• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ-கடம்ப மலர்

chitra ganesan

Well-known member
Member
உறவாக அன்பில் வாழ-
கடம்ப மலர்

உறவுகளின் அருமையை சொல்லும் கதை.
பெற்றவர்கள் மிக பெரிய மருத்துவர்கள்.ஒரே மகள்.ஆனாலும் தனிமையை உணரும் ஷான்வி.உறவாக அன்பில் வாழ ஏங்குகிறாள்.

தம் மக்களை நம்பாமல்,அவர்கள் சொல்ல வருவதையும் கேட்காமல் அவர்களே தப்பான முடிவுக்கு வந்து பிள்ளைகளை தள்ளி வைக்கும் அண்ணனும்(அப்பா)தங்கையும்(அத்தை)அம்மா வாயிருந்தும் ஊமையா, தங்கை கணவரோ நட்புக்காக அமைதியா இருக்கிறார்.

காதலியையும்,நண்பனையும் நம்பாமல் அப்பாவின் அடாவடிக்கு அடிபணியும் செந்தூரன்.

கர்ப்பவதியான அத்தை மகள் ஷிவாணியை கண்ணின் மணி போல போற்றி பாதுகாக்கும் சாய்சரண்.

இடையில் கங்கம்மா செந்தில் சிவபாலன் என்று கதைக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் என்று அழகாக நகர்கிறது கதை.

ஷிவாணியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்?அது எந்த சூழ்நிலையில் நடந்தது,ஷான்வியின் ஏக்கம் தீர்ந்ததா,சரண் அண்ட் ஷிவாணியை பெற்றவர்கள் புரிந்து ஏற்று கொண்டார்களா என்பதை மிக அருமையா,பொருத்தமா,லாஜிக் மீறாமல் கொடுத்து இருக்காங்க.

(எனக்கு படிக்கும் போது ஷான்வி,ஷிவாணி பெயர் குழப்பமா இருந்தது.யாரு டாக்டர், யாரு அத்தை பொண்ணு என்று confuse ஆகிட்டேன்.🙄🙄🙄
பைனல் டச் எபிலாக் ரொம்ப நல்லா இருந்தது.கதையின் தலைப்புக்கு நியாயம் செஞ்சி இருந்தது.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom