• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வெண் தாமரை பதி மெல்லியலே-வெண்தாமரை

chitra ganesan

Well-known member
Member
வெண் தாமரை பதி மெல்லியலே-
வெண்தாமரை

கதை முழுதும் பாரதி மயம்😍

அனுராதா தன் இரட்டை மகன்களுக்கு பாரதி மேல் கொண்டுள்ள பிரேமையால் பாரதி என்று முடியும் பேரை வைக்கிறார்.
ரவி பாரதி,சூர்யா பாரதி.ட்வின்ஸ் ஆக இருந்தாலும் இருவருக்கும் இரு வேறு சிந்தனைகள்.

நாட்டிய பள்ளியை நடத்தும் ரவி பாரதி மிக பெரிய நடன இயக்குனர்.பல அவார்டுகள் வாங்கி இருக்கான்.ஆனாலும் அதை அவன் நேரில் சென்று வாங்க மாட்டான். அவனின் பெயர் தவிர அவன் போட்டோவோ,அவனின் தனிப்பட்ட தகவலோ எதுவும் வெளியே தெரிவதில்லை.ஏன் அப்படி?🤔

நாயகி மாதங்கி பெண்கள் பத்திரிக்கையில் பாரதி என்ற பெயரில் ஜர்னலிஸ்டா இருக்கா.
அவனை பற்றி உண்மையை கண்டு பிடிக்க வரும் பாரதி அதை கண்டு பிடித்தாளா?வெளி உலகத்துக்கு அவனை அடையாளம் காட்டினாளா என்பதை மிக ஷார்ட்டா சுவீட்டா சொல்லி இருக்காங்க ரைட்டர்.😍

இன்வெஸ்டிகேச ஜர்னலிசம் என்ற பெயரில் இந்த மீடியா செய்யும் செயலை அழகா சொல்லி இருக்காங்க.டிஆர்பி என்ற ஒரு விஷயத்திற்கு இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்சமா நஞ்சமா??ஒரு செயலின் உண்மை தன்மை அறியும் முன்னே இவங்களே அது அப்படி ஆச்சு,இப்படி ஆச்சுன்னு போடுவதும் இல்லாமல் போட்டோ வேறு போட்டு மிக பெரிய மன உளைச்சல் கொடுக்கிறாங்க.

அடுத்து சோசியல் மீடியா.அதில் ஒரு வீடியோ சம்பந்தபட்டவர்களின் அனுமதி இல்லாம போடுவது,அதன் கீழே வரும் கமெண்ட்கள் வக்ரத்தின் உச்சமா இருப்பது நாம் பார்க்கிறோம் தானே🤦

மீடியா நல்லதும் இருக்கு..கெட்டதும் இருக்கு.அதை எல்லாரும் பயன்படுத்தும் விதத்தில் தான் நல்லதோ,கெட்டதோ ஆகும்.

ரவியுடேனே இருக்கும் சூர்யாவுக்கு பாரதி என்ற பெயரே அலர்ஜி ஆகிடுது. 😁😁 எங்கு பார்த்தாலும் பாரதி மயம்😊
அதுவும் அவனுக்கு வரப்போகும் மனைவிக்கும் பாரதி என்னும் பெயரே😜😜

அனுராதா தெளிவும் தீர்க்கமும் கொண்ட அன்பான தாய்.ராமநாதன் மகனுக்கு மிக பெரிய சப்போர்ட் ஆக இருக்கார்.

Nice story.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍😍💐
 
உங்கள் அழகான , ஆழமான விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் மா. ஒவ்வொரு எபிசோட்க்கும் நைஸ்னு உங்க கமெண்ட் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். கடந்த சில நாட்களா நீங்கள் படித்து ஒவ்வொரு கதைக்கும் ரிவ்யு கொடுக்கிறதை நானும் படித்துக் கொண்டு தான் இருந்தேன். எனக்கும் எப்போது கொடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு தான் எப்படியும் கதையை முடித்து விட வேண்டும் என்ற வேகத்தைக் கொடுத்தது. நிச்சயம் உங்களை போன்றவர்களின் விமர்சனம் தான் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் மருந்து. அத்தோடு நிறை , குறைகளை சரியாக எடுத்துக் கூறி, எங்களின் எழுத்து மேம்பட காரணமும் உங்கள் விமர்சனம் தான். நன்றி நன்றி. fb யில் பூ ஐடி இல்லை. அதனால் அங்கே என்னால் கமெண்ட் செய்ய முடியவில்லை. போட்டி முடிந்த பின் என் ஒரிஜினல் ஐடியில் இருந்து உங்களுக்கு ரிப்ளை செய்கிறேன். என் கதையில் குறைகள் இருந்தாலும் கண்டிப்பாக எடுத்துக் கூறுங்கள். அடுத்து வரும் கதைகளில் திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். மீண்டும் உங்கள் விமர்சனத்திற்கும், வாழத்திற்கும் மிக்க நன்றிகள் மா :love: :love: :love: 🙏 🙏 🙏
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom