ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 32
அபிமன்யூ ஒரு சிறுவனிடம் விளையாடிக் கொண்டிருந்தவன் "இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிங்கடா?" என்ற ஸ்ராவணியின் குரலில் திரும்பினான்.
எப்போதும் போல எளிமையான அலங்காரத்தில் மிளிர்ந்தவளின் காதில் ஆடிய ஜிமிக்கியில் பதிந்தது அவனது கவனம்.
ஸ்ராவணியோ தான் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைக் கவனிக்காமல் வேறு எங்கேயோ பார்த்தவனின் கண் முன் சொடக்கிட்டவள் "நான் இங்கே நிக்கிறேன்டா. உனக்கு அங்கே என்ன பார்வை?" என்று கேட்க
அவன் அந்த ஜிமிக்கியில் பார்வையைப் பதித்தவாறே "வாவ்! பியூட்டிஃபுல்" என்று சொல்ல ஸ்ராவணி குழப்பத்துடன் பின்னால் திரும்பி பார்க்கவும் அங்கே விஷ்ணுவின் தங்கை ஸ்ரீநிதி வரவும் சரியாக இருந்தது.
அஸ்வின் இந்த விபரீதத்தை உணர்ந்து எச்சரிக்கும் முன்னரே ஸ்ராவணி கடுப்புடன் "சை! நீயெல்லாம் திருந்தவே மாட்ட. உன் கண்ணுக்கு ஆம்பிளைங்கல்லாம் தெரியவே மாட்டாங்களா? எப்பிடியோ போ" என்றவாறு வாயிலை நோக்கிச் செல்ல அபிமன்யூ குழப்பமடைந்தான்.
"அச்சு! இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இவ கோவப்பட்டுட்டு போறா?" என்க அஸ்வின் அவன் தாடையைப் பற்றி அவனது பார்வை இவ்வளவு நேரம் இருந்த இடத்தை சுட்டிக்காட்ட அங்கே நின்று கொண்டிருந்த ஸ்ரீநிதியைக் கண்டதும் அவனுக்கு விஷயம் புரிந்துப் போனது.
"டேய் அம்மா சத்தியமா நான் அந்தப் பொண்ணைப் பாக்கலடா. நான் வனியோட ஜிமிக்கியை தான் பார்த்தேன். எனக்கு மட்டும் ஏன்டா இப்பிடி நடக்குது?" என்று ஆதங்கத்துடன் பேச
அஸ்வின் "இதுக்கே பொங்குனா எப்பிடி? இன்னும் நீ வாங்க வேண்டியது எவ்ளோ இருக்கு!" என்று கேலி செய்தான்.
தொடர்ந்து படிக்க
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-32👑.3848/
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 32
அபிமன்யூ ஒரு சிறுவனிடம் விளையாடிக் கொண்டிருந்தவன் "இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிங்கடா?" என்ற ஸ்ராவணியின் குரலில் திரும்பினான்.
எப்போதும் போல எளிமையான அலங்காரத்தில் மிளிர்ந்தவளின் காதில் ஆடிய ஜிமிக்கியில் பதிந்தது அவனது கவனம்.
ஸ்ராவணியோ தான் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைக் கவனிக்காமல் வேறு எங்கேயோ பார்த்தவனின் கண் முன் சொடக்கிட்டவள் "நான் இங்கே நிக்கிறேன்டா. உனக்கு அங்கே என்ன பார்வை?" என்று கேட்க
அவன் அந்த ஜிமிக்கியில் பார்வையைப் பதித்தவாறே "வாவ்! பியூட்டிஃபுல்" என்று சொல்ல ஸ்ராவணி குழப்பத்துடன் பின்னால் திரும்பி பார்க்கவும் அங்கே விஷ்ணுவின் தங்கை ஸ்ரீநிதி வரவும் சரியாக இருந்தது.
அஸ்வின் இந்த விபரீதத்தை உணர்ந்து எச்சரிக்கும் முன்னரே ஸ்ராவணி கடுப்புடன் "சை! நீயெல்லாம் திருந்தவே மாட்ட. உன் கண்ணுக்கு ஆம்பிளைங்கல்லாம் தெரியவே மாட்டாங்களா? எப்பிடியோ போ" என்றவாறு வாயிலை நோக்கிச் செல்ல அபிமன்யூ குழப்பமடைந்தான்.
"அச்சு! இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இவ கோவப்பட்டுட்டு போறா?" என்க அஸ்வின் அவன் தாடையைப் பற்றி அவனது பார்வை இவ்வளவு நேரம் இருந்த இடத்தை சுட்டிக்காட்ட அங்கே நின்று கொண்டிருந்த ஸ்ரீநிதியைக் கண்டதும் அவனுக்கு விஷயம் புரிந்துப் போனது.
"டேய் அம்மா சத்தியமா நான் அந்தப் பொண்ணைப் பாக்கலடா. நான் வனியோட ஜிமிக்கியை தான் பார்த்தேன். எனக்கு மட்டும் ஏன்டா இப்பிடி நடக்குது?" என்று ஆதங்கத்துடன் பேச
அஸ்வின் "இதுக்கே பொங்குனா எப்பிடி? இன்னும் நீ வாங்க வேண்டியது எவ்ளோ இருக்கு!" என்று கேலி செய்தான்.
தொடர்ந்து படிக்க
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-32👑.3848/