ரொம்ப அழகான, யதார்த்தமான காதல் கதை!!!.. அழகான கிராமத்து பாஷை மிகவும் பிடித்தது!!!.. கதையின் ஆரம்பம் முதல், முடிவு வரை இயல்பு மாறாத அப்பத்தாவை ரொம்ப ரொம்ப பிடித்தது!!!... அவரின் அன்பும், அக்கறையும் அத்துனை அழகு!!.. மலரின் அம்மா கதாப்பாத்திரமும் அருமை!!!.. அம்மா, மகளின் பிணைப்பு அதிரடியாய், அடாவடியாய் அற்புதமாய் இருந்தது!!!.. வன்மம், ஜாதி வெறி பிடித்த மனிதர்களின் மனதினை படம் பிடித்து காட்டியது அருமை!!!.. அவர்களுக்கான தண்டனையையும், கொடுத்த விதமும் மனதை நிறைத்தது!!!.. காதல்!!!.. எவ்வளவு அழகாய், அற்புதமாய் சொல்லிட்டீங்க கா!!!.. இரண்டாவது திருமணம் செஞ்சுக்குறவனுக்கு இருக்கும் தயக்கம், உறுத்தல் எல்லாத்தையும் அருமையா சொன்னது அசத்தல்!!!.. வைரவேலின் குணங்கள் அசத்தல்!!!.. நிதானம் இல்லாத வேளையிலும் அவளுக்காக பேசியது!!.. தெளிந்ததும் அவளுக்காக நின்றது, பாதுகாத்தது என அனைத்தும் அருமை!!!.. மலரின் புரிதலும் காத்திருத்தலும் அழகு!!!.. எல்லாரையும் விட ராசு!!.. மாஸ் கேரக்டர்!!!.. அவங்களை ரொம்ப ரொம்ப பிடித்தது!!!.. அழகான கிராமம், அன்பான குடும்பம் என அருமையான கதை!!!.. சூப்பர் கா!!.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள் கா