விக்ரம் காதலை உணர்ந்து கொண்ட ஆனந்த் தன் காதலை எண்ணி வெட்கினான்.
'காதலித்து இருந்தால் உனக்கு புரியும்' என விக்ரம் கூற்றை உணர்ந்தவன்,
தன் காதலை இவர்களிடம் சொல்லவே தனக்கு தகுதி இருக்கிறதா? என்ற சுயபட்சாபத்திற்கு ஆளானான்.
'எனக்குள் இவ்வளவு அழுக்கை வைத்து கொண்டா விக்ரம் லாவண்யா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்?'.
'அப்போ என்னை என்ன செய்வது? தவறே செய்யாதவர்களை கோபித்தேனே! காதலித்த பெண்ணை சந்தேகம் கொண்ட என்னை என் செய்வது? '
நான் காதலித்த பெண்ணும் ரிது! என் வீட்டில் எனக்காக பார்த்த பெண்ணும் ரிது! என்னை காதலித்தவளும் ரிது!.
இவை அனைத்தும் மொத்தமாய் அழிய காரணம் ஆனந்த் என்ற ஒருவனே!.
எந்த முகத்தை வைத்து கொண்டு ரிது தன்னை மன்னிப்பாள் என நினைக்கிறன்? எனக்கு தண்டனை தான் என்ன? என்று மூளை அவனிடம் கேள்வி கேட்டு கொண்டிருக்க, சுரேஷ் அவனை உலுக்கினான்.
சுரேஷிற்கு ஆனந்த் நிலை புரிவதாய் இருக்க, விக்ரம் புரியாமல் குழம்பினான்.
ஆனந்தை உலுக்கி, "என் கெஸ் சரின்னா நீ ரிதுவை விரும்பி இருக்கனும். ரைட்?" என்றான் சுரேஷ் கேள்வியாக.
"என்னடா சொல்ற? " என விக்ரம் சுரேஷை பிடித்து திருப்ப, அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் அற்றவனாய் தலை குனிந்தான் ஆனந்த்.
சிறிது நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்.
இருவரும் கேள்வியாய் நோக்க, "நான் அவளை உயிரா விரும்புறேன் டா. பார்த்த செகண்ட்ல இருந்து அவ முகம் தவிர என் மைன்ட்ல எதுமே இல்லை!".
"என்னோட அவசர புத்தியால எங்க என்னை விட்டு தூரமா போய்டுவாளோனு பயமா இருக்கு டா" என முகத்தை மூடி கொண்டான் கைகளால்.
கைகளில் பிசுபிசுப்பை உணர்ந்து எடுத்தவனை அதிர்ச்சியுடன் இருவரும் பார்த்தனர். "ஆனந்த் அழுகிறானா?"
விரைவில்....
'காதலித்து இருந்தால் உனக்கு புரியும்' என விக்ரம் கூற்றை உணர்ந்தவன்,
தன் காதலை இவர்களிடம் சொல்லவே தனக்கு தகுதி இருக்கிறதா? என்ற சுயபட்சாபத்திற்கு ஆளானான்.
'எனக்குள் இவ்வளவு அழுக்கை வைத்து கொண்டா விக்ரம் லாவண்யா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்?'.
'அப்போ என்னை என்ன செய்வது? தவறே செய்யாதவர்களை கோபித்தேனே! காதலித்த பெண்ணை சந்தேகம் கொண்ட என்னை என் செய்வது? '
நான் காதலித்த பெண்ணும் ரிது! என் வீட்டில் எனக்காக பார்த்த பெண்ணும் ரிது! என்னை காதலித்தவளும் ரிது!.
இவை அனைத்தும் மொத்தமாய் அழிய காரணம் ஆனந்த் என்ற ஒருவனே!.
எந்த முகத்தை வைத்து கொண்டு ரிது தன்னை மன்னிப்பாள் என நினைக்கிறன்? எனக்கு தண்டனை தான் என்ன? என்று மூளை அவனிடம் கேள்வி கேட்டு கொண்டிருக்க, சுரேஷ் அவனை உலுக்கினான்.
சுரேஷிற்கு ஆனந்த் நிலை புரிவதாய் இருக்க, விக்ரம் புரியாமல் குழம்பினான்.
ஆனந்தை உலுக்கி, "என் கெஸ் சரின்னா நீ ரிதுவை விரும்பி இருக்கனும். ரைட்?" என்றான் சுரேஷ் கேள்வியாக.
"என்னடா சொல்ற? " என விக்ரம் சுரேஷை பிடித்து திருப்ப, அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் அற்றவனாய் தலை குனிந்தான் ஆனந்த்.
சிறிது நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்.
இருவரும் கேள்வியாய் நோக்க, "நான் அவளை உயிரா விரும்புறேன் டா. பார்த்த செகண்ட்ல இருந்து அவ முகம் தவிர என் மைன்ட்ல எதுமே இல்லை!".
"என்னோட அவசர புத்தியால எங்க என்னை விட்டு தூரமா போய்டுவாளோனு பயமா இருக்கு டா" என முகத்தை மூடி கொண்டான் கைகளால்.
கைகளில் பிசுபிசுப்பை உணர்ந்து எடுத்தவனை அதிர்ச்சியுடன் இருவரும் பார்த்தனர். "ஆனந்த் அழுகிறானா?"
விரைவில்....