#கதை_விமர்சனம்
ஆர்த்தியின் லாக் டௌன்.
பெயரை கேட்டதும் கொரானா காலத்தில் நாம் அனுபவித்த கஷ்டங்கள்ன்னு நினைச்சேன்.ஆனால் அழகான ஒரு குடும்பக்கதை.
சைந்தவி வினீத்தை விரும்புகிறாள்.ஆனால் அவன் நட்பாகத்தான் பழகுகிறான்.தன் காதலை வெளிப்படுத்தி அவன் ஒத்துக்க்கொள்ளாததால் விரக்தியடைந்து வேலையை விடும் நேரம்,பாட்டியின் இறப்பு செய்தி அறிந்து ஊருக்கு செல்கிறாள்.வெளியூரில் இருக்கும் தந்தையும் வந்துசேருகிறார்.சரள்கண்ணன் மனைவி இறந்ததும் வேறு ஒரு பெண்ணை மணந்து மகளுக்கு தெரியாமல் வாழ்ந்து வருபவர். அப்பாவுடன் சேர்ந்து வாழும் ஆவலில் இருப்பவள் உண்மை தெரிந்ததும் உடைந்து விடுகிறாள்.
ஊருக்கு வருபவளுக்கு ஒரு காதல் காத்து இருக்கிறது.அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை ரசிக்கும்படி எழுதியிருக்கிறார்.வசந்த் நம் அனைவர் மனதையும் கவருகிறான்.சைவிம்மா எனும் அழைப்பாகட்டும்,பாட்டியின் விருப்பத்தை ஏற்று நடப்பதாகட்டும்,சைந்தவியை மெல்ல மெல்ல தன் பக்கம் ஈர்ப்பதாகட்டும் என ரசிக்க வைக்கிறான்.
வினீத் தன் நட்பில் கடைசிவரை உறுதியுடன் இருக்கிறான்.சைந்தவி அவனை கேட்கும் ஒரு கேள்வி நச்!நான் உன்னை காதலிப்பது உனக்கு ஏன் புரியவில்லைன்னு!எனக்கும் அது தோன்றியது.
சரள்கண்ணனின் உறவை அப்படியே விடுவது மிக சரியே.அவருக்குத்தான் அவர் குடும்பம் இருக்கே!
ஆர்த்தியின் லாக் டௌன்.
பெயரை கேட்டதும் கொரானா காலத்தில் நாம் அனுபவித்த கஷ்டங்கள்ன்னு நினைச்சேன்.ஆனால் அழகான ஒரு குடும்பக்கதை.
சைந்தவி வினீத்தை விரும்புகிறாள்.ஆனால் அவன் நட்பாகத்தான் பழகுகிறான்.தன் காதலை வெளிப்படுத்தி அவன் ஒத்துக்க்கொள்ளாததால் விரக்தியடைந்து வேலையை விடும் நேரம்,பாட்டியின் இறப்பு செய்தி அறிந்து ஊருக்கு செல்கிறாள்.வெளியூரில் இருக்கும் தந்தையும் வந்துசேருகிறார்.சரள்கண்ணன் மனைவி இறந்ததும் வேறு ஒரு பெண்ணை மணந்து மகளுக்கு தெரியாமல் வாழ்ந்து வருபவர். அப்பாவுடன் சேர்ந்து வாழும் ஆவலில் இருப்பவள் உண்மை தெரிந்ததும் உடைந்து விடுகிறாள்.
ஊருக்கு வருபவளுக்கு ஒரு காதல் காத்து இருக்கிறது.அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை ரசிக்கும்படி எழுதியிருக்கிறார்.வசந்த் நம் அனைவர் மனதையும் கவருகிறான்.சைவிம்மா எனும் அழைப்பாகட்டும்,பாட்டியின் விருப்பத்தை ஏற்று நடப்பதாகட்டும்,சைந்தவியை மெல்ல மெல்ல தன் பக்கம் ஈர்ப்பதாகட்டும் என ரசிக்க வைக்கிறான்.
வினீத் தன் நட்பில் கடைசிவரை உறுதியுடன் இருக்கிறான்.சைந்தவி அவனை கேட்கும் ஒரு கேள்வி நச்!நான் உன்னை காதலிப்பது உனக்கு ஏன் புரியவில்லைன்னு!எனக்கும் அது தோன்றியது.
சரள்கண்ணனின் உறவை அப்படியே விடுவது மிக சரியே.அவருக்குத்தான் அவர் குடும்பம் இருக்கே!