40) நிலைமொழி ஈற்றில் ‘ய், ர், ழ்’ என்னும் மெய்களுள் ஒன்று நின்று, வல்லெழுத்தில் தொடங்கும் பெயர்ச்சொல் வருமொழியாய் வந்தால், இடையில் வருமொழி முதல் வல்லொற்று மிகும். நிலைமொழி அஃறிணையாக இருத்தல் வேண்டும்.
எ-டு.
தமிழ் + பாட்டு = தமிழ்ப் பாட்டு
ஊழ் + பயன் = ஊழ்ப் பயன்
பொய் + சாட்சி = பொய்ச் சாட்சி
வாய் + பேச்சு = வாய்ப் பேச்சு
போர் + தொழில் = போர்த் தொழில்
ஊர் + தலைவர் = ஊர்த் தலைவர்
நாய் + குட்டி = நாய்க் குட்டி
தமிழ் + செய்யுள் = தமிழ்ச் செய்யுள்
தயிர் + குழம்பு = தயிர்க் குழம்பு
எ-டு.
தமிழ் + பாட்டு = தமிழ்ப் பாட்டு
ஊழ் + பயன் = ஊழ்ப் பயன்
பொய் + சாட்சி = பொய்ச் சாட்சி
வாய் + பேச்சு = வாய்ப் பேச்சு
போர் + தொழில் = போர்த் தொழில்
ஊர் + தலைவர் = ஊர்த் தலைவர்
நாய் + குட்டி = நாய்க் குட்டி
தமிழ் + செய்யுள் = தமிழ்ச் செய்யுள்
தயிர் + குழம்பு = தயிர்க் குழம்பு