• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஓதும் காதல் கீதம்....

Apsareezbeena loganathan

Well-known member
Member
ஓதும் காதல் கீதம்

ஒரு காதலில் திளைத்து
ஓராயிரம் கனவுகளை சுமந்தவன்
ஒற்றை நொடியில் காதலியை
ஓருயிராய் இருந்தவளை இழந்து
ஒத்தையா தவிக்கும் பரிதி....
ஓயாமல் அவள் சிந்தனையில்
ஓய்ந்து இருப்பவனிடம்
ஒதுங்கி செல்பவனிடம்
ஒருத்தி காதல் சொன்னால்????
ஒத்துக் கொள்வானா????....
ஒத்துக்கொள்ள வைத்து
ஒன்றி வாழ்ந்தால்...... அவள்
ஓதும் காதல் கீதத்தில்
ஒன்றி வாழ்ந்தால்......
😍🥰😘🤩
தன் வாழ்க்கை என எண்ணி
தன் காதலியுடன் செல்ல
தன் கண்முன்னே காதலியின் இறப்பு தாங்காமல் தனக்குத்தானே தண்டனையாக தன்னையே மாய்த்துக் கொள்ள துடிக்கும் பரிதி....
🙂🙂🙂🙂🙂🙂
அவனின் குற்ற உணர்ச்சியில் இருந்து மீட்டு
அவனின் கடந்த கால காதலில்
அவனின் நிலையைப் பார்த்து
அவளுக்கு பரிதாபம் வரவில்லை .
அவன் மேல் காதல் கொள்ள...
நான் அதற்கு தகுதி இல்லை என நாசுக்காய் கோபமாய்
விலகும் பரிதி...
நீ காதலிக்க வேண்டாம்
நான் காதலித்துக் கொள்கிறேன்
அனுமதி கொடு என
காதலை யாசித்து நிற்கும் அனாலிக்கா....
❤️❤️❤️❤️❤️❤️❤️
கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டு
கணவனின் நிலையை அறிந்து காதலை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் மனைவி....
கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யலாம்
கட்டாயப்படுத்தி காதல் வருமா???
கட்டாயம் வரும்
கரைப்பவர் கரைத்தால்
கட்டுக்கடங்காத காதலை
அள்ளிக் கொடுத்தால்.....
😘😘😘😘
வேண்டாம் என்று
அவன் விலகிச் செல்லும் போது அவள் வேண்டும் என்று பிடிவாதமாய் நிற்க... இப்பொழுது அவன் வேண்டும் என்று நிற்கிறான்
இவள் வேண்டாம் என்று
விலகச் செல்ல பார்க்கிறாள்....
🤩🤩🤩🤩🤩🤩
இவர்களின் ஆட்டத்திற்கு முடிவாய்
அவர்களின் பிரச்சனைகளை கலைந்து சுமூகமாய்
இருவரும் இணையும்
காதல் கதை.....
💕💕💕💕💕🥰
விடுகதைக்குள் விழ வைத்து நர்ஸ் என்று புலம்ப வைத்து
இனி நீ தான் வாழ்க்கை என தெளிய வைத்து
அழைத்துச் செல்லும்
அன்பு மனைவி....
வலிக்கு மருந்தாய்
அவள் காதல்
வலிக்கும் என்று தெரிந்தே வலிக்கு மருந்து போடும் நர்ஸ் அவன் வலியை அறிந்து குணமாகவே
வலி கொடுத்து
வலியை நிவர்த்தி செய்யும் மருத்துவச்சி.....
💕💕💕💕💕💕
கணவன் மனைவியின்
ஊடல்கள்
சீண்டல்கள்
காதல் பேச்சு
அணைத்து செல்வதும்
விலகி இருப்பதும்
ஏங்குவதும்
விட்டுக் கொடுப்பதும் மனதுக்குள்ளே புலம்புவது
மனம் விட்டு பேசுவது என அனைத்து உணர்வுகளையும் தெளிவாக கூறி
நம்மையும் உணர வைத்தது அருமை சகி 👏👏👏👏👏
வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
 

New Episodes Thread

Top Bottom