• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்போம்! - 12

Ezhilanbu

Administrator
Staff member
Writer
23) முன்னர், பின்னர் எனும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

எனக்கு முன்னர்ப் பேசியவர் சிறப்பாக உரையாற்றினார்.

முன்னர் + கண்டேன் = முன்னர்க் கண்டேன்

முன்னர் + சென்றுள்ளேன் = முன்னர்ச் சென்றுள்ளேன்

பின்னர் + தேற்றினான் = பின்னர்த் தேற்றினான்

பின்னர் + பேசுவேன் = பின்னர்ப் பேசுவேன்

பின்னர் + பார்ப்போம் = பின்னர்ப் பார்ப்போம்

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கூச்சலுக்குப் பின்னர்ப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
24) ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலி மிகும். அதாவது அனைத்து ஓரெழுத்துச் சொற்களின் பின்னும் வலி மிகும். (தனி நெடிலுடன் புணரும்

வல்லினம் உட்பட)

எ-டு.

ஈ + கால் = ஈக்கால்

பூ + பறித்தான் = பூப் பறித்தான்

தீ + குணம் = தீக்குணம்

தீ + செயல் = தீச்செயல்

தீ + தெய்வம் = தீத்தெய்வம்

தீ + பண்பு = தீப்பண்பு

தீ + பிடித்தது = தீப் பிடித்தது

கை + குழந்தை = கைக் குழந்தை

பூ + பந்தல் = பூப் பந்தல்

தை + பொங்கல் = தைப் பொங்கல்

பா + சுவடி = பாச்சுவடி

நா + குழறியது = நாக் குழறியது
 

Santirathevan_Kadhali

✍️
Writer
arumaiya
23) முன்னர், பின்னர் எனும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

எனக்கு முன்னர்ப் பேசியவர் சிறப்பாக உரையாற்றினார்.

முன்னர் + கண்டேன் = முன்னர்க் கண்டேன்

முன்னர் + சென்றுள்ளேன் = முன்னர்ச் சென்றுள்ளேன்

பின்னர் + தேற்றினான் = பின்னர்த் தேற்றினான்

பின்னர் + பேசுவேன் = பின்னர்ப் பேசுவேன்

பின்னர் + பார்ப்போம் = பின்னர்ப் பார்ப்போம்

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கூச்சலுக்குப் பின்னர்ப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
arumaiyana pathivu akka
 

Santirathevan_Kadhali

✍️
Writer
24) ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலி மிகும். அதாவது அனைத்து ஓரெழுத்துச் சொற்களின் பின்னும் வலி மிகும். (தனி நெடிலுடன் புணரும்

வல்லினம் உட்பட)

எ-டு.

ஈ + கால் = ஈக்கால்

பூ + பறித்தான் = பூப் பறித்தான்

தீ + குணம் = தீக்குணம்

தீ + செயல் = தீச்செயல்

தீ + தெய்வம் = தீத்தெய்வம்

தீ + பண்பு = தீப்பண்பு

தீ + பிடித்தது = தீப் பிடித்தது

கை + குழந்தை = கைக் குழந்தை

பூ + பந்தல் = பூப் பந்தல்

தை + பொங்கல் = தைப் பொங்கல்

பா + சுவடி = பாச்சுவடி

நா + குழறியது = நாக் குழறியது
sirapana pathivu akka.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom