ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 22
தக்ஷிண்யா அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவள் தான் அங்கே விழுந்ததை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.
“நான் விழுந்தது கொஞ்சம் கிடைமட்டமான இடம், அங்கயே ரெண்டு மணிநேர போராட்டத்துக்கு அப்புறம் தான் என்னை காப்பாத்த முடிஞ்சுது... நீங்க சொல்லுறது நான் விழுந்த சரிவைத் தாண்டி இருக்குற பள்ளத்தாக்கைப் பத்தி... நீங்க உங்க இடத்துக்கு வர்ற மக்களோட உயிரோட விளையாடுறிங்கனு எனக்குத் தோணுது... இதுக்கு மேல நான் சொல்லுறதுக்கு எதுவுமில்ல”
“உன்னை மாதிரி சின்ன கம்ஃபர்டபிள் ஜோனுக்குள்ள வாழுறவங்களுக்கு இது பயமா தான் இருக்கும்... சாகணும்னு விதி இருந்தா செருப்பு தடுக்கி விழுந்தா கூட செத்து தான் போவோம்... உன்னோட அட்வைஸை அனுதீப் கிட்ட சொல்லுறதுக்காக பத்திரப்படுத்தி வச்சுக்க... இப்ப கிளம்பலாம்”
இனிமேல் எனக்கென்ன வந்தது என்ற அலட்சிய பாவனையுடன் அவனைத் தொடர்ந்தாள் தக்ஷிண்யா.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 21
“கோவப்படாத ருத்ரா” என்றபடி அவனைத் தடுத்து நிறுத்தினார் சசிகலா.
“கோவப்படாம என்ன பண்ண சொல்லுறிங்க? நீங்க சொன்ன ஃப்ளாஷ்பேக்கை கேட்டதும் எனக்கு இவ மேல பரிதாபம் வருது... அத்தை நடந்துக்கிட்ட விதத்துக்கு யாரா இருந்தாலும் யோசிப்பாங்க தான்... ஆனா இவ என்னை நம்பணுமா இல்லையா? அவங்க என்ன, என்னை படைச்ச கடவுளே வந்து தக்ஷிய பிரிஞ்சிடுனு சொன்னா கூட நான் ஒத்துக்க மாட்டேன்... ஏன்னா நான் உண்மையா இவளை காதலிச்சேன்... ஆனா இவ..” என்று அவளை நோக்கி கை காட்டியவன்
“என் லவ்வுக்கு யாரும் சர்டிபிகேட் குடுக்க வேண்டிய அவசியமில்ல”
சுள்ளென்று கூறினாள் தக்ஷிண்யா.
“சாரி! நீ பண்ணுனது லவ்வே இல்லனு தான் நான் சொல்லிட்டிருக்குறேன்”
“சரி, அப்பிடியே வச்சுக்கோங்க... ஆனா எந்தக் காரணத்துக்காகவும் என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன்... நீங்களோ உங்கம்மாவோ என் மனசை மாத்தலாம்னு கனவுக்கோட்டை கட்டாம உங்க வேலைய பாருங்க”
தக்ஷிண்யா எடுத்தெறிந்து பேசவும் ருத்ரதேவின் கோபம் இன்னும் தான் அதிகரித்தது.
அவளை எரிப்பது போல பார்த்துவிட்டு “இனிமே இவ கிட்ட பேசுறது வேஸ்ட்மா... இந்த மகாராணிக்குப் பணிவிடை பண்ணுனதுலாம் போதும்.. காலும் கையும் நல்லா தானே இருக்கு... இனிமே இவளுக்கு உங்க உதவி தேவையில்ல” என்றவன் ஒரு நொடி கூட தாமதிக்காது சசிகலாவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான்.
“ஆமா! என் காதலை மதிக்காத ஒருத்திக்கு என் வாழ்க்கையில இடம் கிடையாதும்மா”
அவன் சொல்லி முடித்த அடுத்த நொடி சசிகலாவின் கரம் அவனது கன்னத்தில் வேகமாக படிந்தது.
பளார் சத்தத்தில் அவ்வளவு நேரம் தலை குனிந்தபடி அமர்ந்திருந்த
தக்ஷிண்யா அதிர்ந்து தலையை உயர்த்தி அன்னையையும் மகனையும் பார்த்தாள்.
ருத்ரதேவ் அதிர்ச்சியுடன் கன்னத்தைப் பிடித்தபடி நிற்க சசிகலாவோ கோபம் மின்னிய விழிகளுடன் அவனை உறுத்துப் பார்த்தார்.
“தோளுக்கு மேல வளர்ந்த பையன் கிட்ட கை நீட்டக்கூடாதுனு பொறுமையா இருந்தா நீ எல்லைய மீறிப் பேசுற ருத்ரா... நீ தானே இந்தப் பொண்ணை தேடி தேடி போய் லவ் பண்ணிருக்க... அப்பிடி லவ் பண்ணுனப்பவே அவ குணம் என்னனு உனக்குப் புரிஞ்சிருக்கும் தானே... எந்த மாதிரி சூழ்நிலையில அவ உன்னை வேண்டாம்னு சொன்னாங்கிறத கூட உன்னால புரிஞ்சுக்க முடியலனா நீ என்ன லெட்சணத்துல காதலிச்ச?”
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 18
ருத்ரதேவ் கிளம்பாமல் அங்கேயே நின்றான்.
“நான் உங்களை போகச் சொன்னேன் ருத்ரா”
தக்ஷிண்யாவின் குரல் உயர அவனது கோபம் பன்மடங்காகியது. வேகமாக அவளை நெருங்கியவன் அவளது மோவாயை அழுத்தமாகப் பற்றவும்
“என்ன பண்ணுறிங்க நீங்க? எனக்கு வலிக்குது ருத்ரா” என்று அவனது கையைத் தட்டிவிட போராடினாள் தக்ஷிண்யா.
“வலிக்குதா? இவ்ளோ நால் லவ் பண்ணிட்டு இப்ப பிடிக்கலனு சொல்லுறப்ப எனக்கும் தான் வலிக்குதுடி... என்னால வேற யார் கிட்டவும் எந்தக் காரணத்தையும் கேக்க பிடிக்கல... நான் லவ் பண்ணுனது உன்னைத் தான்... ஒழுங்கா என்ன காரணம்னு சொல்லு... இல்லைனா உன்னை நான் விடுறதா இல்ல”
கோபத்தில் பற்கள் அரைபட பேசியவனின் இந்த முகம் தக்ஷிண்யாவுக்குப் புதிது. வலியில் கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.
ஆனால் அவனோ விடுவதாக இல்லை. அவனது பிடி இன்னும் இறுகவும் மோவாய் எலும்புகளில் வலி பரவ கண்களை இறுக மூடிக்கொண்டவள்
“உங்க மாமா தான் என்னோட அப்பா... எங்கம்மாவோட பேர் தேவிகா... இது போதுமா?” என்று கத்தினாள்.
அடுத்த நொடி ருத்ரதேவின் கரங்கள் அழுத்தத்தை இழந்து தானாக கீழே இறங்கியது.
“வாட்? நீ இப்ப என்ன சொன்ன?” அதிர்ச்சியாய் கேட்டான் அவன்.
“நான் ராஜேந்திரனுக்கும் தேவிகாவுக்கும் பிறந்த பொண்ணு... உங்க குடும்பம் மொத்தமும் எங்கம்மாவை லவ் மேரேஜ் பண்ணுனதுக்காக மிஸ்டர் ராஜேந்திரனை ஒதுக்கி வச்சது மறந்து போச்சா?”
ருத்ரதேவுக்கு இப்போது புரிந்தது ஏன் இவளை எங்கேயோ பார்த்தது போல இருந்தது என்று.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 17
ஆரோஹி பனீரை மென்றபடி “இன்னும் ஏன் தேவ் மாமா வரல?” என்று கேட்க
“அவருக்கு ஆபிஸ்ல இம்பார்ட்டெண்ட் ஒர்க் இருக்குதாம்... இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவார்” என்றபடி தக்ஷிண்யா சாப்பிட்டு முடிக்கையில் தான் ருத்ரதேவின் பெற்றோரும் அத்தை மாமாவும் அவர்கள் இருக்குமிடத்துக்கு வந்தனர்.
“அந்த லாஸ்ட் டேபிள்ல அவங்களும் ஒரு குட்டிப்பொண்ணும் இருக்காங்க சார்... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டிருக்காங்க” என்றார் அவர்.
“ஓ.கேப்பா... நீங்க போய் மத்த வேலைய பாருங்க... நாங்க பேசி முடிச்சதும் உங்களுக்குக் கால் பண்ணுறேன்... ஸ்வீட் மட்டும் அனுப்பி வைங்க” என்று லோகநாதன் கூற பொறுப்பாளரும் சென்றுவிட்டார்.
ஆரோஹி தக்ஷிண்யாவிடம் தனக்கு பீட்சா வேண்டுமென அடம்பிடித்துக் கொண்டிருக்கையில் “ஹலோம்மா” என்று இனிமையாக அழைத்தபடி அவர்களின் மேஜையருகே தனது கணவர், சகோதரர் மற்றும் லலிதாவுடன் வந்து நின்றார் சசிகலா.
தக்ஷிண்யாவும் புன்னகையுடன் அவர்கள் பக்கம் திரும்பியவள் அடுத்த நொடியே சிரிப்பைத் தொலைத்து அதிர்ச்சியில் சிலையானாள்.
அவளது கண்கள் அங்கிருந்த நால்வரையும் இலக்கற்று வெறிக்க அவர்களோ அவளது முகஜாடையைக் கண்டதும் ஒரு கணம் என்ன பேசவென தெரியாமல் விழித்தனர்.
ராஜேந்திரன் மட்டும் திகைப்பு விலகாமல் “நீ... நீ... தக்ஷி... என் பொண்ணு...” என்று தந்தியடிக்க அவ்வளவு நேரம் செய்வதறியாது நின்ற லலிதா படுவேகமாக அவரது கையைப் பற்றினார்.
“என்னங்க.... இவ” என்று அவரும் திணற தக்ஷிண்யாவுக்கு மெதுவாக உணர்வு வந்தது.
விழிகளில் இருந்த இலக்கற்ற பார்வை மறைந்து இப்போது வெறுப்பும் கோபமும் குடிகொண்டது.
“யூ, உன்னை ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்... சப்ஜெக்டை மட்டும் சொல்லிட்டு செண்டென்சை அரைகுறையா நிறுத்துனா என்ன வெர்ப் யூஸ் பண்ணணும்னு தெரியாம குழம்புறேன்ல... ப்ளீஸ் நீயே கம்ப்ளீட் பண்ணிடு தக்ஷி” என்று கூற
“ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல... இன்னும் நீங்க என் கிட்ட எதுக்காக சொல்லாம கிளம்புனிங்கனு விளக்கம் குடுக்கல” என்று கூறிவிட்டு முகத்தைச் சிடுசிடுப்பாக வைத்துக்கொண்டாள் அவள்.
ருத்ரதேவ் பொறுமையாக விழுங்கி முடித்தவன் “அத்தைக்குத் திடீர்னு மூச்சிளைப்பு மாதிரி வந்துடுச்சுனு அம்மா கால் பண்ணிச் சொன்னதும் எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியல... அப்ப எனக்கு ஊட்டிக்கு வந்து பாக்கணும்னு தோணுச்சே தவிர உன் ஞாபகம் வரவே இல்ல தக்ஷி” என்கவும் தக்ஷிண்யாவுக்கு ஸ்பகடி தொண்டையில் சிக்கிக்கொண்டது.
என்ன தான் அத்தை மீது பாசம் இருக்கட்டுமே! அதற்காக காதலித்தவளை அன்று இரவு கிட்டத்தட்ட பாதி மணம் முடித்தவளை மறந்துவிட்டேன் என அவன் கூறியதை தக்ஷிண்யாவால் ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 14
முதல் முறையாக மகாதேவ் குரலை உயர்த்தி கத்தியதில் பிரகல்யாவும் அதிர்ந்து போனாள். பின்னர் அதிர்ச்சியிலிருந்து மீண்டவள்
“நீயா மகி இப்பிடி லோ கிளாஸ் மாதிரி பிஹேவ் பண்ணுற? ஐ காண்ட் பிலீவ் திஸ்... ஆப்டர் ஆல் ஒரு சர்வண்டுக்காக உன் அம்மா என்னைத் திட்டி அசிங்கப்படுத்துவாங்க... அதை சொன்னா நீ என் மேல கோவப்படுற... இது தான் எனக்கு நீ குடுக்குற மரியாதையா?”
“மரியாதைய எதிர்பாக்குறவங்க அதை மத்தவங்களுக்குக் குடுக்கவும் ரெடியா இருக்கணும்”
பேச்சு இப்படியே வளர்ந்து கொண்டு செல்ல இனியொரு முறை தனது அன்னையைப் பற்றி தவறாகப் பேசினால் தனது தமையனே தங்களின் திருமணப்பேச்சுவார்த்தையை முறியடித்துவிடுவான் என்றான் மகாதேவ்.
அதை கேட்டதும் பிரகல்யா பொங்கிவிட்டாள்.
“லவ், மேரேஜ் இதுல்லாம் உன்னோட பெர்ஷனல்... அதுல உன் அண்ணனை தலையிட விட்டுட்டு நீ வேடிக்கை பாப்பியா மகி? இப்பிடி சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல? உன்னை மாதிரி அண்ணனுக்கும் அம்மாவுக்கும் பயப்படுற கோழைய லவ் பண்ணுனதுக்காக நான் அவமானப்படுறேன்”
“ஏய்! உன்னை யார் அவமானப்பட சொன்னது? நான் கோழையாவே இருந்துட்டுப் போறேன்... நீ போய் தைரியமான இன்னொருத்தனை லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்க... கெட் லாஸ்ட்”
அவன் பேசி முடிக்கவும் பிரகல்யாவின் கண்கள் கலங்கி விட்டது. அவளுக்குச் செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த கர்வம் இருக்கலாம். ஆனால் அதை விட அதிகமாக மகாதேவை காதலித்தவள் அவள்.
அவனது வார்த்தைகள் அவளை நோகடித்துவிடவே கண்ணீர் பொலபொலவென வழிய ஆரம்பித்தது.