கதை : மிரட்டும் அமானுஷ்யம்
எழுதியவர் : பார்கவி முரளி
ரொம்ப நாளுக்கு அப்புறம் நான் படிச்ச ஹாரர் ஸ்டோரி... கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட ஜான்வி அந்த பயத்தை எப்பிடியாச்சும் ஓவர்கம் பண்ணியே ஆகணும்னு பாராநார்மல் கோர்ஸ் படிக்க புனேக்கு போறா... அங்க அவ ஆதர்ஷ், விஷ்வா, சாக்ஷிய சந்திக்கிறா... கூடவே அவளைச் சுத்தி நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது... அவளை விடாம தொடருது ஒரு நிழல்... அவ தங்கியிருக்குற விடுதிலயும் சில திகில் அனுபவங்கள் அவளுக்கும் சாக்ஷிக்கும் கிடைக்குது... இது எல்லாத்துக்கும் என்ன காரணம்னு யோசிக்கிறப்ப இன்னொரு கிராமத்துலயும் நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது...
ஜானுவுக்கும் அந்தக் கிராமத்துல நடக்குற சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? ஏன் ஜானுவ சுத்தி இவ்ளோ மர்மமான சம்பவம் நடக்குது? அந்த நிழல் யார்? இப்பிடி கதை படிக்கிறப்ப நமக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள் எழுறதை தடுக்கவே முடியல.... இதுக்கு இடைல அர்ஜூன், சதீஸ், நிஷா மூனு பேரும் வர்றாங்க... யார் அவங்க அவங்களுக்கும் ஜானுவுக்கும் என்ன சம்பந்தம்னு அடுத்த கேள்வி வருது... இது எல்லாத்துக்கும் நடுவுல அப்பப்ப 'அது' வேற வந்து பயம் காட்டுது
கதைய திகிலோட நகர்த்துறப்ப கூடவே பாராநார்மல் இன்வெஸ்டிகேசன்ல யூஸ் பண்ணுற எக்யூப்மெண்ட்ஸ், அமானுஷ்யமான இடங்கள் பற்றிய தகவல்களை அழகா விவரிச்சிருக்காங்க பார்கவி.... பெயர்ல மட்டும் அமானுஷ்யத்தை வைக்காம கதையோட ஒவ்வொரு அத்தியாயமும் மர்மமும் திகிலும் நிறைஞ்சதா அடுத்து என்ன நடக்கும்னு நெய்ல் பைட்டிங் சீன்சா இருந்துச்சு...
என்ன தான் அமானுஷ்ய கதையா இருந்தாலும் விஷ்வா சாக்ஷி காம்போ பண்ணுற கலாட்டா நமக்கு சிரிப்பை வரவைக்குது... சில கியூட்டான லவ் சீன்ஸ்சும் அருமைமா... அந்தக் காமெடியோ லவ்வோ கதைய கொஞ்சம் கூட டிஸ்டர்ப் பண்ணல... கதையோட்டத்துல அதுவும் இயல்பா இணைஞ்சு அழகா பொருந்திடுச்சு...
மொத்தத்துல சுவாரசியம் குறையாத திகில் கதை கொடுத்ததுக்கு எழுத்தாளருக்கு நன்றி! உங்களோட மற்ற கதைகளை ஆவலோட எதிர்பாக்குறேன்
இந்தக் கதைக்கு ஒரு மீம்
எழுதியவர் : பார்கவி முரளி
ரொம்ப நாளுக்கு அப்புறம் நான் படிச்ச ஹாரர் ஸ்டோரி... கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட ஜான்வி அந்த பயத்தை எப்பிடியாச்சும் ஓவர்கம் பண்ணியே ஆகணும்னு பாராநார்மல் கோர்ஸ் படிக்க புனேக்கு போறா... அங்க அவ ஆதர்ஷ், விஷ்வா, சாக்ஷிய சந்திக்கிறா... கூடவே அவளைச் சுத்தி நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது... அவளை விடாம தொடருது ஒரு நிழல்... அவ தங்கியிருக்குற விடுதிலயும் சில திகில் அனுபவங்கள் அவளுக்கும் சாக்ஷிக்கும் கிடைக்குது... இது எல்லாத்துக்கும் என்ன காரணம்னு யோசிக்கிறப்ப இன்னொரு கிராமத்துலயும் நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது...
ஜானுவுக்கும் அந்தக் கிராமத்துல நடக்குற சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? ஏன் ஜானுவ சுத்தி இவ்ளோ மர்மமான சம்பவம் நடக்குது? அந்த நிழல் யார்? இப்பிடி கதை படிக்கிறப்ப நமக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள் எழுறதை தடுக்கவே முடியல.... இதுக்கு இடைல அர்ஜூன், சதீஸ், நிஷா மூனு பேரும் வர்றாங்க... யார் அவங்க அவங்களுக்கும் ஜானுவுக்கும் என்ன சம்பந்தம்னு அடுத்த கேள்வி வருது... இது எல்லாத்துக்கும் நடுவுல அப்பப்ப 'அது' வேற வந்து பயம் காட்டுது
கதைய திகிலோட நகர்த்துறப்ப கூடவே பாராநார்மல் இன்வெஸ்டிகேசன்ல யூஸ் பண்ணுற எக்யூப்மெண்ட்ஸ், அமானுஷ்யமான இடங்கள் பற்றிய தகவல்களை அழகா விவரிச்சிருக்காங்க பார்கவி.... பெயர்ல மட்டும் அமானுஷ்யத்தை வைக்காம கதையோட ஒவ்வொரு அத்தியாயமும் மர்மமும் திகிலும் நிறைஞ்சதா அடுத்து என்ன நடக்கும்னு நெய்ல் பைட்டிங் சீன்சா இருந்துச்சு...
என்ன தான் அமானுஷ்ய கதையா இருந்தாலும் விஷ்வா சாக்ஷி காம்போ பண்ணுற கலாட்டா நமக்கு சிரிப்பை வரவைக்குது... சில கியூட்டான லவ் சீன்ஸ்சும் அருமைமா... அந்தக் காமெடியோ லவ்வோ கதைய கொஞ்சம் கூட டிஸ்டர்ப் பண்ணல... கதையோட்டத்துல அதுவும் இயல்பா இணைஞ்சு அழகா பொருந்திடுச்சு...
மொத்தத்துல சுவாரசியம் குறையாத திகில் கதை கொடுத்ததுக்கு எழுத்தாளருக்கு நன்றி! உங்களோட மற்ற கதைகளை ஆவலோட எதிர்பாக்குறேன்
இந்தக் கதைக்கு ஒரு மீம்