• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாலையின் பனித்துளி - எழிலன்பு

Nithya Mariappan

✍️
Writer
எழிலன்புவின் பாலையில் பனித்துளி

மறுமணம் கதைகளுக்கான cliché moments இல்லாத ஒரு மறுமணம் கதை.

கணவனை இழந்த இரு குழந்தைகளின் தாயான ரஞ்சனா, கடந்த காலத்தின் சம்பவங்களால் இறுக்கமாய் நடமாடும் வங்கி மேலாளர் பிரதாபன் – இவங்களுக்கு வாழ்க்கை குடுத்த இரண்டாவது வாய்ப்பு தான் இந்த கதை.

சிங்கிள் மதரா ரஞ்சனாவின் உணர்வுகளை சொன்ன விதம் அருமை. அவளோட கோபம், மறுப்பு, இறுக்கம் இது எல்லாத்துக்கும் பின்னாடி இருக்குற வலியை இயல்பா சொல்லிருக்கிங்க அக்கா.

சமுதாயத்துல எப்பவும் பெண்கள் மட்டும் தான் சுரண்டப்படுறாங்களா என்ன? ஆண்களும் சில உணர்வுரீதியான சுரண்டல்களுக்கு பலியாகுறாங்க. அவங்கள்ல ஒருத்தனா பிரதாபன். தன்னோட வலிக்கு வடிகாலா ஹரிணி பரத்தை அவன் நேசிச்ச விதம் ரொம்ப உணர்ச்சிப்பூர்வமா இருந்துச்சு.

பாலையாய் மாறுன ரெண்டு பேரோட வாழ்க்கையிலயும் இரண்டாவது வாய்ப்பு வந்தப்ப பிரதாபன் ரொம்ப இயல்பா அதை ஏத்துக்கிட்டான். ஆனா ரஞ்சனா தயக்கமும் பயமுமா யோசிச்சு விலகலோடவே பயணிக்கிறா. பெண்கள் எல்லாருக்கும் வர்ற இயல்பான தயக்கம் அது. அதை காட்சிப்படுத்துன விதம் நல்லா இருந்துச்சுக்கா.

பிரதாபனோட டயலாக்ஸ், ரஞ்சும்மா, பாப்ஸ்ங்கிற அழைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சுது.

நீலகண்டன் மாதிரி மாமனார்களுக்கு மத்தியில கஜேந்திரன் மாதிரி கேவலவாதிகளும் இருக்காங்க. அவங்களை பிரதாபன் ட்ரீட் பண்ணுன விதம் சூப்பர்.

பிரதாபன் ரஞ்சனாக்கு இடையில வர்ற புரிதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் அழகோ அழகு.

எங்கயும் போரடிக்காம இயல்பான மறுமணம் கதைய குடுத்ததுக்கு தேங்க்ஸ் @Ezhilanbu அக்கா.
 

New Episodes Thread

Top Bottom