ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 31
அபிமன்யூ சலிப்புடன் "விடுங்க ப்ரோ. இந்த பொண்ணுனு இல்லை, எந்தப் பொண்ணா இருந்தாலும் அவங்க பின்னாடி ஒரு பையன் வர ஆரம்பிச்சதும் அவனைச் சுத்த விடுறதுல அவங்களுக்கு ஒரு ஆனந்தம். ஆனா இந்த ஸ்ராவணி இருக்காளே , இவ குயின் ஆஃப் ஆட்டிட்டியூட். ரொம்ப ஓவரா பண்ணுறா. போனா போறா ப்ரோ. எனக்கு இவளை விட்டா வேற ஆளா இல்ல?" என்று விரக்தியுடன் சொல்லிவிட்டுத் திரும்ப அந்த வீட்டுக்குள் இருந்து மஞ்சள் நிற சுடிதாரில் வெளியே வந்தாள் ஒரு இளம்பெண்.
அவளைக் கண்ட அபிமன்யூவின் விழிகள் விரிய அவன் வாய் தானாக "வாவ்! வாட் அ கேர்ள்!" என்று சிலாகிக்க சிபு யாரைச் சொல்கிறான் இவன் என்ற எண்ணத்துடன் திரும்பிப் பார்க்க அந்த மஞ்சள் சுடிதார் அதற்குள் அவன் அருகில் வந்துவிட்டாள்.
சிபு அபிமன்யூவின் கண் முன்னே கையை ஆட்ட அவன் சுயநினைவுக்கு வந்தான். அபிம்னயூ சிபுவின் அருகில் நின்ற மஞ்சள் சுடிதாரிடம் கையை நீட்ட அவளுக்குப் பதிலாக ஒரு முறைப்புடன் சிபுவே அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
அபிமன்யூ அவனது செய்கைக்கான அர்த்தம் புரியாமல் கேள்வியாக அவனைப் பார்க்க சிபு கண்ணைச் சுருக்கியபடி அவனைப் பார்த்து "மீட் மை வைஃப் மனு" என்று சொல்ல அந்த மஞ்சள் சுடிதார் அணிந்த பெண் "ஹலோ ப்ரோ" என்றதும் அபிமன்யூ ஒரு அசட்டுச்சிரிப்புடன் சிபுவை பார்த்தான்.
அவள் சிபுவின் புறம் திரும்பி "எல்லாரும் உள்ளே வந்தாச்சு. நீ மட்டும் இங்க என்னடா பண்ணுற ஏலியன்? சார் யாரு உன்னோட ஃப்ரெண்டா?" என்று கேட்க சிபு அவளின் தலையில் தட்டிவிட்டு
"கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ சோடாபுட்டி. மூச்சு விடாம பேசி இந்த
சின்ன வயசுல என்னை விதவனா மாத்திட்டு போய் சேர்ந்துடாதே" என்றுச் சொல்லி விட்டு கண்சிமிட்ட அவள் கோபத்துடன் அவன் காதில் மிதித்துவிட்டு உள்ளே சென்றாள்.
"ஆவ்! ஏய் சோடாபுட்டி! நீ செத்தடி" என்று ஒற்றைக்காலை பாதி தூக்கித் தடவிக் கொடுத்தவன் தன் அருகில் நின்ற அபிமன்யூவை ஒரு பார்வை பார்த்தவாறு "என்ன எம்.எல்.ஏ யோசனை பலமா இருக்கு? இப்போ அந்த பொண்ணு கிட்ட பேசணும், அவ்ளோ தானே" என்று கேட்க அபிமன்யூ உற்சாகத்துடன் தலையாட்டினான்.
தொடர்ந்து படிக்க
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-31👑.3826/
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 31
அபிமன்யூ சலிப்புடன் "விடுங்க ப்ரோ. இந்த பொண்ணுனு இல்லை, எந்தப் பொண்ணா இருந்தாலும் அவங்க பின்னாடி ஒரு பையன் வர ஆரம்பிச்சதும் அவனைச் சுத்த விடுறதுல அவங்களுக்கு ஒரு ஆனந்தம். ஆனா இந்த ஸ்ராவணி இருக்காளே , இவ குயின் ஆஃப் ஆட்டிட்டியூட். ரொம்ப ஓவரா பண்ணுறா. போனா போறா ப்ரோ. எனக்கு இவளை விட்டா வேற ஆளா இல்ல?" என்று விரக்தியுடன் சொல்லிவிட்டுத் திரும்ப அந்த வீட்டுக்குள் இருந்து மஞ்சள் நிற சுடிதாரில் வெளியே வந்தாள் ஒரு இளம்பெண்.
அவளைக் கண்ட அபிமன்யூவின் விழிகள் விரிய அவன் வாய் தானாக "வாவ்! வாட் அ கேர்ள்!" என்று சிலாகிக்க சிபு யாரைச் சொல்கிறான் இவன் என்ற எண்ணத்துடன் திரும்பிப் பார்க்க அந்த மஞ்சள் சுடிதார் அதற்குள் அவன் அருகில் வந்துவிட்டாள்.
சிபு அபிமன்யூவின் கண் முன்னே கையை ஆட்ட அவன் சுயநினைவுக்கு வந்தான். அபிம்னயூ சிபுவின் அருகில் நின்ற மஞ்சள் சுடிதாரிடம் கையை நீட்ட அவளுக்குப் பதிலாக ஒரு முறைப்புடன் சிபுவே அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
அபிமன்யூ அவனது செய்கைக்கான அர்த்தம் புரியாமல் கேள்வியாக அவனைப் பார்க்க சிபு கண்ணைச் சுருக்கியபடி அவனைப் பார்த்து "மீட் மை வைஃப் மனு" என்று சொல்ல அந்த மஞ்சள் சுடிதார் அணிந்த பெண் "ஹலோ ப்ரோ" என்றதும் அபிமன்யூ ஒரு அசட்டுச்சிரிப்புடன் சிபுவை பார்த்தான்.
அவள் சிபுவின் புறம் திரும்பி "எல்லாரும் உள்ளே வந்தாச்சு. நீ மட்டும் இங்க என்னடா பண்ணுற ஏலியன்? சார் யாரு உன்னோட ஃப்ரெண்டா?" என்று கேட்க சிபு அவளின் தலையில் தட்டிவிட்டு
"கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ சோடாபுட்டி. மூச்சு விடாம பேசி இந்த
சின்ன வயசுல என்னை விதவனா மாத்திட்டு போய் சேர்ந்துடாதே" என்றுச் சொல்லி விட்டு கண்சிமிட்ட அவள் கோபத்துடன் அவன் காதில் மிதித்துவிட்டு உள்ளே சென்றாள்.
"ஆவ்! ஏய் சோடாபுட்டி! நீ செத்தடி" என்று ஒற்றைக்காலை பாதி தூக்கித் தடவிக் கொடுத்தவன் தன் அருகில் நின்ற அபிமன்யூவை ஒரு பார்வை பார்த்தவாறு "என்ன எம்.எல்.ஏ யோசனை பலமா இருக்கு? இப்போ அந்த பொண்ணு கிட்ட பேசணும், அவ்ளோ தானே" என்று கேட்க அபிமன்யூ உற்சாகத்துடன் தலையாட்டினான்.
தொடர்ந்து படிக்க
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-31👑.3826/