ஜதியோடு சதிராடு
இது அமேசான் கிண்டிலில் நான் நேரடியாக எழுதிய தொடர்கதை. கதை நிறைவு பெற்றுவிட்டது.
அங்கே அக்கொண்ட் இருப்பவர்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்.
இப்போது கதையிலிருந்து ஒரு முன்னோட்டம்...
சில கடினமான நடன அசைவுகளைத்தான் அமைத்திருந்தான் நிருபன். ஆனால், மதனாவிற்கு அதன் போல் நடன அசைவுகள் பழக்கம்தான் என்பதால் அவன் சொல்லிக் கொடுத்ததை அச்சுப்பிசகாமல் செய்தாள்.இது அமேசான் கிண்டிலில் நான் நேரடியாக எழுதிய தொடர்கதை. கதை நிறைவு பெற்றுவிட்டது.
அங்கே அக்கொண்ட் இருப்பவர்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்.
ஜதியோடு சதிராடு - Jathiyodu Sathiraadu: (Tamil Edition) eBook : Anbu, Ezhil : Amazon.in: Kindle Store
ஜதியோடு சதிராடு - Jathiyodu Sathiraadu: (Tamil Edition) eBook : Anbu, Ezhil : Amazon.in: Kindle Store
www.amazon.in
Amazon.com: ஜதியோடு சதிராடு - Jathiyodu Sathiraadu: (Tamil Edition) eBook : Anbu, Ezhil : Kindle Store
Amazon.com: ஜதியோடு சதிராடு - Jathiyodu Sathiraadu: (Tamil Edition) eBook : Anbu, Ezhil : Kindle Store
www.amazon.com
"அந்த மாடல் பொண்ணு இன்னைக்கு ஏன் வர மாட்டேன்னு சொன்னாள்னு இப்பத்தான் புரியுது நிரு. ரிகர்சல் பார்த்தே பயந்து போயிட்டாங்க போலிருக்கு…" என்று சிறு இடைவெளியில் மதனா கேலி செய்ததும் நடந்தது.
"நோகாம தொங்கு திங்க முடியுமா? ம்யூசிக் பார். பாஸ்ட் ட்ராக்… அதுக்கு ஸ்லோவா ஸ்டெப்ஸ் இருந்தால் நல்லாவா இருக்கும்?" என்று கேட்டான்.
அவளுக்கும் அந்த உண்மை புரிந்தது.
வேக நடன அசைவுகள் மட்டுமல்ல, காதலை பிரதிபலிக்கும் காட்சிகளும் இருந்தன.
காதலை கண்களில் ஒளிர விட்டு, அதை அப்படியே முகத்திலும் பிரதிபலித்தான் நிருபன்.
ஆனால் மதனாவிற்கு அப்படி உணர்வுகளைக் காட்ட வரவில்லை.
“முகத்தில் லவ் ஃபீலிங் கொண்டு வாடி…” என்று நிருபன் அதட்ட,
“இத்தனை பேர் முன்னாடி வரலைடா…” என்று சிணுங்கினாள்.
“உதைக்கப் போறேன் பார். நீ ஏன் அவங்களைப் பார்க்கிற? லிரிக்ஸை முதலில் மைண்டில் ஃபிக்ஸ் பண்ணு. பொண்ணு காதலனை பிரிந்து ஏக்கத்தோட தேடி வர்றா. அப்படி வரும் போது இத்தனை நாள் அவனைப் பார்க்காமல் அவள் ஃபீல் பண்ற தவிப்பு, துடிப்பு, காதல் எல்லாத்தையும் முகத்திலும், உன் உடல் அசைவுலயும் கொண்டு வரணும். கண்ணை மூடி அந்த உணர்வுகளை உனக்குள் கொண்டு வா. இங்கே வேற யாரும் இல்லை. அந்தக் காதலனும், காதலியும் மட்டும்தான் இருக்காங்க…” என்றான்.
அவன் சொன்னது போல் கண்களை மூடினாள். பாடல் வரிகள் பின்னணியில் ஓட, அதைச் செவிகளில் வாங்கி மனத்திற்குள் நுழைத்தாள்.
இப்போது அவள் மதனா இல்லை. காதலனை காணாமல் தவித்த காதலி என்று மனத்தில் பதிய வைத்து அந்த உணர்வுகளை முகத்தில் பிரதிபலித்தாள்.
“எஸ்… எஸ்… இதான்டி. இதை அப்படியே கண்ணைத் திறந்து செய்…” என்று நிருபன் சொல்ல,
கண்களைத் திறந்து அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்து, வேறு யாரையும் கவனத்தில் கொள்ளாமல் அந்த உணர்வுகளை அவள் அப்படியே பிரதிபலிக்க, ஒரு நொடி நிருபன் அசந்து நின்றுவிட்டான்.
பின் சூழ்நிலை புரிந்து, அவனும் காதல் உணர்வுகளைக் காட்ட, அந்தக் காட்சி படமாக்கப்பட்டது.
“வாவ்! பெண்டாஸ்டிக்!” என்று சுற்றி இருந்தவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
“நீங்க இரண்டு பேரும் செம ஃபேர் நிருபன். என்னோட இந்தச் சாங்க்கு நீங்க உயிர் கொடுத்துட்டிங்க…” அந்தக் காட்சி நல்லபடியாகப் படமாக்கப்பட்டதில் மனமார பாராட்டினான் விக்னேஷ்.
“உனக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா நிரு?” என்று கேட்ட போது அவளின் குரல் கரகரக்க, ஸ்டியரிங்கை பிடித்திருந்த அவனின் கைகள் இறுகியது. முதுகை இன்னும் விறைப்பாய் நிமிர்த்தினான்.“காரணமே இல்லாமல் ஏமாற்றப்படும் போது பேச மட்டும் என்ன? இன்னும் என்னென்னவோ கத்துக்கத்தான் வேணும். இல்லைனா உங்களைப் போல ஆளுங்க நம்ப வச்சு கழுத்தறுத்துற மாட்டீங்க?” என்று சுள்ளென்று வார்த்தைகளைத் தெறிக்கவிட்டான்.
அவள் தொண்டை குழி அடைத்துக் கொண்டது போல் அவதிப்பட்டுப் போனாள்.
“நிரு…” என்று துடித்துப் போய் அழைத்தாள்.
“நிருபன்…” என்றான் அழுத்தமாக.
அதைப் பொருட்படுத்தாமல், “நான் உன்னைக் கழுத்தறுத்துட்டேன்னு சொல்லாதே நிரு. என்னால் தாங்க முடியலை…” என்றாள்.
“ஆட்டை அறுத்து அவித்துத் தின்னுட்டு, பாவம் ஆடுன்னு வருத்தப்படுவது போல் இருக்கு உங்க பேச்சு…” என்றான் வன்மையாக.
அவன் ஒவ்வொரு பேச்சும் அவளைக் குத்தூசியாய்க் குத்தியது.
பெரிய கத்தியால் குத்தினால் பெரிய வலியில் துடித்து ஒரேயடியாக மடிந்து விடலாம்.
சின்னச் சின்னக் குத்தூசியாக எடுத்து, நிறுத்தி நிதானமாக ஒவ்வொன்றாகக் குத்தும் போது, வாழவும் பிடிக்காமல், சாகவும் முடியாமல் துடிக்க வைக்கும்.
மதனாவிற்கும் அந்த நொடி அப்படித்தான் இருந்தது.
“இப்படிப் பேசாதேடா நிரு. என்னால் தாங்க முடியலை…” என்றாள் நெஞ்சத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்தபடி.
அவளைத் திரும்பி அவளின் நிலையைப் பார்த்தவனின் கண்கள் சிவப்பேறி போய்க் கிடந்தது. தாடையில் அவன் கொடுத்த இறுக்கத்தில் காது மடல்கள் துடித்தன.
கடைசி ஒரு முறை ஒத்திகை பார்க்க சொன்னவன், அவளோடு கூடவே ஆடிக் கொண்டே வந்தான்.
பாடல் முடியும் தருவாயில் துப்பட்டாவை இரண்டு கைகளாலும் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி ஓடி வந்து கால்களைத் தரையில் பாவாமல் துள்ளிக் குதிக்க வேண்டும்.
மதனா துள்ளிக் குதிக்க, அடுத்தச் சில வினாடிகள் வரை தரைக்கு வராமல் அந்தரத்திலேயே நின்றாள்.
மிதப்பது போலான உணர்வில் அதிர்ந்து விழியைத் தாழ்த்தி பார்க்க, நிருபனின் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.
எப்போது தூக்கினான்? ஏன் தூக்கினான்? என்று யோசிக்கக் கூட விடாமல் அவளை அப்படியே தூங்கிச் சென்று சுவரோடு சாய்த்து இறக்கியவன், அவள் என்ன என்று உணரும் முன்னே அவளின் இதழ்களைச் சிறை செய்திருந்தான்.
மூர்க்கமான சிறையெடுப்பு! இதழ்கள் எரிய, சுதாரித்துக் கொண்ட மதனா, அவனின் தோளை பிடித்துத் தள்ளிவிட்டாள்.
ஒரு நொடி விலகியவன், அவள் மூச்செடுத்து பேச வரும் முன் மீண்டும் சிறையெடுப்புச் செய்தான்.
மூச்சு முட்டி போனது இருவருக்கும். ஆனாலும், அவளை விலக அனுமதிக்கவே இல்லை அவன்.