• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பிம்பம் 16+ ....வேதா விஷால்

Apsareezbeena loganathan

Well-known member
Member
பிம்பம் 16+
ஆசிரியர் வேதா விஷால்
நாயகன் : சசிதரன்
நாயகி : சாயா லட்சுமி
16 அத்தியாயம் கொண்டு
படிக்கும் பொழுது மனதை
பதற வைக்கும் கதை....

முதல் முறை பார்த்ததும்
மயங்கிய சசிதரன்
மனதில் பட்டதை
மறைக்காமல் உரைத்து
மணந்து கொள்ள
சம்மதம் வேண்டி
மங்கையிடம் நிற்க
மங்கைக்கோ சந்தேகம்
மித மிஞ்சிய பணக்காரன் மதியில் என்ன கோளாறு
மதி மயங்கி தன்னை
மணந்து கொள்ள.....

தந்தையின் இழப்பால்
தன் தங்கையுடன்
தவித்துக் கொண்டிருக்கும் தன்னளை திடீரென்று
தவிர்க்க முடியாத சூழ்நிலையால் திடீர் திருமணம்
திடீர் இடம் மாற்றம் அனைத்தும் துரிதமாய் நடக்க
தடுமாறித்தான் போனால்
திருமதி சாயா சசிதரன்....

அவனின் பாசம் முதலில் ஆச்சரியப்பட்டாலும் போக போக அவனின் செயலில்
ஆத்திரம் வந்தாலும்
அதைப் பொறுத்துக் கொண்டு அவனின் ஏக்கத்தை
அவனின் வாட்டத்தை
அவள் போக்கிட
அவன் அன்பில்
அவன் காலடியில்
அறிவற்ற ஜீவனாய் சுத்த ஆரம்பிக்க வைத்து விட்டான்
அழகு மனைவியை....

அண்ணன் தம்பி உறவு விரிசல் அதைத் தாண்டி ஸ்ரீதரன்
அண்ணியை அன்னையாக
அவளுடன் பழக
அண்ணனுக்கு ஆத்திரம்
அதை தவிர்க்க
அவனும் விலகிச் செல்ல...
அவளின் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் ஸ்ரீதரன் உதவியை நாட
அதற்கும் சந்தேகம்.....

கனவு காணும் சாயா
கனவில் வரும் காட்சிகள்
கண் முன்னே நடப்பது போல கலங்கி இருக்க
கண்ட கனவு பலிக்கும்படியாய் கணவனே நினைவில் மாற
கதறி துடிக்கும் சாயா...

கடந்த கால நிகழ்ச்சிகள்
கசப்பான சம்பவங்களால்
கணவனின் மனநிலை பாதிப்படைய....
கணவனின் செயலுக்கு
எவ்வளவு சப்ப கட்டு
கட்டினாலும்
நிதர்சனத்தை உணர்த்தும் நொடி சற்றே நம்மை
சிலிர்க்க வைக்கிறது ....

தவறு செய்தவனுக்கு தண்டனையாய் மன்னிப்பு தரலாம்
தற்கொலை முடிவு அல்ல ஆனால் தற்கொலை வழிவழியாக தந்தையும் தற்கொலையை தாயும் தற்கொலையே....
தன் உயிரை மாய்த்துக் கொள்ளும்
உரிமை யாருக்கும் இல்லைதான் ஆனால்
தன் தவறுக்கு
தானே தண்டனை கொடுத்துக் கொள்வது
தவிர்க்கப்பட வேண்டிய விஷயம்....


தன் கணவனின் சொல்படி
தன் சுயத்தை இழந்த சாயா
தன் கணவனுக்காகவே
தன் காலில் நின்று
சுயமாய் நிற்கும் இடம் அருமையோ அருமை......

வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐💐...
 

New Episodes Thread

Top Bottom