விமர்சனம்
கதை: உறவாக அன்பில் வாழ
எழுதியவர்: கடம்பமலர்
தங்களின் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கும் பெற்றோர்களுக்குப் பிறந்த சாய்சரணையும் ஷான்வியையும் சுற்றி நகரும் கதை.
சாய்சரண்: தந்தையின் நிழலில் வாழ விரும்பாத வாகனங்களுக்கான பணிமனை நடத்தி சொந்தக்காலில் நிற்பவன்.
ஷான்வி: மருத்துவ பெற்றோருக்குப் பிறந்ததால் விரும்பியதை படிக்க முடியாமல் மருத்துவத்தொழிலில் இருப்பவள்.
கூட்டுக்குடும்பத்திலிருந்து ஒதுக்கப்படும் சாய்சரணும் அவனது அத்தை மகள் ஷிவானியும் ஒன்றாய் வாழ சாய்சரணின் வாழ்க்கையில் நுழைகிறாள் ஷான்வி. ஷிவானியைப் பற்றிய விவரம் தெரியாமல் அவன் மீது காதலும் கொள்கிறாள்.
இதற்கிடையே சாய்சரணின் அன்னை முத்துலட்சுமியும் அத்தை சித்ராவும் அவர்களை மீண்டும் குடும்பத்தோடு இணைக்க முயல்கின்றனர்.
அவர்களின் முயற்சி வென்றதா? ஷான்வியின் காதல் என்னவாகும் என்பதே கதை.
பிழைகள் இல்லாத தெளிவான எழுத்துநடை. மென்மையான காதல், நேர்மறை எண்ணங்களை மட்டுமே விதைக்கும் கதைமாந்தர்கள் என ஃபீல் குட் குடும்பக்கதை.
வெற்றி பெற வாழ்த்துகள் @கடம்ப மலர்
கதை லிங்க்
7 - உறவாக அன்பில் வாழ (கடம்ப மலர்)
ezhilanbunovels.com