அண்ணேனு நீங்க சொல்ல என்னடா தங்கைனு அவர் சொல்லனு பாசமலர் பார்ட் 3ய ஓட்டினா சுத்தி உள்ளவங்க அவுட் ஆஃப் ஃபோகஸா தான் தெரிவாங்க...இத்தனை வருஷம் கழிச்சு தான் அண்ணிய கண் தெரியுது
அடுத்து இந்த பிரசவம்...இதெல்லாம் சாதாரண விஷயமா...ஈஸியா அவன் பார்த்துக்குவாங்கனு சொல்றாங்க
ஷிவானியின் காதலினால் தானா... வீட்டை விட்டு பிரிந்தார்கள் இருவரும் .....ஷிவானியின் கணவன் அல்லது லவ்வர் இவளை ஏமாத்தி விட்டான் போல.....அல்லது போனால் அவனை சரணின் அப்பா ஏதேனும் செய்துவிட்டாரா.......இவருக்கு இவளின் காதல் விவகாரம் தெரிந்து இருக்கும் என நினைக்கிறன்.....
என்னோட இல்லாத மூளையை கசக்கி பிளிந்து எழுதினது... இம்புட்டுதான் வருது நான் என்ன பண்ண....
அண்ணன் திட்டில்
அந்நியமாக தோன்ற
அண்ணி என்பவள்
அண்ணன் மனைவி அல்ல அன்னையின் மறு உருவமே
அதை இன்று புரிந்து
அழும் சித்ராவை
அணைத்து கொண்டார் முத்துலட்சுமி...
அண்ணியாக அல்ல
அன்னையாக.....
அத்தை மகளை
அரவணைத்து செல்லும் சரணும்
அன்னையே ஷிவானிக்கு...
கடமைகள் பல இருக்க
காதலுக்கு நேரமில்லை
கண்மணியே.....
காத்திருப்போம்...
காலம் கனியும்....
காதல் செய்ய....