• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் சித்தம் சித்திரமே

‘என் சித்தம் சித்திரமே’ கதைக்கு Chitrasaraswathi அவர்களின் விமர்சனம். கதையின் முக்ககிய முடிச்சுக்களை வெளிப்படுத்தாமல் எழுதியிருக்காங்க. அழகிய கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ! 💐😍😍🥰💕💕💕💕

#என்சித்தம்சித்திரமே
#செவ்வந்தி_பூ
#நந்தவனம்குறுநாவல்போட்டி

எழிலன்பு தளத்தில் போட்டிக் கதை செவ்வந்தி பூ வின் என் சித்தம் சித்திரமே எனது பார்வையில். வெண்ணிலா இன்றைய தலைமுறை பெண். அவள் வேலை செய்யும் இடத்தில் ஸ்டாக் கீப்பராக பணியிலிருக்கும் அவளை விரும்பும் சுரேன் ஆனால் அவள் ராகேஷ் ஐ விரும்புகிறாள். ஆனால் ராகேஷ் மற்றும் சுரேன் ஆகியோரின் உண்மை நிலை தெரிந்து கொள்ளும் பொழுது வெண்ணிலா எப்படி நடக்கிறாள் என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். எழுத்தாளரே முதிர்ச்சி இல்லாத காதல் பற்றியும் முதிர்ந்த காதல் பற்றியும் சொல்லி அதன் வித்தியாசத்தை உணர வைக்கிறார். நிறைய பேர்களின் மனநிலையையும் அழகாக தந்திருக்கிறார். கனமான கதையாகவும் தந்திருக்கலாம். ஆனால் நகைச்சுவை கலந்து அதன் கனத்தை குறைத்திருக்கிறார். யமுனா இரண்டு மகன்களிடையே காட்டும் வேற்றுமை, வெண்ணிலாவின் கொஞ்சம் பொறுப்பற்ற பிடிவாதம் பிடித்த பெண் என்றாலும் எழுத்தாளர் அவளின் குறையை சொல்லி நாம் அந்தக் குறையை சொல்லிவிடாமல் அவரே அதை செய்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களின் குறைகளை அவரே சொல்லியிருப்பது யதார்த்தமான எழுத்து. சுரேன் பெரியம்மா, பெரியப்பா, ஆதி, மாறன் கதாபாத்திரங்கள் மனதை ஈர்க்கிறார்கள். வாழ்த்துகள் செவ்வந்தி பூ.
@chitrasaraswathi
 

New Episodes Thread

Top Bottom