#நந்தவனம்குறுநாவல்போட்டி2k22
#ஷாயினிகதைவிமர்சனம்2
#நந்தவனபூகதைஇல13
#என்சித்தசித்திரமே
என் சித்த சித்திரமே குறுநாவல் எனது பார்வையில்,
நாயகி #வெண்ணிலா மீது ஒரு தலை காதல் கொள்ளும் நாயகன் #சுரேன்.
தங்கத்திற்கும் தகரத்திற்கும் வித்தியாசம் தெரியாது , நிஜத்தை அசட்டை செய்து நிழலை நம்பி வெளிபூச்சுக்கு மயங்கும் அறியா மங்கை #வெண்ணிலா.
தன் மனம் விரும்பிய, மங்கையை தனது சித்தம் முமுதும் நிறைந்த சித்திரமானவளை எவ்வாறு தன்னுடனான திருமண பந்தத்தில் கதை நாயகன் சுரேன் இணைக்க
வைக்கிறான் என்பதே கதை.
மிகவும் அருமையான, அனைத்து வித உணர்வுகளையும் சுவாரஸ்யத்தை விறுவிறுப்பு அனைத்தையும் தரும் முதிர்ச்சியான எழுத்து நடை.
தமது கடமையை மட்டும் உணர்ந்தும் உணர்வை தெரிந்தோ தெரியாமலோ மறந்தும்,
ஒரு கண்ணில் நெய்யாகவும் (சுந்தர்) இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு ( சுரேன்) என்று திகழும் பெற்றோர் யமுனா & சதாசிவம்.
பெற்றவர்களை விட மேலாக உணர்வு பூர்வ தம்பதிகளாக திகழும் சுரேனின் பெரியப்பா பெரியம்மா.
சுரேனின் உறவினனாகவும் உற்ற சிறந்த நண்பன் நண்பியாக திகழும் சுதா, மாறன்.
வெளி உலகம் புரியா நிழலை நம்பும் அறியா பெண்ணை, நிஜ உலகம் புரிய வைத்து கரை சேர்க்க துடிக்கும்
சாதாரண பெற்றவர்களாக நீலவேணி
மனோகர் தம்பதி.
பெற்றவர்களுக்கு ஈடான பாசமுள்ள தம்பியாக ஆதி.
மிகவும் அருமையான கருத்து ஆழம் மிகுந்த குறுநாவல் . ஆத்மார்த்தமான உணர்வோட்டமான பூர்வமான கதை. ஒரு குறு நாவலயே ஒவ்வொரு கதை மாந்தர்களினூடாக சமூகத்திற்கு வேண்டிய பல நற் கருத்துக்களை வாசகர்களுக்கு சென்றடைய செய்தமை வெகு அருமை..
ஆசிரியர்க்கு மிகுந்த நன்றிகள்.
இங்கே இன்னொரு சக வாசகர் மென்மையாக குறிப்பிட்டது போல.. ஆசிரியர் தான் யாரென்று வாசகர்கள் கண்டு பிடித்து விடாமல் கதை மட்டும் வாசகர்களை சென்றடைய வேண்டும் என்ற சிரத்தையுடன் நகர்த்த முயற்ச்சித்துள்ளமை தெட்டத்தெளிவு. அதனால் இடைநடுவே சில ஆங்கில உச்சரிப்பு வார்த்தைகள் ..அதை தமிழில் மாற்றினால் நன்று.
கதையை வெற்றிகரமாக அழகுற எழுதி நிறைவு செய்தமைக்கு @செவ்வந்திப்பூ
பாராட்டுகளும் போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகுக ❤
#ஷாயினிகதைவிமர்சனம்2
#நந்தவனபூகதைஇல13
#என்சித்தசித்திரமே
என் சித்த சித்திரமே குறுநாவல் எனது பார்வையில்,
நாயகி #வெண்ணிலா மீது ஒரு தலை காதல் கொள்ளும் நாயகன் #சுரேன்.
தங்கத்திற்கும் தகரத்திற்கும் வித்தியாசம் தெரியாது , நிஜத்தை அசட்டை செய்து நிழலை நம்பி வெளிபூச்சுக்கு மயங்கும் அறியா மங்கை #வெண்ணிலா.
தன் மனம் விரும்பிய, மங்கையை தனது சித்தம் முமுதும் நிறைந்த சித்திரமானவளை எவ்வாறு தன்னுடனான திருமண பந்தத்தில் கதை நாயகன் சுரேன் இணைக்க
வைக்கிறான் என்பதே கதை.
மிகவும் அருமையான, அனைத்து வித உணர்வுகளையும் சுவாரஸ்யத்தை விறுவிறுப்பு அனைத்தையும் தரும் முதிர்ச்சியான எழுத்து நடை.
தமது கடமையை மட்டும் உணர்ந்தும் உணர்வை தெரிந்தோ தெரியாமலோ மறந்தும்,
ஒரு கண்ணில் நெய்யாகவும் (சுந்தர்) இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு ( சுரேன்) என்று திகழும் பெற்றோர் யமுனா & சதாசிவம்.
பெற்றவர்களை விட மேலாக உணர்வு பூர்வ தம்பதிகளாக திகழும் சுரேனின் பெரியப்பா பெரியம்மா.
சுரேனின் உறவினனாகவும் உற்ற சிறந்த நண்பன் நண்பியாக திகழும் சுதா, மாறன்.
வெளி உலகம் புரியா நிழலை நம்பும் அறியா பெண்ணை, நிஜ உலகம் புரிய வைத்து கரை சேர்க்க துடிக்கும்
சாதாரண பெற்றவர்களாக நீலவேணி
மனோகர் தம்பதி.
பெற்றவர்களுக்கு ஈடான பாசமுள்ள தம்பியாக ஆதி.
மிகவும் அருமையான கருத்து ஆழம் மிகுந்த குறுநாவல் . ஆத்மார்த்தமான உணர்வோட்டமான பூர்வமான கதை. ஒரு குறு நாவலயே ஒவ்வொரு கதை மாந்தர்களினூடாக சமூகத்திற்கு வேண்டிய பல நற் கருத்துக்களை வாசகர்களுக்கு சென்றடைய செய்தமை வெகு அருமை..
ஆசிரியர்க்கு மிகுந்த நன்றிகள்.
இங்கே இன்னொரு சக வாசகர் மென்மையாக குறிப்பிட்டது போல.. ஆசிரியர் தான் யாரென்று வாசகர்கள் கண்டு பிடித்து விடாமல் கதை மட்டும் வாசகர்களை சென்றடைய வேண்டும் என்ற சிரத்தையுடன் நகர்த்த முயற்ச்சித்துள்ளமை தெட்டத்தெளிவு. அதனால் இடைநடுவே சில ஆங்கில உச்சரிப்பு வார்த்தைகள் ..அதை தமிழில் மாற்றினால் நன்று.
கதையை வெற்றிகரமாக அழகுற எழுதி நிறைவு செய்தமைக்கு @செவ்வந்திப்பூ