• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

செவ்வந்திப்பூ அவர்கள் எழுதிய "என் சித்தம் சித்திரமே"

அன்புள்ள செவ்வந்திப்பூவே!

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவர்ந்த விஷயங்களையும், கதாபாத்திரங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்கிறேன் சகி.

குடும்ப உணர்வுகளை கதை முழுவதும் மிக மிக யதார்த்தமாகக் கொடுத்த உங்கள் எழுத்துநடை அருமை சகி. அன்றாடம் வீட்டில் நடக்கும் சம்பாஷணைகளுடன் கதை நகர்த்திய விதம் மிகவும் அருமை.

அளவில்லாமல் காபி குடிக்கும் பெரியம்மா; அதை அன்பாகக் கண்டிக்கும் செல்லப்பிள்ளை; உருளை மசாலாவும் உப்பல் பூரியும்(With Sugar for Suren
😋
😋
) அப்பா மகளுக்கு வாங்கி வரும் Ice Cream, பாட்டியுடன் செல்லச்சண்டை, புது மண தம்பதிகளின் ரகசிய விழி பரிமாற்றம், தோழிகளின் கிசுகிசுப்பு; நண்பர்களின் கும்மாளம் அனைத்தும் படிக்கும் போது கண்முன்னே காட்சியாக வந்தது என்றால், அது உங்கள் எழுத்தின் மாயாஜாலம்.

கூட்டுக்குடும்பத்தின் நிறை குறைகள் இரண்டையும் மிக அழகாகச் சொல்லிவிட்டீர். தனிக்குடித்தனம் செய்த போதும், நல்லது கெட்டது என்று பார்த்து பார்த்து செய்யும் வெண்ணிலா அப்பாவின் சொந்தங்கள்; அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு இணங்க, அண்ணன்-தம்பி விளையாட்டுப் பேச்சுகள் விபரீதமானது; அதைக் கையாண்ட பெரியவர்களின் விதம் எல்லாம் படு நேர்த்தியாக இருந்தது.

சொல்லப்போனால், பிரச்சனைகள் பூதாகரமாகி விடுமோ என்ற படபடப்புடன் படிக்கும் போது, அவற்றை சுமூகமாகத் தீர்த்து வைத்த உங்கள் பாங்கு சூப்பர் சகி.

காதல் ஜோடிகள் பெரும்பாலான காட்சிகளில் நேருக்கு நேர் சந்திக்காத போதும், அவர்கள் காதலை ஆத்மார்த்தமாக உணர முடிந்தது. அதற்கும் உங்கள் எழுத்தின் மாயஜாலம் தான் காரணம் என்று சொன்னால், அது மிகையாகாது.
(பின்குறிப்பு: ஆத்தரே மனசு வெச்சு அவர்களைச் சந்திக்கவைத்த போதும்...இருவருக்கும் வியாக்கியானம் செய்யவே சரியாக இருந்தது.
😂
😂
அதுவும் இந்த சுரேன்....வந்த விஷயத்தையே மறந்துவிடுவான்...
🤣
🤣
)

சுரேன்-மாறன் காட்சிகள் செம்ம கலகலப்பு சகி. பிரம்மச்சாரி பசங்க சேர்ந்தா, பேச்சும் கும்மாளமும் எப்படி இருக்குமோ, அதை ரொம்ப தத்ரூபமா எழுதிருக்கீங்க. எவ்வளவுக்கு எவ்வளவு குறும்பு செய்கிறார்களோ, வேலை, படிப்பு என்று வரும்போது அவ்வளவுக்கு அவ்வளவு பொறுப்பாகச் செயல்படும் குணம் பாராட்ட வேண்டியது. இன்றையத் தலைமுறைக்கு நல்லதொரு வழி காட்டுவது போல இருந்தது அவர்களை நீங்கள் சித்தரித்த விதம்.
(வாசகியின் அன்பான வேண்டுகோள்: முடிந்தால் மாறனுக்கு என்று பிரத்யேகமாக ஒரு கதை எழுதுங்கள் சகி!)

சுரேன், வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தப் போதிலும், அதைப் பரிதாபத்துக்கு உரியதாக மட்டும் மிகைப்படுத்திக் காட்டாமல், "மறப்போம் மன்னிப்போம்" என்று அவன் அனைத்தையும் துடைத்துப் போட்டு போவது போல காட்டியதும் நன்றாக இருந்தது. அவனின் அந்தக் குணமே, கதையின் Highlight.
(வாசகியின் மற்றொரு வேண்டுகோள்: வெண்ணிலா ஐஸும், தற்காலிகமாக சூடான சுதாவும் யமுனை நதிக்கரையில் சங்கமித்து, நளினமாக, சுந்தர அழகுடனும், சுர்ரென்று பாயும் பாசத்துடனும், கூட்டுக்குடும்பமாக வாழும் மற்றொரு கதை எழுதுங்கள் சகி.

இன்னும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை அழகான கதை.

நீங்கள் போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!
💐
💐
💐


என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@செவ்வந்திப்பூ
 
ரொம்ப நன்றிங்க சகோ 😍😍😍😍👌🏼😇😇😇💕💕
Very precious! Sequel story எழுதுவேனா தெரியலை. அதனால் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கலை.
பரவாயில்லை செவ்வந்திப் பூ!!!:love::love:

பின் குறிப்பு:
போட்டிகள் முடிந்து, உங்கள் நிஜப்பெயர் வெளியிட்ட பின், நீங்கள் எனக்குப் பரிச்சயமான ஆத்தராக இருந்தால், உங்களை Sequel எழுதச்சொல்லி அன்புத்தொல்லை செய்வேன்!!!🤪🤪🤪🤪
 
பரவாயில்லை செவ்வந்திப் பூ!!!:love::love:

பின் குறிப்பு:
போட்டிகள் முடிந்து, உங்கள் நிஜப்பெயர் வெளியிட்ட பின், நீங்கள் எனக்குப் பரிச்சயமான ஆத்தராக இருந்தால், உங்களை Sequel எழுதச்சொல்லி அன்புத்தொல்லை செய்வேன்!!!🤪🤪🤪🤪
🤣🤣🤣🤣🤣❤️
நன்றி நன்றி உங்க ஆர்வத்துக்கு!
 

New Episodes Thread

Top Bottom