அன்புள்ள ரோஜாப்பூவே,
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவர்ந்த விஷயங்களையும் கதாபாத்திரங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்கிறேன் சகி.
முதல் கதை முத்தாக எழுதிய ஆத்தருக்கு, முதற்கண் பாராட்டுகள்.
கிராமத்து மணம் வீசும் அழகிய குடும்ப கதை. அதற்கு தோதான காட்சி அமைப்புகள், கதாபாத்திரங்களின் தோற்றம், உரையாடல்கள், யாவும் அருமையாக இருந்தது.
குடும்ப ரகசியங்கள் அறிந்த போதும், அதனால் தங்கள் காதலுக்கு எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்த போதும், பக்குவமாகச் செயல்பட்ட இளைய தலைமுறையினரின் பாங்கு மிக நன்றாக இருந்தது.
(ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும் என்பதற்காக, அதைப் பற்றி மேலும் எழுதவில்லை. ஆனால் அதைப்பற்றி வெற்றி-புவனா பேசிய ஒரு காட்சி மெய்சிலிர்க்கும் விதமாக இருந்தது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.)
வெற்றி-புவனா பாசம் அழகு;
புவனா-கதிர் காதல் அட்டகாசம்;
கதிர்-வெற்றி புரிதல் அற்புதம்;
வெற்றி-தேன் அன்யோன்னியம் அமர்க்களம்;
கருப்பு சட்டை என்றால் கதிர் முகமும், சக்கரை பொங்கல் என்றால் புவனாவின் நினைவும் வரும் அளவிற்குக் காட்சிகள் தத்ரூபமாக மனதில் பதிந்துவிட்டது.
நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெறவும், இதைப்போன்ற நற்சிந்தனைகளுடன் கதைகள் எழுதவும், என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
@ரோஜா
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவர்ந்த விஷயங்களையும் கதாபாத்திரங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்கிறேன் சகி.
முதல் கதை முத்தாக எழுதிய ஆத்தருக்கு, முதற்கண் பாராட்டுகள்.
கிராமத்து மணம் வீசும் அழகிய குடும்ப கதை. அதற்கு தோதான காட்சி அமைப்புகள், கதாபாத்திரங்களின் தோற்றம், உரையாடல்கள், யாவும் அருமையாக இருந்தது.
குடும்ப ரகசியங்கள் அறிந்த போதும், அதனால் தங்கள் காதலுக்கு எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்த போதும், பக்குவமாகச் செயல்பட்ட இளைய தலைமுறையினரின் பாங்கு மிக நன்றாக இருந்தது.
(ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும் என்பதற்காக, அதைப் பற்றி மேலும் எழுதவில்லை. ஆனால் அதைப்பற்றி வெற்றி-புவனா பேசிய ஒரு காட்சி மெய்சிலிர்க்கும் விதமாக இருந்தது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.)
வெற்றி-புவனா பாசம் அழகு;
புவனா-கதிர் காதல் அட்டகாசம்;
கதிர்-வெற்றி புரிதல் அற்புதம்;
வெற்றி-தேன் அன்யோன்னியம் அமர்க்களம்;
கருப்பு சட்டை என்றால் கதிர் முகமும், சக்கரை பொங்கல் என்றால் புவனாவின் நினைவும் வரும் அளவிற்குக் காட்சிகள் தத்ரூபமாக மனதில் பதிந்துவிட்டது.
நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெறவும், இதைப்போன்ற நற்சிந்தனைகளுடன் கதைகள் எழுதவும், என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
@ரோஜா