• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய "என் இனிய இன்பனே"

ஓம் ஸ்ரீ சாயிராம்

நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய “என் இனிய இன்பனே”


இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை (அதாவது எனக்கு இன்பாவை ஏன் ரொம்பப் பிடித்தது என்பதைப் பற்றி) உங்களிடம் பகிர்கிறேன் நர்மதா.

‘அழகிய அன்னமே’ கதையில் நீங்கள் எழுதிய இரண்டு காட்சிகளைப் படித்தப் பின்தான், இன்பாவிற்குத் தனிக்கதை எழுதச்சொல்லி உங்களிடம் கேட்கவேண்டும் என்று தோன்றியது.

என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, நீங்கள் எடுத்த ஆத்மார்த்தமான முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் நர்மதா.

1. மனைவியிடம் தன் முன்னாள் காதலைப் பற்றி சொல்லாமல், மூடி மறைத்ததோடு மட்டுமில்லாமல், நங்கையிடம் பேச, அவன் எடுத்த முயற்சிகள் யாவற்றையும் கண்டு “இன்பாமேல் கோபம்” வந்தது.

2. பிறர் மனத்தை நோகடித்துப் பேசத் தெரியாத ராஜன், இன்பாவிடம் கர்மா, பாவம், புண்ணியம் என்றெல்லாம், சாபம் விடாத குறையாகப் பேசியபோது, எங்கள் ராஜனை ஏன் அப்படிப் பேசவைத்தீர்கள் என்று “உங்கள்மேல் கோபம்” வந்தது.

ஆக, கோக்கிமா! இன்பாவுக்குத் தனிக்கதை கேட்ட என் நோக்கம், “கள்ளம் கபடமில்லாத சிந்து” மற்றும் “பொறுமையின் சிகரம் ராஜனு”க்காகத் தான்.
இன்னும் சொல்லப்போனால், எனக்கும் இன்பாவை வச்சு செய்யணும்னு தான் ஆசை. உண்மைகளை அறிந்த சிந்து பத்திரகாளியா மாறுவான்னு ரொம்ப ஆசையா காத்திருந்தேன்.

ஆனால், இந்த ஆத்தர் தன் கற்பனை வளத்தாலும், உணர்வுப்பூர்வமான சொல்லாடலாலும், சிந்துவையும் சரி, என்னையும் சரி இன்பா பக்கம் ஈர்த்துட்டாங்கன்னு தான் சொல்லணும்.

என் மனத்தை நெருடிய இரண்டு விஷயங்களையும், எங்கேயும் எதற்காகவும் நியாயப்படுத்தாமல், இயல்பாகக் கதையை நகர்த்திய உங்கள் திறனுக்கு சல்யூட் நர்மதா.

படிப்பறிவு இல்லாத சிந்துவை இன்பா தன் ஆதாயத்துக்காக(காதல் தோல்வி) மணந்துகொண்டிருப்பானோ என்ற பிம்பம் தான் அவனைப் பற்றி, ‘அழகிய அன்னமே’ கதையில் இருந்தது.

ஆனால் சிந்துவின் அறிமுகம், அவர்கள் முதல் சந்திப்பு, இருவருக்குள்ளும் துளிர்த்த நட்பு, அது காதலாய் மாறிய தருணம் என்று ஒவ்வொன்றும் சற்றும் எதிர்பார்க்காத கோணத்தில், வித்தியாசமாகவும் ரசனையாகவும் இருந்தது.
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, தன் மனைவியின் படிப்பறிவையோ, வளர்ந்த சூழலையோ கனவிலும் குறையாக நினைக்காத இன்பாவின் நற்குணம் அசத்தல் என்றால், அவள் திறமைகளை ஊக்குவித்து, தன்னம்பிக்கை நிறைந்தவளாக மாற்றிய அவன் செயல் அதற்கும் ஒருபடி மேல். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.1)

சுரேன் அப்பா தன் முன்னாள் காதலியின் தந்தை என்று அறிந்தபோதும், அவர் அறிவிப்பே இல்லாமல் வீட்டிற்கு வந்து குற்றம் சுமத்தியபோதும், நிதானம் கடைப்பிடித்தும், தன் சூழ்நிலையை எடுத்துச் சொல்லியும், சிறிதும் தயக்கமின்றி மன்னிப்பு கேட்ட இன்பாவின் பொறுமையை என்ன நான் சொல்ல. (இன்பாவை ஹீரோவாக ஏற்க Point No. 2)

அவனுக்கு இணையாக, சுரேன் அப்பாவும் நிதானமாகச் செயல்பட்ட போதுதான் மனம் கனத்தது ஆத்தரே.

அவர்கள் முதல் கைபேசி உரையாடலும் இதே மாதிரி சுமூகமாக இருந்திருந்தால் பிரச்சனைகளே வந்திருக்காது அல்லவா என்று தோன்றியது. (ஆனால் வரதராஜ பெருமாளின் உண்மை பக்தனின் வேண்டுதல் நினைவில் வர, எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி மனத்தைத் தேற்றிக்கொண்டேன்.)

யாரிடம் பேசத்தெரியாமல் பேசி தன் காதலில் மண் அள்ளிப்போட்டுக் கொண்டானோ, அவராலேயே அவன் திருமண வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஜீன்ஸ் டிஷர்டில் வந்த சுரேன் அப்பாவின் காட்சிகள் மனத்தைக் கொள்ளைக்கொண்டது.

தோளுக்கு மேல் வளர்ந்தாலும், தந்தையைக் கண்டதும் குழந்தையாக மாறி, செய்த தவறுகளுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டும், அவர் சொல்லே வேதமென்று அவர் அறிவுரைகள் படி நடந்த இன்பாவின் செயல்கள் அத்தனையும் அருமை. (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.3)

மகனின் கோணத்தில் சிந்தித்து, அவனுக்குத் தார்மீக ஆதரவு தந்ததோடு மட்டுமில்லாமல், பனிப்போர் கொண்ட குடும்பத்தினரை இழுத்துப் பிடித்து குடும்ப உறவுகளின் மகத்துவத்தை எடுத்துச்சொன்ன கந்துப்பாவும் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார்.

குறிப்பாக, கட்டியவள் எப்பேர்ப்பட்டவளாயினும், அவளிடம் ஒளிவுமறைவுகள் இருக்கவே கூடாது என்று அவர் மகனுக்குப் போதித்த இல்லற தர்மம், மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. பூர்ணம்! You are truly blessed.

சுரேன் அப்பாவும், கந்துப்பாவும் தான் இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள்.

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதை மறுபடியும் செய்யக்கூடாது என்று ஆத்மார்த்தமாக எண்ணும் ஒருவனின் முயற்சிகளைப் பாராட்டத் தானே வேண்டும்.

நங்கை விஷயத்தில் சுயமாக முடிவெடுக்கத் தெரியாமலும், கோழையாகப் பின்வாங்கி பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருந்த அதே இன்பா தான், சிந்துவிற்காக, சுயநலம் படைத்த அவள் மாமனிடமும், காரியவாதிகளான தன் அண்ணன் குடும்பத்தினரிடமும், பழிச் சுமத்திய தன் அன்னையிடமும் நிமிர்வாகப் பேசினான்;

கணவன், “நான் இருக்கிறேன்!!!” என்ற நம்பிக்கையை அளித்தான். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.4)

(For Nangai Fans: இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நங்கை விஷயத்தில் அவன் செயல்களை மன்னிக்க முடியாதுதான். ஆனால் அதே சமயத்தில், இன்பா விலகிப்போனது முற்றிலும் தவறு என்றால், அவனை அந்த நிலைமைக்குத் தள்ளிய நங்கைக்கும்(Pressurizing him for marriage)அதில் சிறிய பங்கு உண்டு. மேலும் அந்த நேரத்தில் அவர்கள் வயது, Maturity Level, முக்கியமாக இருவரின் அம்மாக்களும் தந்த அழுத்தம் என்ற அனைத்தும் அவர்கள் பிரிய காரணமாக இருந்தது என்று சொல்லவேண்டும்.)

அனுபவம் தந்த கசப்பான பாடத்தில், அன்னம் விஷயத்தில் Team Leader என்பதைத் தாண்டி, பாதுகாவலராக நடந்துகொண்டு இன்பாவின் ஒவ்வொரு செயலும் உயர்ந்தது. இன்னும் சொல்லப்போனால், Team Leader என்று வரும்போது, எங்கள் ராஜனை விட சிறப்பாகச் செயலாற்றினான் என்று தான் சொல்லவேண்டும். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.5)

ராஜன் இன்பாவைக் கடிந்து பேசிய அந்த நெருடலான காட்சிக்குப் பின்னால், இரு குடும்பங்களிலும் நடந்த நிகழ்வுகளை நீங்கள் சித்தரித்த இடம் சூப்பரோ சூப்பர்.
அதுவும், சிந்துவும், சுரேன் அப்பாவும் பேசிய வசனங்கள் அதிரடி சரவெடிதான்.
மனஸ்தாபங்கள் மறந்து உறவாடும் ஜோடிகளின் காட்சியில் உச்சிகுளிர்ந்து போனேன். அந்த குரூப் ஃபோட்டோவை பருகிய என் விழிகளும், மனமும் நிறைந்துவிட்டது. Thank you soooooooo much.

இன்னார்க்கு இன்னார் என்று சொல்லும்விதமாக, காதலின் வெற்றி தோல்விகளையும், திருமண பந்தத்தின் சண்டை சமாதானங்களையும், குடும்ப உறவுகளின் நிறைகுறைகளையும் எடுத்துச் சொல்லும் விதமாக நேர்த்தியான குடும்பக் கதை தந்த தோழி நர்மதாவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

கதைக்கான லிங்க்:

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்

@Narmadha Subramaniyam
 
Awesome Review Vidya.. kathai pattriya ungal paarvaiyum athai neengal pagirnthu kollum vithamum vera level. Thank you so much for this lovely analysis and review of the story :love:
 
ஓம் ஸ்ரீ சாயிராம்

நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய “என் இனிய இன்பனே”


இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை (அதாவது எனக்கு இன்பாவை ஏன் ரொம்பப் பிடித்தது என்பதைப் பற்றி) உங்களிடம் பகிர்கிறேன் நர்மதா.

‘அழகிய அன்னமே’ கதையில் நீங்கள் எழுதிய இரண்டு காட்சிகளைப் படித்தப் பின்தான், இன்பாவிற்குத் தனிக்கதை எழுதச்சொல்லி உங்களிடம் கேட்கவேண்டும் என்று தோன்றியது.

என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, நீங்கள் எடுத்த ஆத்மார்த்தமான முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் நர்மதா.

1. மனைவியிடம் தன் முன்னாள் காதலைப் பற்றி சொல்லாமல், மூடி மறைத்ததோடு மட்டுமில்லாமல், நங்கையிடம் பேச, அவன் எடுத்த முயற்சிகள் யாவற்றையும் கண்டு “இன்பாமேல் கோபம்” வந்தது.

2. பிறர் மனத்தை நோகடித்துப் பேசத் தெரியாத ராஜன், இன்பாவிடம் கர்மா, பாவம், புண்ணியம் என்றெல்லாம், சாபம் விடாத குறையாகப் பேசியபோது, எங்கள் ராஜனை ஏன் அப்படிப் பேசவைத்தீர்கள் என்று “உங்கள்மேல் கோபம்” வந்தது.

ஆக, கோக்கிமா! இன்பாவுக்குத் தனிக்கதை கேட்ட என் நோக்கம், “கள்ளம் கபடமில்லாத சிந்து” மற்றும் “பொறுமையின் சிகரம் ராஜனு”க்காகத் தான்.
இன்னும் சொல்லப்போனால், எனக்கும் இன்பாவை வச்சு செய்யணும்னு தான் ஆசை. உண்மைகளை அறிந்த சிந்து பத்திரகாளியா மாறுவான்னு ரொம்ப ஆசையா காத்திருந்தேன்.

ஆனால், இந்த ஆத்தர் தன் கற்பனை வளத்தாலும், உணர்வுப்பூர்வமான சொல்லாடலாலும், சிந்துவையும் சரி, என்னையும் சரி இன்பா பக்கம் ஈர்த்துட்டாங்கன்னு தான் சொல்லணும்.

என் மனத்தை நெருடிய இரண்டு விஷயங்களையும், எங்கேயும் எதற்காகவும் நியாயப்படுத்தாமல், இயல்பாகக் கதையை நகர்த்திய உங்கள் திறனுக்கு சல்யூட் நர்மதா.

படிப்பறிவு இல்லாத சிந்துவை இன்பா தன் ஆதாயத்துக்காக(காதல் தோல்வி) மணந்துகொண்டிருப்பானோ என்ற பிம்பம் தான் அவனைப் பற்றி, ‘அழகிய அன்னமே’ கதையில் இருந்தது.

ஆனால் சிந்துவின் அறிமுகம், அவர்கள் முதல் சந்திப்பு, இருவருக்குள்ளும் துளிர்த்த நட்பு, அது காதலாய் மாறிய தருணம் என்று ஒவ்வொன்றும் சற்றும் எதிர்பார்க்காத கோணத்தில், வித்தியாசமாகவும் ரசனையாகவும் இருந்தது.
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, தன் மனைவியின் படிப்பறிவையோ, வளர்ந்த சூழலையோ கனவிலும் குறையாக நினைக்காத இன்பாவின் நற்குணம் அசத்தல் என்றால், அவள் திறமைகளை ஊக்குவித்து, தன்னம்பிக்கை நிறைந்தவளாக மாற்றிய அவன் செயல் அதற்கும் ஒருபடி மேல். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.1)

சுரேன் அப்பா தன் முன்னாள் காதலியின் தந்தை என்று அறிந்தபோதும், அவர் அறிவிப்பே இல்லாமல் வீட்டிற்கு வந்து குற்றம் சுமத்தியபோதும், நிதானம் கடைப்பிடித்தும், தன் சூழ்நிலையை எடுத்துச் சொல்லியும், சிறிதும் தயக்கமின்றி மன்னிப்பு கேட்ட இன்பாவின் பொறுமையை என்ன நான் சொல்ல. (இன்பாவை ஹீரோவாக ஏற்க Point No. 2)

அவனுக்கு இணையாக, சுரேன் அப்பாவும் நிதானமாகச் செயல்பட்ட போதுதான் மனம் கனத்தது ஆத்தரே.

அவர்கள் முதல் கைபேசி உரையாடலும் இதே மாதிரி சுமூகமாக இருந்திருந்தால் பிரச்சனைகளே வந்திருக்காது அல்லவா என்று தோன்றியது. (ஆனால் வரதராஜ பெருமாளின் உண்மை பக்தனின் வேண்டுதல் நினைவில் வர, எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி மனத்தைத் தேற்றிக்கொண்டேன்.)

யாரிடம் பேசத்தெரியாமல் பேசி தன் காதலில் மண் அள்ளிப்போட்டுக் கொண்டானோ, அவராலேயே அவன் திருமண வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஜீன்ஸ் டிஷர்டில் வந்த சுரேன் அப்பாவின் காட்சிகள் மனத்தைக் கொள்ளைக்கொண்டது.

தோளுக்கு மேல் வளர்ந்தாலும், தந்தையைக் கண்டதும் குழந்தையாக மாறி, செய்த தவறுகளுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டும், அவர் சொல்லே வேதமென்று அவர் அறிவுரைகள் படி நடந்த இன்பாவின் செயல்கள் அத்தனையும் அருமை. (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.3)

மகனின் கோணத்தில் சிந்தித்து, அவனுக்குத் தார்மீக ஆதரவு தந்ததோடு மட்டுமில்லாமல், பனிப்போர் கொண்ட குடும்பத்தினரை இழுத்துப் பிடித்து குடும்ப உறவுகளின் மகத்துவத்தை எடுத்துச்சொன்ன கந்துப்பாவும் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார்.

குறிப்பாக, கட்டியவள் எப்பேர்ப்பட்டவளாயினும், அவளிடம் ஒளிவுமறைவுகள் இருக்கவே கூடாது என்று அவர் மகனுக்குப் போதித்த இல்லற தர்மம், மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. பூர்ணம்! You are truly blessed.

சுரேன் அப்பாவும், கந்துப்பாவும் தான் இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள்.

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதை மறுபடியும் செய்யக்கூடாது என்று ஆத்மார்த்தமாக எண்ணும் ஒருவனின் முயற்சிகளைப் பாராட்டத் தானே வேண்டும்.

நங்கை விஷயத்தில் சுயமாக முடிவெடுக்கத் தெரியாமலும், கோழையாகப் பின்வாங்கி பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருந்த அதே இன்பா தான், சிந்துவிற்காக, சுயநலம் படைத்த அவள் மாமனிடமும், காரியவாதிகளான தன் அண்ணன் குடும்பத்தினரிடமும், பழிச் சுமத்திய தன் அன்னையிடமும் நிமிர்வாகப் பேசினான்;

கணவன், “நான் இருக்கிறேன்!!!” என்ற நம்பிக்கையை அளித்தான். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.4)

(For Nangai Fans: இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நங்கை விஷயத்தில் அவன் செயல்களை மன்னிக்க முடியாதுதான். ஆனால் அதே சமயத்தில், இன்பா விலகிப்போனது முற்றிலும் தவறு என்றால், அவனை அந்த நிலைமைக்குத் தள்ளிய நங்கைக்கும்(Pressurizing him for marriage)அதில் சிறிய பங்கு உண்டு. மேலும் அந்த நேரத்தில் அவர்கள் வயது, Maturity Level, முக்கியமாக இருவரின் அம்மாக்களும் தந்த அழுத்தம் என்ற அனைத்தும் அவர்கள் பிரிய காரணமாக இருந்தது என்று சொல்லவேண்டும்.)

அனுபவம் தந்த கசப்பான பாடத்தில், அன்னம் விஷயத்தில் Team Leader என்பதைத் தாண்டி, பாதுகாவலராக நடந்துகொண்டு இன்பாவின் ஒவ்வொரு செயலும் உயர்ந்தது. இன்னும் சொல்லப்போனால், Team Leader என்று வரும்போது, எங்கள் ராஜனை விட சிறப்பாகச் செயலாற்றினான் என்று தான் சொல்லவேண்டும். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.5)

ராஜன் இன்பாவைக் கடிந்து பேசிய அந்த நெருடலான காட்சிக்குப் பின்னால், இரு குடும்பங்களிலும் நடந்த நிகழ்வுகளை நீங்கள் சித்தரித்த இடம் சூப்பரோ சூப்பர்.
அதுவும், சிந்துவும், சுரேன் அப்பாவும் பேசிய வசனங்கள் அதிரடி சரவெடிதான்.
மனஸ்தாபங்கள் மறந்து உறவாடும் ஜோடிகளின் காட்சியில் உச்சிகுளிர்ந்து போனேன். அந்த குரூப் ஃபோட்டோவை பருகிய என் விழிகளும், மனமும் நிறைந்துவிட்டது. Thank you soooooooo much.

இன்னார்க்கு இன்னார் என்று சொல்லும்விதமாக, காதலின் வெற்றி தோல்விகளையும், திருமண பந்தத்தின் சண்டை சமாதானங்களையும், குடும்ப உறவுகளின் நிறைகுறைகளையும் எடுத்துச் சொல்லும் விதமாக நேர்த்தியான குடும்பக் கதை தந்த தோழி நர்மதாவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும்💜💜💜💜💜 பாராட்டுகளும்.

கதைக்கான லிங்க்:

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்

@Narmadha Subramaniyam
மிக்க நன்றி 💜 💜 💜 💜
 

New Episodes Thread

Top Bottom