ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 14
"எதுக்கு என்னை இழுத்துட்டு வந்திங்க சரபன்? உங்க மாமாவ நறுக்குனு நாலு வார்த்தை கேட்டா தான் என்னால நிம்மதியா சாமி கும்பிட முடியும்"
திமிறியவளை அமைதிப்படுத்த முயன்றான் அவன்.
அவனிடம் நடந்ததை மறைக்காமல் கூறினாள் சங்கவி.
"வீட்டுல சோறு இல்லாம யாரும் இங்க வரல... உங்க மாமா பூஜைக்கு கட்டளைக்காரரா இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவாரா?"
"விளையாட்டுக்குப் பேசிருப்பார் கவி... இதை ஏன் பெரிய இஸ்யூ ஆக்கி சண்டை போடணும்னு துடிக்கிற? காம் டவுன்"
சரபேஸ்வரன் விளையாட்டென சொல்லவும் சங்கவிக்குச் சுரீரென கோபம் வந்துவிட்டது.
"இப்பிடி சாக்கு சொல்ல உங்களுக்கு ஒரு மாதிரி இல்லயா சரபன்? அன்னைக்கு பஸ்ல அந்த லேடிக்காக நியாயம் கேட்டு குதிச்சிங்க... இப்ப உங்க மாமாவோட கேவலமான வார்த்தைக்கு நான் நியாயம் கேக்க போறப்ப தடுக்குறிங்க... இதுல எது உங்களோட உண்மையான குணம்? வெளியாளுங்க தப்பு செஞ்சா தான் நியாயம் பேசுவிங்க, உங்க வீட்டாளுங்க என்ன கேவலத்தைப் பண்ணுனாலும் கண்டுக்க மாட்டிங்க... ஏன் ரெட்டைவேசம் போடுறிங்க?"
ஆவேசமாக அவள் உலுக்கவும் சரபேஸ்வரனுக்குக் கோபம் வந்துவிட்டது.
"பஸ்ல நடந்ததும் இதுவும் ஒன்னா? மாமா ஏதோ விளையாட்டா பேசிருப்பார்… அவர் எப்பிடிப்பட்டவர்னு உன்னை விட எனக்கு நல்லா தெரியும்... அதான் உன்னைத் தடுத்தேன்... நீ இத்தனை பேர் முன்னாடி மாமாவ கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துனா என் அக்கா மனசு வருத்தப்படும்... அப்பிடி நடக்க நான் விடமாட்டேன்... நீ என்னை லவ் பண்ணுறது உண்மைனா அமைதியா இரு கவி"
சங்கவி அவனது வார்த்தைகள் உண்டாக்கிய அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் நிற்கும்போதே சரபேஸ்வரன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவளுக்கு அந்த ஏமாற்றத்தை எப்படி சமாளிப்பதென தெரியவில்லை.
அந்நேரத்தில் அங்கே வந்த அழகுநாச்சி பிரசாதம் வாங்க வரிசையை நோக்கி நகரவும் அவரைத் தடுத்தாள் சங்கவி.
"வேண்டாம்மா... வீட்டுக்குக் கிளம்புவோம்"
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-14.5390/
#ஒருகாதலும்சில_கவிதைளும் #நித்யாமாரியப்பன்
"எதுக்கு என்னை இழுத்துட்டு வந்திங்க சரபன்? உங்க மாமாவ நறுக்குனு நாலு வார்த்தை கேட்டா தான் என்னால நிம்மதியா சாமி கும்பிட முடியும்"
திமிறியவளை அமைதிப்படுத்த முயன்றான் அவன்.
அவனிடம் நடந்ததை மறைக்காமல் கூறினாள் சங்கவி.
"வீட்டுல சோறு இல்லாம யாரும் இங்க வரல... உங்க மாமா பூஜைக்கு கட்டளைக்காரரா இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவாரா?"
"விளையாட்டுக்குப் பேசிருப்பார் கவி... இதை ஏன் பெரிய இஸ்யூ ஆக்கி சண்டை போடணும்னு துடிக்கிற? காம் டவுன்"
சரபேஸ்வரன் விளையாட்டென சொல்லவும் சங்கவிக்குச் சுரீரென கோபம் வந்துவிட்டது.
"இப்பிடி சாக்கு சொல்ல உங்களுக்கு ஒரு மாதிரி இல்லயா சரபன்? அன்னைக்கு பஸ்ல அந்த லேடிக்காக நியாயம் கேட்டு குதிச்சிங்க... இப்ப உங்க மாமாவோட கேவலமான வார்த்தைக்கு நான் நியாயம் கேக்க போறப்ப தடுக்குறிங்க... இதுல எது உங்களோட உண்மையான குணம்? வெளியாளுங்க தப்பு செஞ்சா தான் நியாயம் பேசுவிங்க, உங்க வீட்டாளுங்க என்ன கேவலத்தைப் பண்ணுனாலும் கண்டுக்க மாட்டிங்க... ஏன் ரெட்டைவேசம் போடுறிங்க?"
ஆவேசமாக அவள் உலுக்கவும் சரபேஸ்வரனுக்குக் கோபம் வந்துவிட்டது.
"பஸ்ல நடந்ததும் இதுவும் ஒன்னா? மாமா ஏதோ விளையாட்டா பேசிருப்பார்… அவர் எப்பிடிப்பட்டவர்னு உன்னை விட எனக்கு நல்லா தெரியும்... அதான் உன்னைத் தடுத்தேன்... நீ இத்தனை பேர் முன்னாடி மாமாவ கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துனா என் அக்கா மனசு வருத்தப்படும்... அப்பிடி நடக்க நான் விடமாட்டேன்... நீ என்னை லவ் பண்ணுறது உண்மைனா அமைதியா இரு கவி"
சங்கவி அவனது வார்த்தைகள் உண்டாக்கிய அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் நிற்கும்போதே சரபேஸ்வரன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவளுக்கு அந்த ஏமாற்றத்தை எப்படி சமாளிப்பதென தெரியவில்லை.
அந்நேரத்தில் அங்கே வந்த அழகுநாச்சி பிரசாதம் வாங்க வரிசையை நோக்கி நகரவும் அவரைத் தடுத்தாள் சங்கவி.
"வேண்டாம்மா... வீட்டுக்குக் கிளம்புவோம்"
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-14.5390/
#ஒருகாதலும்சில_கவிதைளும் #நித்யாமாரியப்பன்