• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,072

Profile posts Latest activity Postings About

  • ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 13
    "புக் வாங்கியாச்சு... ஜீரோ டிகிரில ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டுக் கிளம்புவோமா?"
    சரபேஸ்வரன் ஆவலாகக் கேட்டவாறு பில்லுக்கான தொகையைச் செலுத்தினான்.
    சங்கவி வேண்டாமென மறுத்தாள்.
    "ஏன்?"
    "நீங்க சம்பாதிக்கிற பணத்துல எனக்கு வாங்கி குடுங்க சரபன்... அப்ப நான் சந்தோசமா சாப்பிடுவேன்... அது தான் எனக்கு உரிமையான பணம்"
    இதை விட வெளிப்படையாக ஒரு பெண்ணால் காதலிப்பதைச் சொல்ல முடியுமா?
    ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைக்கு அவசியமே வராமல் தனது காதலைச் சொல்லியிருந்தாள் சங்கவி. சரபேஸ்வரனின் முகம் அவளது பதிலில் விகசித்தது.
    "இருந்தாலும் நீ ரொம்ப ஸ்ட்ரிக்டு தான்"
    போலியாகக் குறை சொன்னபடி கிளம்பியவனோடு தானும் நடந்தாள் சங்கவி.
    ஜீரோ டிகிரி ஐஸ்கிரீம் ஸ்டாலை கடக்கும்போது ஏக்கமாக பார்த்தவனின் தலையில் தட்டி அழைத்துச் சென்றாள் சங்கவி.
    காதலர்களின் பேச்சின் போது மட்டும் கடிகார முட்களுக்கு இருமடங்கு சுறுசுறுப்பு பிறந்துவிடும் போல. அவ்வளவு விரைவாக நேரம் ஓடிவிட்டது.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-13.5384/
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 12
    "எவ்ளோ பெரிய கோலம்!"
    ஆனந்தின் குரலில் கவனம் கலைந்த சங்கவி, அங்கே சரபேஸ்வரனைக் கண்டதும் திகைப்போடு எழுந்தாள்.
    கரங்கள் அவசரமாக கலைந்த கூந்தலை சரிசெய்ய விழிகளோ அலைபாயத் துவங்கின.
    "உங்க வீட்டுல செம்பருத்தி செடி இருக்குனு கேள்விப்பட்டேன்"
    சரபேஸ்வரன் மருதாணியால் சிவந்திருந்த சங்கவியின் விரல்களை ரசித்தபடி பேச்சை ஆரம்பித்தான்.
    "புறவாசல்ல இருக்கு"
    பதிலளித்த சங்கவியும் இயல்புக்குத் திரும்பிவிட்டாள்.
    "இவன் ஆனந்த்... என் அக்கா மகன்... இவங்க ஸ்கூல்ல இயற்கைல கிடைக்கிற பொருளை வச்சு வாட்டர் கலர் தயாரிக்கணும்னு அசைன்மெண்ட் குடுத்திருக்காங்க... அதான் செம்பருத்தி பூ வாங்கிட்டுப் போகலாம்னு வந்தோம்"
    சங்கவி அப்படியா என்பது போல பார்த்தாள்.
    "வாங்க! பறிச்சுத் தர்றேன்"
    அவள் பேசியபடி கிளம்பும்போதே அழகுநாச்சி வரும் அரவம் கேட்டது.
    வந்தவர் மகளோடு உரையாடிக் கொண்டிருந்த ஆடவனைக் கண்டதும் துணுக்குற்றார்.
    "என்ன வேணும் தம்பி?"
    "நான் ஆழியூர் சாரங்கபாணி மகன்... உங்க வீட்டுல செம்பருத்தி செடி இருக்குனு பரிமளாக்கா சொன்னாங்க... இவன் ஸ்கூல் அசைன்மெண்டுக்கு செம்பருத்தி பூ தேவைப்படுது"
    "பின்னாடி தான் செடி இருக்கு... வேணுங்கிற பூவை பறிச்சுக்க தம்பி... நீ கூட போய் காட்டு கவி"
    "சரிம்மா"
    சங்கவியோடு வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போனவன் வேகமாக இடது காலுக்குப் பதில் வலது காலை மாற்றி உள்ளே வர அதை கவனித்தவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
    சிரிப்பை மறைத்துக்கொண்டு புழக்கடை தோட்டத்திற்கு அவர்களை அழைத்து வந்தவள் செம்பருத்தி பூக்களைப் பறிக்க ஆரம்பித்தாள்.
    "அந்த பூ பெருசா இருக்கு பாருங்க... அதை பறிங்க... அக்கா அங்க பறிக்காதிங்க... பக்கத்து இலைல குருவிக்கூடு இருக்கு"
    கள்ளங்கபடமற்ற ஆனந்தை அவளுக்குப் பிடித்துவிட்டது.
    அவன் கேட்டபடி பூக்களைப் பறித்து பாலிதீன் கவரில் போட்டு நீட்டினாள்.
    "எங்க வயல்ல சங்குப்பூ இருக்கு... அதுல இருந்து ப்ளூ கலர் பெயிண்ட் எடுக்கலாம்... உனக்கு வேணும்னா சொல்லு"
    ஆனந்திடம் ஆதுரமாகப் பேசினாள் சங்கவி.
    சரியென அவன் தலையாட்டும் முன்னர் வேகமாக ஆட்டினான் சரபேஸ்வரன்.
    "கண்டிப்பா வேணும்... அதை நீங்களே பறிச்சுக் குடுத்திங்கனா இன்னும் வசதியா இருக்கும்"
    இத்தனை நாட்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவிட்டு இப்போது வாய் கிழிய வசனம் பேசுகிறான். உதட்டைச் சுழித்து அவனை அலட்சியம் செய்தாள் சங்கவி.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-12.5377/
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 9

    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 4 போஸ்டட் மக்களே
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom