பற்களால் கடித்துக் கொண்டாள்.

அவள் திரும்பவில்லை என்று அப்படியே விட்டுவிடாமல், கட்டிலில் அமர்ந்திருந்தவன் அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து, அவளின் கழுத்தில் முகம் புதைத்து வாசத்தை முகர்ந்தான்.

அவளின் உடல் கூசி சிலிர்த்தது.

ஆனாலும், உடலை விறைப்பாக நிமிர்த்தினாள்.

அவளின் வயிற்றைச் சுற்றி கையை போட்டு தன்னோடு அழுத்திக் கொண்டவன், அவளின் வெற்று முதுகில் தன் மீசை உரோமங்களை உராயவிட்டான்.

நெளிந்து கணவனிடமிருந்து விடுபட முயன்றாள். ஆனால், அவளைச் சுற்றி வளைத்திருந்த அவனின் கையின் வலுவிற்கு முன் அவளின் முயற்சி தோல்வியைத் தழுவியது. கணவனின் ஸ்பரிசம் அவளைப் பலவீனமாக்க முயன்றது.

மீண்டும் அவளின் முதுகை உரசியது அவனின் அதரங்கள்.

"விடுங்க, வேண்டாம்!" பலவீனமாக மறுத்தாள் பெண்ணவள்.

"ஹாட்டின்னு கூப்பிடு க்யூட்டி…" என்று அவன் குரல் கிசுகிசுப்பாக அவளின் காது மடல்களைப் பதம் பார்த்தன.

மறுப்பாகத் தலையை அசைத்தாள்.

"இன்னும் ஹாட்டாகலையா நீ? ஆக்கட்டுமா?" என்றவன் கை அவளின் சேலை மறைத்த இடைக்குள் புகுந்து இறுக்கிப் பிடித்தது.

பூர்ணாவின் மேனி உணர்ச்சி வேகத்தில் நடுங்கியது. இதற்கு மேல் தாங்கமாட்டோம் என்று உணர்ந்தவள், பலவீனமான மனத்தைத் திடமாக்கிக் கொண்டு கணவனை விட்டுப் பிரிந்து எழுந்தாள்.

மீண்டும் அவளின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“வேண்டாம், விடுங்க. என்னோட பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள பார்க்காதீங்க…” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.


 

New Episodes Thread

Top Bottom