• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னிதய தாள லயமாய் நீ.....

Apsareezbeena loganathan

Well-known member
Member
என்னிதய தாள லயமாய் நீ....

தன் இதயத்தில் இருக்கும் குயிலை
தள்ளி நின்று ரசித்து
தவிக்கும் அதி.....
சிலம்பம் சொல்லிக் கொடுக்கும் சிங்கம் வீரா.....
அங்கையின் மேல் அளவுக்கு
அதிகமாக காதல் வைத்து காத்துக் கொண்டிருக்கும் அதிவீரா......

அன்பும் அமைதியுமாய்
ஆர்ப்பாட்டம் இல்லாத அழகியாய்
அடக்கமான பெண்ணாய்
அன்பு மகளாய் _ தங்கை தாமரைக்கு
ஆசை அக்காவாக
அனைவருக்கும் செல்லமாய்
அன்பு
அங்கையக்கரசி......

திருவுடன் அங்கைக்கு
திருமணம் ஆவதற்கு முன்னே
தன் காதலை அங்கை இடம் தெரியப்படுத்த காதலை
தவிர்த்த அங்கையின் கண்களில் திருவின் காதலை பார்த்து
தள்ளி நின்று
தன் காதலை புதைத்துக் கொண்டான்......

முதல் கோணல்
முற்றிலும் கோணல் என்பது போல
முதல் திருமணம் முடிந்து முழுதாய் சில மாதம் ஆகாமல் மாண்டு போன
முதல் கணவன் திரு
மீள முடியாமல்
மீளாத் துயரில்
மருகிக் உருகி தவிக்கும் திருவின்
மனைவி அங்கை.....

குடி குடியை கெடுக்கும்
குடி திருவின் உயிரை
குடிக்க.....
குத்துயராய் இருந்த திருவின் குரல் என் அங்கையை பார்த்துக் கொள் .....
காதில் ஒலித்துக் கொண்டிருக்க
கண்களில் கண்ணீருடன் அதி...

அங்கையின் அலறல்.....
அங்கையின் மங்களம் அபகரிக்கப்பட்டது.....
அமங்கலம் ஆனாள் அங்கை....
அத்தனை வலி மிகுந்த வார்த்தைகள்...
அதிலிருந்து மீளவே முடியாத
அதிக பதிவுகள் பல
கண்ணீரில் நம்மை
கரைய வைத்தது.....

வலிகள் நிறைந்த வாழ்க்கை வள்ளியின் கொடுமையால்
வாடும் அங்கே
வழி தெரியாமல்
வலியுடன் போராடும் அங்கை
வள்ளியின் கடுமையான
வார்த்தைகளை தாளாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ள
விரும்பி உயிரை துறக்க போக
விரும்பியவளின் நிலைக்கண்டு வருந்தி விரும்பி அங்கையின்
வாழ்க்கையை காக்கும் பொருட்டு வலு கட்டாயமாக தாலி கட்டி
வாழ்க்கையை தர....

அதி தன் பக்க காதலை மட்டும்
அங்கை மேல் செலுத்தி
அவளை மேலும் இம்சை செய்ய
அவனின் காதல்
அங்கைக்கு வேள்வியாய் இல்லாமல்
அவளின் வேதனையாய் மாறிட
அதை சரி செய்ய
அவன் பாடு
அய்யோ தாங்க முடியவில்லை.....

வாழ்வு தொலைந்தது என்று
வாழ்வு குடுத்தேனா அல்லது உன்
வாழ்வை கெடுத்தேனா _நான்
வாழ்வை அளித்தேனோ_ அல்லது
வாழ்க்கையை அழித்தேனோ....
வாழாத வாழ்க்கை வாழ
வழி செய்தேனா _ அந்த
வாழ்வே வலிக்குதுடி_ உன்
விழி பார்க்க
வாழ்வை வாழ
வலிக்கச் செய்யுதடி....
வாழ்க்கைத் தொடர
வழி இல்லையென்றால் _ என்
வாழ்க்கையை முடித்து கொள்ளவா...
வலி குறைய வழியும் இல்லை...
வழி தெரிந்தும்
வலி குறைவில்லை......

அங்கையின் கோபம்
அவளின் வெளிப்பாடாய்
அதியை சராமாரியாக
அவனை குற்றம் சொல்லி அவளின் பக்க நியாயத்தை அள்ளி வீசி சென்ற
அந்த நொடி அதில்
அதி நிலை குலைந்து விட்டான்..
அவள் விட்டுச் செல்ல வா
அவன் இவ்வளவு செய்தான்
அவளை மாற்றவே முடியாதா
அவளுக்காக அவன் துடிப்பதை
அவள் உணரவே மாட்டாளா.....
அவள் இல்லாத வாழ்வில்
அவன் மட்டும் உயிர் வாழ்ந்து
ஆவது என்ன?????

அநியாயமாய் அதிகமாக
அதிய வதைத்ததற்கு
அவனுக்கு நியாயம் செய்யும்படி
அழகாக
அவளின் உணர்வுகளை
அதியிடம் சொல்லியது
அருமையோ அருமை
அங்கைக்காக
அன்றும் இன்றும் என்றும்
அதிவீரன் அடிமையே......
வேணும்னு கேட்க மாட்டேன்
விரும்பி கொடுத்தா
வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்
ப்பா....... என்ன காதல்
அங்கைய (அங்கையின் மனதை)
ஆட்டி படைச்ச
அசர வைத்த
அன்பான
அதிரடியான
அதிவீரனின்
அசத்தல் காதல்.....

நண்பனாய் சுப்பு....
நல்லதிலும் கெட்டதிலும்
நாளும் பொழுதும் உடனிருந்து
நண்பனுக்காய் சிந்தித்து
நயமாக பேசி
நல்வழி சொல்லி
நட்புக்கு இலக்கணமாய்
நல்ல நண்பன் சுப்பு......

அழுத்தமாய் உண்மையை
அழுத்தி சொல்லி
அங்கை அதியை மட்டும்
அழ வைக்காமல் படிக்கும்
அனைவரையும்
அழ வைத்த
அழுத்தமான கனமான
அதிவீரனின் காதல் கதை......
அழகான வீடு
அன்பான மனைவி
அம்சமாய் மகன் தர்மன்
அதியின் குயிலம்மா...
அதிவீரனின்
ஆத்மார்த்தமான
அதிரடியான
அங்கையின் மேல் வைத்த
அதிக காதலின் பலமாய்
அன்பாலே அழகான குடும்பம்
அதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....

வாழ்த்துக்கள் சகி.....
அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது
அதிவீரனின் காதலை
அதிவீரனின் குயிலம்மாவை.. அங்கையர்க்கரசியையும்
அதி வீரணையும்.....

இதயத்தில் குடியிருக்கும்
குயிலம்மாவின் ஓசை
என்றும் அவன்
இதயத்தில்
தாளமாகவும்
லயமாகவும் ....
ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் காதலின் இசை...
என்னிதய தாள லயமாய் நீ......
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வாவ்! ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அருமை சிஸ்.
ரொம்ப சந்தோஷம் சிஸ்
மிக்க நன்றிகள் :love::love:
 

New Episodes Thread

Top Bottom